May 10, 2012

போகர் ஜீவ(நிர்விகல்ப )சமாதி

 போகர் சமாதி 

போகரின் சமாதி முதலில் அது ஒரு குகையின் நுழைவாயில் என்பதை புரிந்து கொள்ளவேண்டும், ஆம் அது முருகன் கருவறைக்கு செல்லும் பாதை.மேலும்  அதன் மேல் ஒரு மரகதலிங்கமும் புவனேஸ்வரி அம்மன் சிலையும் உள்ளது. அது போகர் வைத்து வணங்கியது .போகர் தம் சீடர்களை அழைத்து தாம் நிர்விகல்ப சமாதி ஆகபோவதாக கூறினார். இது தான் நாம் கவனிக்க வேண்டியது நிர்விகல்ப சமாதி என்பது உடலை விட்டு பஞ்சபூதத்துடன் கலந்து இருப்பது. நான் குகைக்குள் சென்று நிர்விகல்ப சமாதி அடைந்த பின்பு இதன் முன்பு நான் வழிபட்டு வந்த இந்த லிங்கமும் புவனேஸ்வரி சிலையையும் இதன் முகப்பில் வைத்து பூஜை செய்து வழிபடவேண்டும் என்றார். மேலும் இந்த கோவிலை புலிப்பாணியின் பொறுப்பில்  விடுவதாகவும் அதன் பூஜை செய்யும் பெறுப்பு அவர் வம்சாவழிக்கு கொடுப்பதாகவும் கூறி உள்ளே சென்றார், தியானத்தில் அமர்ந்தார்.கோரக்கர் சந்திரரேகையில் பின் வருமாறு கூறுகிறார், குகையிலிருந்து யாருக்கும் தெரியாமல் (கோரக்கர்)என்னை போல் உருவம் எடுத்து நாகை என்கிற வடக்கு பொய்கைநல்லூருக்கு வந்தார், பின் அங்குள்ள பூங்கா வந்து  எனக்கு சமாதி ஆகும் வழியையும் கூறி என்னையும்  சமாதி அடையசெய்து பின் பெரிய கடலை தாண்டி மறுதேசம் என்கிற அண்டவெளியில்  கலந்தார் . பின் அங்கிருந்து நமது பூமிக்கு வருவதாகவும் என் சமாதியில் ஜோதிலிங்கம் தானாக தோன்றும் அதன் மூலம் மக்களுக்கு அருள் ஆசி வழங்குவோம் என்றார். மேலும் பழனி கல்வெட்டில் சமாதி அடைந்த இடம் இது என்றும் இதனுள் தான் போகர் கடைசியாக சென்றார் பின் திரும்பி வரவில்லை என்றும் கூறுகிறது. மேலும் இதை தெளிவாக கூறும் வகையில்  சமாதியை (குகையின் நுழைவுவாயிலை )  சுற்றி படங்கள் வரைந்துள்ளனர். மேலும் அந்த படங்கள் உங்கள் பார்வைக்கு. சந்திரரேகை 200 ல் 22, 23 மற்றும் 199 ம் பாடல்களில்  கோரக்கரும் இதை தான் கூறுகிறார். அவர் குகையில் இல்லை தற்போது நம்முடன் பஞ்ச பூதத்தில் கலந்துள்ளார் என்பது தெரிகிறது .மேலும் அவர் 2222 ல் வருவதாக கோரக்கரிடம் கூறி சென்றுயிருக்கிறார். இதுவும் சந்திரரேகையில் கூறப்பட்டுள்ளது. படங்கள் இதோ இவை அனைத்தும் பழனியில் உள்ளவை 
போகர் கல்வெட்டு 
புலிப்பாணியிடம் பொறுப்பை ஒப்படைத்தல்    
குகையின் உள்ளே செல்லுதல் 
யோகத்தில் அமருதல் 
                                  

போகர் சமாதி 





No comments: