May 8, 2012

சிவன்மலை,சென்னிமலை சித்தர் குகைகள்

சிவன்மலை ( சிவாக்கியர் )
                   இங்கு பதினெட்டு சித்தர்களில் ஒருவரான சிவாக்கியர் வாழ்ந்து  தவநிலை செய்த கோவில் ஆகும்.பெயர்தான் சிவன்மலை ஆனால் குடிகொண்டிருப்பவர் முருகப்பெருமான். இங்குள்ள முருகனின் சிலையை செய்தவர் சிவாக்கியர். இவர் இங்கிருந்து சென்னிமலை வரை குகை மூலம் சென்று அங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு பின் அங்குள்ள இன்னொரு குகை வழியாக பழனி சென்றார் என செப்பேடுகள் கூறுகின்றன. இந்த குகை, கோவில் உள்ளே சிவாக்கியர் தியான நிலை என்பதற்கு கீழ் உள்ளது இதை சிறியதாக அடைத்து வைத்துள்ளார்கள் 

சென்னிமலை (புண்ணாக்கு சித்தர்)


                        இங்கு பதினெட்டு சித்தர்களில் ஒருவரான புண்ணாக்கு சித்தர் (புண்ணாக்கிசர்) தன்னை நாடி வரும் பக்தருக்கு அருள் வாக்கு கூறும்போது நாக்கை பின்னுக்கு மடித்து கூறியதால் இவர் பிண்ணாக்கு சித்தர் என்று அழைக்கப்பட்டார் பின் அது மருவி புண்ணாக்கு சித்தர் என மாறியது.மேலும் இவர் நாக்கு பிளவு  பட்டுள்ளதால் பிண்ணாக்கு சித்தர் என்றும் அழைக்கப்படுகிறார்  இவர் சமாதி அடைந்தயிடத்தில் கோவில் கட்டி வழிபடுகின்றனர். மேலும் இவர் பயன்படுத்திய குகை அருகில் உள்ளது. இந்த குகை  மூலம் பழனி செல்லலாம் என செப்பேடுகள் கூறுகின்றது, மேலும் இந்தமலையில்  அமிர்தவல்லி , சுந்தரவல்லி தவம் இருந்து முருகனை திருமணம் செய்ய அருள் பெற்ற இடம் என்றும் கூறுவர். இவர்களின் சிலை ஒரே  கல்லில் செய்திருப்பது சிறப்பு. இதன் பின்புறம் தான் குகை உள்ளது, மேலும் சிறிது  தூரம் சென்றால் சரவண மாமுனிவர் குகை உள்ளது இதன் மூலம் சிவன்மலைக்கு செல்லலாம்.  இந்த சென்னிமலையில் தான்   கந்த சஷ்டி கவசம் இயற்றப்பட்டது. இதில் ஓர் இடத்தில்" சிரகிரி வேலவா சீக்கிரம் வருக" என வருவது இந்த மலை பெயர்தான்       

1 comment:

Dr. D. Lakshmi said...

Please mail me to go to Sivan Malai and Chenni Malai from coimbatore.(D.Lakshmi)
my Web Site
www.atchayapaathiram.com
mail id:
lakshmi.lifefordivine@gmail.com