August 30, 2016

மறைக்கபட்ட தமிழர் கலைகள் பாகம் – 2

யாளியும் தமிழனும் ஓர் ஆய்வு


யாளி இந்த பெயரையும் விலங்கையும் நாம் கேள்விப்படுவது கோவில்களில் தான். அங்கு தான் இதன் சிற்பம் வைக்கப்பட்டு இருக்கும்.


மகரயாளி
இந்த யாளிக்கும் தமிழர்க்கும் என்ன சம்பந்தம் என ஆராய்வோம் அதற்கு முன் யாளி பற்றி தெரிந்து கொள்வோம். யாளி என்ற விலங்கை பற்றி ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளை வைத்து கூறுகிறேன் இதற்கென தனி நூல்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை அதான் மிக பெரிய கொடுமை.
அங்கோவாட்







கஜ யாளி 
யாளி…. ஒரு அறிய வகை சங்ககால விலங்கு அந்த விலங்கு அழிந்துபோன உயிரினம். அது டைனோசர் கால விலங்கு. இது நம் லெமுரியா மற்றும் தமிழ் நாட்டில் இருந்த விலங்குதான், அதிகம் பலம் கொண்ட விலங்கு. இது சிம்மயாளி, மகர யாளி , கஜயாளி, ஞமலியாளி,  பெரு யாளி(சிறிய வகை ) பெருச்சாளி அல்ல அது போன்ற எலிவகையான யாளி என கூறுகிறார்கள்
ஒரு யானையின் தந்தம்
யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது கஜயாளியும்,சிம்மயாளியும் தான் இதை கண்டால் அனைத்துவிலங்குகளும் நடுங்கும் டைனோசர் உட்பட. இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள் ஒரு யாளி பத்து காட்டுயானைகளுக்கு சமம்,காட்டு யானை என்றால் இப்போது உள்ளவை அல்ல 10000 BC படத்தில் வருமோ அதுபோல பெரியது.

அங்கோர் வாட் யாளியும்  டைநோசர்
இப்படிபட்ட யாளியை நம் தமிழர்கள் எப்படி அடக்கினார்கள் என்று தானே கூறுகிறீர்கள் அது தான் நம் தமிழரின் நுணுக்கமான வீரம்.

யாளியை அடக்குபவன் மாவீரனாக இருக்கவேண்டும். அவன் சில மூலிகைகளின் பலம் கொண்டு, யாளியை அடக்கும் ஆற்றல் பெற்றவன் கஜகேசரி ஆவன்(வீரன் என்பவன் தனி ஆட்களை சமாளிப்பவன், மாவீரன் என்பவன் நூறு வீரர்களை ஒரே போரில் சமாளிக்கும் திறன் கொண்டவன்)

பெரு யாளி
இந்த மூலிகைகள் என்னென்ன என சித்தர்கள் பாடல்களில் தெளிவாக உள்ளது.சில மூலிகைகளை உண்டால் யாளியின் பலம் கிடைக்கும் என கொடுத்து இருப்பார்கள். அதை வைத்து யாளியை அடக்கி அதற்க்கு கடிவாளம் போடுவார்கள் பின் அதை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பார்கள்.
ஆனால் பின் வந்தவர்கள் விளக்கவுரையில் ஒரு யாளின் பலத்தோடு பெண்ணை புணரலாம் என  கொடுத்துள்ளனர். சில விளக்கம் பரிபாஷையாக உள்ளதை நாம் புரிந்து கொள்ளாமல் போனோம். இதை வேறு வகையான புரிதல் கொண்டதால் விளக்க முடியாமல் போனது

    புணர்தல் என்பதற்க்கு சந்தித்தல் என ஒரு விளக்கம் தொல்காப்பியம் கூறுகிறது          
                                                ------தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் 108)

யாளியை அடக்கிய மாவீரன் மதிப்பு மிகுந்தவனாக இருந்திருக்கிறான்,அதுவும் கஜயாளி அடக்கியவனை மிகபெரிய தலைவனாக மதிக்கபட்டுள்ளான்.  அந்த மாவீரன் பட்ட பெயராக கஜகேசரி என அழைக்கபடுவான் . எல்லாம் மூலிகை மூலம்தான் என்றாலும் அதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா.

சரி யாளி எப்படிபட்டவை யாளிகள் தெய்வீக தன்மை கொண்டவை எனவும் இசைக்கு மயங்கும் தன்மை உள்ளவை என்றும் கூறுகிறார்கள் இது சரியான ஆதாரம் இல்லை.  

கோவில்களில் முகப்புகளில் இந்த யாளியின் உருவம் இருக்க காரணம் இதை கண்டால் தைரியமான விழிப்புணர்வு கிடைக்கும் என்கிறார்கள்.இந்த யாளியின் எழும்புகளில் இருந்து உருவாக்கபட்டதே யாழ் இசை கருவி என்றும் குறிப்பிட்ட யாழ் மிகவும் அதிகபடியான ஒலியலைகளை கொண்டதாக இருந்தது எனவும் உயிரை கொன்றது எனவும் கூறுகிறார்கள்.

காலத்தால் இவை அழிந்து மரவகைகளை பயன்படுத்தி யாழ் செய்யபட்டதாக கூறுகிறார்கள்.

யானை, சிங்கம் அமைப்புள்ளதை கஜயாளி என்றும்,சிங்கம் போல் உள்ளதை சிம்மயாளி என்றும் ஆடுகளைபோல் கொம்பும் சிறிய வால் உள்ளதை மகரயாளி என்றும்,நாய்போல் நாக்கு மிக நீளமானதை ஞமலியாளி என்றும் பெருச்சாளியை போல் உள்ள சிங்கமுக உயரம் குறைவாக உள்ளதை பெருயாளி என்றும் கூறுவர்.

யாளி குறித்த மருத்துவ பாடல்கள் கீழே

நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
யாளி யென விஞ்சுவார் போகத்தில்(போர்களத்தில்)
                    -அகத்தியர்

நிரச்சொன்னர்  மெய்யாம் தகரையை ஒத்த
யாளி(ஆழி),அன்னர்(அன்னம்),புலத்து கையான் தகரை
ஒத்துகால்             
                        ----தேரையர் 

யாளி கற்பனை விலங்கு அல்ல அதற்க்கு லெமுரியா கண்டம் அகழ்வாரச்சி செய்தால் தான் தெரியும் என்பதால் வெளிநாட்டவர் டைனோசர்தான் பலம் வாய்ந்த விலங்கு என்கிறார்கள், ஆனால் அங்கோர்வாட் கோவிலில் டைனோசரை காட்டிலும் யாளியின் சிற்பம் அதிகம் உள்ளது என இங்கு சுட்டுகிறேன். டைனோசர் உருவம் சில தான் உள்ளன

டைனோசாசர் சுட்டி காட்டும் வெள்ளையர்
டைனோசர்களை பார்த்து வியக்கும் ஆங்கிலேயர்கள் அதற்க்கு மேலான யாளியையே கட்டி ஆண்டுள்ளான் என்பது, தமிழனின் வீரத்தை பறை சாற்றும் விதமாக உள்ளது. கோவில்களில் இதற்கு யாளி சிற்பத்தின் மீது தமிழன் இருப்பது சான்றாக உள்ளது.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு 

நன்றி
வாழ்க வளமுடன்


மறைக்கபட்ட தமிழர் கலைகள் பாகம் – 2

யாளியும் தமிழனும் ஓர் ஆய்வு


யாளி இந்த பெயரையும் விலங்கையும் நாம் கேள்விப்படுவது கோவில்களில் தான். அங்கு தான் இதன் சிற்பம் வைக்கப்பட்டு இருக்கும்.


மகரயாளி
இந்த யாளிக்கும் தமிழர்க்கும் என்ன சம்பந்தம் என ஆராய்வோம் அதற்கு முன் யாளி பற்றி தெரிந்து கொள்வோம். யாளி என்ற விலங்கை பற்றி ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளை வைத்து கூறுகிறேன் இதற்கென தனி நூல்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை அதான் மிக பெரிய கொடுமை.
அங்கோவாட்







கஜ யாளி 
யாளி…. ஒரு அறிய வகை சங்ககால விலங்கு அந்த விலங்கு அழிந்துபோன உயிரினம். அது டைனோசர் கால விலங்கு. இது நம் லெமுரியா மற்றும் தமிழ் நாட்டில் இருந்த விலங்குதான், அதிகம் பலம் கொண்ட விலங்கு. இது சிம்மயாளி, மகர யாளி , கஜயாளி, ஞமலியாளி,  பெரு யாளி(சிறிய வகை ) பெருச்சாளி அல்ல அது போன்ற எலிவகையான யாளி என கூறுகிறார்கள்
ஒரு யானையின் தந்தம்
யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது கஜயாளியும்,சிம்மயாளியும் தான் இதை கண்டால் அனைத்துவிலங்குகளும் நடுங்கும் டைனோசர் உட்பட. இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள் ஒரு யாளி பத்து காட்டுயானைகளுக்கு சமம்,காட்டு யானை என்றால் இப்போது உள்ளவை அல்ல 10000 BC படத்தில் வருமோ அதுபோல பெரியது.

அங்கோர் வாட் யாளியும்  டைநோசர்
இப்படிபட்ட யாளியை நம் தமிழர்கள் எப்படி அடக்கினார்கள் என்று தானே கூறுகிறீர்கள் அது தான் நம் தமிழரின் நுணுக்கமான வீரம்.

யாளியை அடக்குபவன் மாவீரனாக இருக்கவேண்டும். அவன் சில மூலிகைகளின் பலம் கொண்டு, யாளியை அடக்கும் ஆற்றல் பெற்றவன் கஜகேசரி ஆவன்(வீரன் என்பவன் தனி ஆட்களை சமாளிப்பவன், மாவீரன் என்பவன் நூறு வீரர்களை ஒரே போரில் சமாளிக்கும் திறன் கொண்டவன்)

பெரு யாளி
இந்த மூலிகைகள் என்னென்ன என சித்தர்கள் பாடல்களில் தெளிவாக உள்ளது.சில மூலிகைகளை உண்டால் யாளியின் பலம் கிடைக்கும் என கொடுத்து இருப்பார்கள். அதை வைத்து யாளியை அடக்கி அதற்க்கு கடிவாளம் போடுவார்கள் பின் அதை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பார்கள்.
ஆனால் பின் வந்தவர்கள் விளக்கவுரையில் ஒரு யாளின் பலத்தோடு பெண்ணை புணரலாம் என  கொடுத்துள்ளனர். சில விளக்கம் பரிபாஷையாக உள்ளதை நாம் புரிந்து கொள்ளாமல் போனோம். இதை வேறு வகையான புரிதல் கொண்டதால் விளக்க முடியாமல் போனது

    புணர்தல் என்பதற்க்கு சந்தித்தல் என ஒரு விளக்கம் தொல்காப்பியம் கூறுகிறது          
                                                ------தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் 108)

யாளியை அடக்கிய மாவீரன் மதிப்பு மிகுந்தவனாக இருந்திருக்கிறான்,அதுவும் கஜயாளி அடக்கியவனை மிகபெரிய தலைவனாக மதிக்கபட்டுள்ளான்.  அந்த மாவீரன் பட்ட பெயராக கஜகேசரி என அழைக்கபடுவான் . எல்லாம் மூலிகை மூலம்தான் என்றாலும் அதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா.

சரி யாளி எப்படிபட்டவை யாளிகள் தெய்வீக தன்மை கொண்டவை எனவும் இசைக்கு மயங்கும் தன்மை உள்ளவை என்றும் கூறுகிறார்கள் இது சரியான ஆதாரம் இல்லை.  

கோவில்களில் முகப்புகளில் இந்த யாளியின் உருவம் இருக்க காரணம் இதை கண்டால் தைரியமான விழிப்புணர்வு கிடைக்கும் என்கிறார்கள்.இந்த யாளியின் எழும்புகளில் இருந்து உருவாக்கபட்டதே யாழ் இசை கருவி என்றும் குறிப்பிட்ட யாழ் மிகவும் அதிகபடியான ஒலியலைகளை கொண்டதாக இருந்தது எனவும் உயிரை கொன்றது எனவும் கூறுகிறார்கள்.

காலத்தால் இவை அழிந்து மரவகைகளை பயன்படுத்தி யாழ் செய்யபட்டதாக கூறுகிறார்கள்.

யானை, சிங்கம் அமைப்புள்ளதை கஜயாளி என்றும்,சிங்கம் போல் உள்ளதை சிம்மயாளி என்றும் ஆடுகளைபோல் கொம்பும் சிறிய வால் உள்ளதை மகரயாளி என்றும்,நாய்போல் நாக்கு மிக நீளமானதை ஞமலியாளி என்றும் பெருச்சாளியை போல் உள்ள சிங்கமுக உயரம் குறைவாக உள்ளதை பெருயாளி என்றும் கூறுவர்.

யாளி குறித்த மருத்துவ பாடல்கள் கீழே

நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
யாளி யென விஞ்சுவார் போகத்தில்(போர்களத்தில்)
                    -அகத்தியர்

நிரச்சொன்னர்  மெய்யாம் தகரையை ஒத்த
யாளி(ஆழி),அன்னர்(அன்னம்),புலத்து கையான் தகரை
ஒத்துகால்             
                        ----தேரையர் 

யாளி கற்பனை விலங்கு அல்ல அதற்க்கு லெமுரியா கண்டம் அகழ்வாரச்சி செய்தால் தான் தெரியும் என்பதால் வெளிநாட்டவர் டைனோசர்தான் பலம் வாய்ந்த விலங்கு என்கிறார்கள், ஆனால் அங்கோர்வாட் கோவிலில் டைனோசரை காட்டிலும் யாளியின் சிற்பம் அதிகம் உள்ளது என இங்கு சுட்டுகிறேன். டைனோசர் உருவம் சில தான் உள்ளன

டைனோசாசர் சுட்டி காட்டும் வெள்ளையர்
டைனோசர்களை பார்த்து வியக்கும் ஆங்கிலேயர்கள் அதற்க்கு மேலான யாளியையே கட்டி ஆண்டுள்ளான் என்பது, தமிழனின் வீரத்தை பறை சாற்றும் விதமாக உள்ளது. கோவில்களில் இதற்கு யாளி சிற்பத்தின் மீது தமிழன் இருப்பது சான்றாக உள்ளது.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு 

நன்றி
வாழ்க வளமுடன்


August 21, 2016

மறைக்கப்பட்ட தமிழர்கலைகள் பாகம் - 1

யாழ் மீட்டி யானையை வீழ்த்தும் தமிழர்கள்

 யாழ் மீட்டுதல் - ஓர் ஆய்வு

யாழ் மீட்டுதல் ஒரு பெரிய கலையா? என்றால் இல்லை,ஆனால் யாழ் மீட்டி ஒரு உயிரை பறிப்பது, உடலை பொத்தல் பொத்தலாக கிழிப்பது என்றால் பெரிய கலை தானே.

சாதரணமாக யாழ் இசைக்காக உருவாக்கபட்டது தான். முதல் யாழ், வில் யாழ் என கூறுகிறார்கள்.

இங்கு யாழ் பற்றிய மறைக்கப்பட்ட விடயங்களை மட்டும் ஆராய்வோம்.

யாழ் வைத்து போர் செய்யும் உத்தி ஒன்று உள்ளது. அதாவது படை கொண்டுவருவோரை தடுத்து நிறுத்தி யாழ் மீட்டி அவர்களுடைய உடல்  நரம்புகளை வெட்டி(cutting) விடுதல்


காலட்படையை தாக்க வில்யாழ், யானைகளை மட்டும் தாக்க மகரயாழ், குதிரை மட்டும் தாக்க சகோட யாழ், செங்கோட்டியாழ், படைவீரர்களுடன் சேர்த்து தாக்க *பேரியாழ்.* இது எல்லாம் இசையிலும் பயன்பட்டது ஆனால் போரில் பயன்படுத்தும் முறை வேறு.

யாழ் மீட்டுதல் போர்முறையில் மீட்டலின் தெருட்டல்,உருட்டல் வகையில் அதிகபடியாக மீட்டுவதை குறிக்கிறது.

யாழிசை நூல் என்பது நரம்பின் மறை
     ---- தொல்,எழுத்ததிகாரம்

இங்கு நூல் என்பது யாழில் இசை மீட்டும் குறிப்பு நூல்(புத்தகம்)

இந்த யாழ் குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு தயாரித்தால் மட்டுமே இது போன்ற முறைக்கு வேலை செய்யும் என்பது குறிபிடதக்கது.


இவை அனைத்தும் இயற்கையாக உள்ள மரம் , விலங்குகளிடம் இருந்து மூல பொருள் எடுப்பது என்பது யாழிசை நூல் கூறுகிறது.

இப்படி தயாரித்த யாழை வைத்து தான் போரில் வெற்றி பெற்றனர்.

இந்த கலை நம்மிடம் கற்று சீனர்கள் போரில் பயன்படுத்தி வந்தனர்.

இதை பற்றி சீன படத்தில் இந்த கலையை காட்டி இருப்பார்கள்,அது பற்றி அந்த இயக்குனர் கூறுகிறார்.


இது குறித்து Stephen chow (இயக்குனர்)

" kung fu hustle படத்தில் pipa,zheng( யாழ் போன்ற சீன இசைகருவி) மீட்டி எதிராளியின் உயிர் நரம்புகளை அழித்துள்ளனர். இது பண்டைய சீன போர்கலையில் நாம் மறந்த கலை அதையே காட்டியுள்ளோம்." என்றார்

உண்மையில் அவர்கள் மறந்த கலை அல்ல. நாம் இழந்த போர் கலை தான் இது. இந்த pipa,zheng இசைகருவி மகரயாழ் , செங்கோட்டியாழ் வகையை சார்ந்தது.
 
சீன யாழ்

சீன யாழ்

இந்த யாழில் இருந்து தான் வீணை உருவாக்கபட்டது இது யாழ் இருக்கும்போதே உருவக்கபட்டது. இது வந்ததால் தான் யாழ் மறைந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற யாழ் இப்போது தயாரிக்க சில மூலபொருட்கள் இல்லை என ஆய்வு சொல்கிறது

யாழ் மீட்டி மீன் பிடித்தல்,இறை வழிபாடு செய்தல் என பலவகையில் யாழ்கள் பயன் தந்துள்ளது.


எது எப்படியோ இந்த *யாழ்மீட்டி போர்கலை* அழிந்தது, மறைந்தது என்பது வருந்தம். தமிழன் போர்கலை மிகவும் வலிமை என்பது இதுவும் ஒரு சான்று.

வாழ்க தமிழர்கலைகள்

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

August 2, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம்- 2

முத்தமிழ் - ஆய்வு

தமிழ் மொழி ஆய்வில் பல அறிய விடயங்கள் கிடைத்தன.

தமிழ் மொழி மூன்று வகையாக உள்ளது
அவை முறையே

இயல் தமிழ்
இசை தமிழ்
கூத்து தமிழ்(நாடக தமிழ்)

இந்த மூன்று தமிழ் அறியாமல் படிக்காமல் யாரும் சித்தராக முடியாது

இந்த மூன்று தமிழை கற்றால் மனிதனை பற்றியும் இறைவனை பற்றியும் எளிதாக அறியமுடியும்.

எல்லா சித்தர்களும் ஏன் தென்னாட்டுக்கு வந்து தமிழ் கற்றனர் என ஆராய்க

தமிழ் மொழி உயிர்மொழி அந்த உயிரை வளர்க்க தமிழ் மிகவும் பயன்பட்டது

அதாவது அறிவு நிலையாக இயல் தமிழ் அமைந்துள்ளது,உணர்ச்சி நிலையே இசை தமிழாக உள்ளது,இவ்விரு நிலையில் இருந்து இயக்க நிலையாக கூத்து(நாடக) தமிழ் உள்ளது.

அதாவது

ஞான சக்தி
இச்சா சக்தி
கிரியா சக்தி


இந்த மூன்று சக்திகளையே வாலை, அன்னையாக இருந்து நம்மை செயல்பட தூண்டுகிறாள்.

நீங்கள் ஆன்மீகத்தில் உயர்ஞான பெறவேண்டுமானால் தமிழ் மொழி அறிந்திருக்கவேண்டும்.

அதாவது மூன்று தமிழையும் நீங்கள் கற்றிருந்தால் உங்களால் பஞ்சபூதத்தை ஆளமுடியும். பிற உயிரை அழிக்கவோ ஆக்கவோ முடியும். உங்கள் உயிரை இறக்காமல் முக்தி பேறு செல்லமுடியும்.

இவை எல்லமே தமிழ் மொழியில் மறைப்பாக மிகவும் கவனமாக சொல்லப்பட்டுள்ளது.

தமிழ் மொழி அறிந்தால் நீங்கள் சாபம் கொடுத்தால் உடனே அது பலிக்கும்.

பச்சை மரத்தை எறியவைக்க முடியும்

சூரியனை தடுத்து நிறுத்த முடியும். கிரக கதிர்வீச்சை தடை செய்ய முடியும்.

அந்த காலத்தில் அரசர்கள் முனிவரின் சாபத்திற்க்கு மட்டும் அல்ல புலவர்களின் சாபத்திற்க்கும் பயம் கொண்டனர். காரணம் புலவர்கள் தமிழ்மொழி நுணுக்கமாக அறிந்துள்ளதால்.

தமிழ்மொழியில் இலக்கணம், இசையில் இந்த இரண்டில் தான் மிகுந்த சூட்சமம் உள்ளது மூன்றாவதாக உள்ள கூத்து தமிழ் அழிக்கும் வேலை செய்யகூடியது அதற்கு மேற்கண்ட இரண்டும் துணை செய்கிறது.

சங்கத்தமிழ் மூன்றும்..... தா
       ---------அவ்வையார்

முத்தமிழ் அறிந்த முருகபெருமானே
             -------நக்கீரர்

முத்தமிழே கற்று இயங்கும் மெய்ஞானிக்குச்
சத்தங்கள் எதக்கடி குதம்பாய்?
சத்தங்கள் எதுக்கடி?
      ----குதம்பை சித்தர். பா10

"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே "
           --------திருமூலர்
               --------திருமந்திரம்.

" அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் "
        ஞானவெட்டியான்
                 ----திருவள்ளுவர்

பண்னுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "

சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல்

    -அகஸ்தியர் ஞானம் 100

இப்படி எல்லா சித்தர்களும் தமிழ்மொழி கற்று உணர்ந்தனர்.

இதில் வள்ளலார் ஒரு படி மேலே சென்று

தமிழ்மொழி உச்சரிப்பு சாகாகலைக்கு முக்கிய பங்காகும் என வெளிப்படையாக கூறுகிறார்.

இப்பேர்பட்ட தமிழை இன்னும் விளக்கமாக அடுத்த பதிவில் எப்படி எல்லாம் மறைபொருள் கலையாக உள்ளது.

அதாவது மந்திர சக்தியாக எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்


தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் -1

தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம்


ஓர் சுருக்கமான எனது பதிவு

தமிழில் மொத்தம் எழுத்துக்கள் 247

உயிர் எழுத்துக்கள் 12
மெய் எழுத்துக்கள் 18
உயிர் மெய் எழுத்துக்கள் 216
ஆய்த எழுத்து 1

உயிர் எழுத்துக்கள் என்பது உயிரின் உற்பத்தி சக்தியை அதிகபடுத்தும்.

மெய் எழுத்துக்கள் என்பது மனதை அறிய கூடிய மற்றும் வலுப்படுத்தும் சக்தியாக உள்ளது.

உயிர் மெய் எழுத்துக்கள் என்பது உடலையும் மனதையும் சேர்த்து இறைவனை அறிய கூடிய செயலை காட்டும்.

ஓம் என்பதில் உள்ள அ உ ம் என்பது என்ன என்ன எழுத்துகள் உள்ளன கவனிக்க

நாம் பேசும் தமிழ் தானாக வரவில்லை மூன்று நபர்களின் கண்டுபிடிப்பால் வந்தது அதாவது
சிவன்,முருகன்,அகத்தியர் கொண்டு உருவாக்கபட்டது

சிவனால் முருகனுக்கு கொடுக்கப்பட்ட பணி தமிழ் மொழியை உருவாக்குவது

முருக பெருமான் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து உருவாக்கியுள்ளார்.

ஆனால் அதில் வரைமுறை இல்லாமல் இருந்தது அதை சரி செய்ய அப்பணி மீண்டும் அகத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அகத்தியர் அதை இலக்கணம் செய்து வெளியிட்டார்.

இப்போது தமிழ் எழுத்துக்கு வருவோம்

மானிடர் நாள் முழுதும் சுவாசிக்கும் காற்றில் மூன்றில் ஒரு பகுதி உடலின் மூலாதாரத்தை அடையாமல் வீணடிக்கப்படுகிறது. அந்த வீணடிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதி சுவாசத்தையும், வீணாக்காமல் சுவாசிப்பதே சுவாச பந்தனம் எனப்படும் யோகக் கலையாகும்.

மானிடருக்கு ஒரு நாளில் 21,600 சுவாசம் உண்டாவதாகவும் அதில் 14,400 சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும் மற்ற 7,200 சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், இந்த 7200 சுவாசம் வீணாகாமல் சுவாச பந்தனம் செய்வதன் மூலம் சுவசிப்பவருக்கு எக்காலமும் பிணி, மூப்பு , சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என சுவாசம் குறித்து கூறுகிறார் யூகிமுனி.

இப்போது உயிர்மெய்களுக்கு வருவோம் உயிர் மெய் எழுத்துகள் 216

சுவாசம் 21600, ஒர் உயிர்மெய் எழுத்தினுடைய சுவாசம் 100 மூச்சு பலனை தரகூடியது

ஆக 216×100=21600

நீங்கள் உயிர்மெய் எழுத்துகளை சொல்லும்போது 100 மூச்சு வீணாவது தடுக்கபடும்

தமிழானது பேசுவதற்கு மட்டும் உருவாக்கவில்லை நீண்ட நாள் வாழ்வதற்கு உருவாக்கபட்டவை

தமிழுக்கும் அமுது என்று பேர் இப்பாடல் முழுவதையும் ஆராய்க

அதாவது நமது தலையில் அமிர்தத்தை தருவதற்கு ஒரு எழுத்து உள்ளது அது ""ழ்"" இதை தொடர்ந்து சொன்னால் அமிர்தம் சுரக்கும்

(இது குஜராத்தி மொழியில் மட்டுமே உள்ளது ஆனால் அதுவும் இப்போது வழக்கொழிந்து விட்டது)

அதேபோல் தமிழ் எழுத்தை வைத்து பஞ்சபூதங்களை இயக்க முடியும்.

மெய் என்ற இறை மற்றும் உடம்பை அடைய, மெய் எழுத்தை ஆராய்ந்தால் இறைவனை அடைய அதில் ஒரு எழுத்து இருப்பதை அறியலாம். அதை முருக பெருமான் ஏன் கொடுத்தார் என ஆராய்க


தமிழ் எழுத்தில் கவனம் அதிகம் கொடுக்காத எழுத்து ஒன்று உள்ளது அதை தமிழரின் படைகருவிகளில் உபயோகபடுத்தியுள்ளனர்
அது ஆதியில் இ என்ற எழுத்துக்கு கொடுக்கபட்டது அது என்ன என கருத்தில் கொண்டு ஆராய்க.

குறிபிட்ட தமிழ் எழுத்துகள் கொண்டு சத்தம் எழுப்பி மனிதரின் மூளையை செயல் இழக்க செய்தனர் அது என்ன, என்ன எழுத்து என ஆராயவும்.

தமிழில் ஒரே ஒரு குறிப்பிட்ட எழுத்தை மட்டும் தொடர்ந்து சொன்னால் உயிர் பிரிந்து விடும் அதை ஆராய்க.

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை அது என்ன, என்ன எனவும், ஏன் எனவும் ஆராய்க.

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து -  னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-   ளீ,ங

இதையும் கருத்தில் கொள்க

இறைவனால் கற்று கொண்டு வந்த இரண்டு  உயிர் எழுத்து  உ + அ = (குவா)

இன்னும் எம் தமிழில் நிறைய ரகசியம் உள்ளன.

தமிழை அதிகமாக பேசி சக்தி பெற்ற மன்னன் இராவணன் அந்த பெருமானாரின் கதை ஆராய்க

அதை விடுத்து அசுரன் என கூறி அவரை ஒதுக்கிவிடாதீர்கள் அவர் அசுரர் அல்ல அந்தணர் மற்றும் தமிழன் 


நன்றி

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு