December 24, 2014

பிரம்மா ஓர் உண்மை விளக்கம்

பிரம்மா

                 பிரம்மா என்பவர் மும்மூர்த்திகளில் ஒருவர், படைப்பு தொழில் செய்யும் கர்த்தா,சரஸ்வதி கணவர் , விஷ்ணுவின் மகன் என்று பலர்
கூறுகிறார்கள் எல்லாம் சரிதான் ஆனால் விஷ்ணுவின் மகன் என்பது சற்று கவனிக்க வேண்டும் இதை சிலர் தவறாக கருதுகிறார்கள் 

பிரளயகாலத்தில் அதாவது யுக முடிவில் பிரம்மா உட்பட அனைத்து தேவர்களும் அழிக்க படுவார்கள் மீண்டும் நாரயணர் வந்து பிரம்மாவை படைப்பார் பிரம்மா மற்றவற்றை படைப்பார்.

சரி ப்ரம்மாவை எப்படி படைக்கிறார் என்றால் இறைவன் திருமால் சிறு பிள்ளையாக ஆலியிலை மீது அமர்ந்து உலகை வலம் வருகிறார் அனைத்தும் அழிந்ததை உறுதி செய்த பின்னர் விஷ்ணுவாக மாறுகிறார் ஆலியிலை ஆதிசேசனாக மாறுகிறது பின் விஷ்ணு தியானத்தின் மூலம்,  பிரம்மா உண்டாக என்று நினைத்தவுடன் பிரம்மா வருகிறார், எங்கிருந்து தொப்பூள் என்கிற நாபிகமலத்திலிருந்து, ஏன் நாபியிலிருந்து வரவேண்டும் காரணம் உண்டு
இறைவன் கொடுத்த சிலை ரங்கநாதர்

மனிதன் வடித்த சிலை

நமது எண்ணங்கள் அனைத்தும் நாபியிலிருந்ந்து தான் கிளம்புகிறது,அங்கு தான் காற்று தங்குகிறது நமது எண்ணத்திற்க்குதான் மனம் என்று சொல்லுவார்கள் அம்மனத்திற்க்கு உருவம் கிடையாது ஆனால் அது காற்றாக மாறி எண்ணமாக வெளிப்படும் அப்படி வெளிப்பட்டவர் தான் பிரம்மா

எண்ணம் என்கிற படைப்பின் மூலம் உருவானவர் தான் பிரம்மா.பிரம்மாவும் அவ்வாரே தியனித்து சிருஷ்டியை படைக்கிறார் இங்கு எண்ணம் என்பதற்க்கு ஆசை என்ற ஒரு பெயரும் உண்டு, இன்னும் சிலர் தியனத்தின் மூலம் அனைத்தையும் பெறலாம் என்பதற்க்கே விஷ்ணுவின்  தொப்பூள் மூலம் பிரம்மா வந்தார் என்று சிலை வடித்தனர் இதை கொண்டு குறைகூறும் ஒருஇனம் திருமாலை தவறாக கருதுகின்றனர்
திருச்சிராப்பள்ளி

அவர்களுக்கு ஒரு சான்று தருகிறேன்,விபிஷணன் விஷ்ணுவின் சயன கோலத்தை சிலையாக  வேண்ட,விஷ்ணுவே தந்த ஆத்ம லிங்கத்தில் பிரம்மா இல்லை என்பது திருச்சி ரங்கநாதர் திருமேனியில் காணலாம்
மற்ற சிலைகள் எல்லாம் மனிதனால் செய்யப்பட்டது
திருப்பட்டூர் பிரம்மா

மேலும் கடப்பை சச்சிதானந்தர் கூறுவதை கேளுங்கள்
புத்தகத்தில் பிரம்மா
கடப்பை யோகீஸ்வரர்

திருமாலின் கர்ப்பபையிலிருந்து எல்லாம் பிரம்மா வரவில்லை ஆண் கடவுளுக்கு கர்ப்பபை கிடையாது

பிரம்மாவை வணங்க அற்ப்புத தலங்கள் திருப்பட்டூர்,கொடுமுடி(திருபாண்டி கொடுமுடி) ஏன் இவை என்றால் இங்கு பிரம்மாவுக்கு தனிச் சன்நிதி உண்டு





December 19, 2014

சிவம் ஓர் புனித பயணம் - பாகம் 3 (ஐயப்பன் விளக்கம்)


ஐயப்பன் பிறப்பு விளக்கம்

பலர் ஐயப்பனின் வரலாற்றை கொச்சை படுத்தும் விதமாக கூறுகிறார்கள்,அதாவது சிவனுக்கும் திருமாலுக்கும் பிறந்ததாக கூறுகிறார்கள் அது தவறு , ஏன் என்றால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே குழந்தை பிறக்கும் என்பது ஊர் அறிந்த ஒன்று,  அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்கள் அது தான் நாம் இங்கு தெரிந்து கொள்ளவேண்டியது

மகிசியின் கதையை முடிக்க கைலாயத்தில் இருந்த முனிவரான சாஸ்தாவை மணிகண்டனாக பிறக்க சிவன் ஆணையிட்டார், மகிசியானவள் பிரம்மாவை வேண்டி தவம்புரிந்து தன் மரணம் சிவனின் அம்சத்தாலும் திருமாலின் அம்சத்தாலும்  பிறக்கும் மகனால் தனக்கு மரணம் வேண்டும் என்று வரம் கேட்டால் இந்த வரியை நாம் கவனிக்க வேண்டும். மகிசி ஒரு தேவகண்ணிகை அரக்கியாகும் படி சபிக்கபட்டவள்
பிச்சுமணி (பிச்சாடனார்)

பிச்சாடனர் அவதாரம்

                 
தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தினை அழிப்பதற்காக சிவன் எடுத்த கோலமாகும். 

மோகினி அவதாரம் 

மோகினி ராகுவதத்தில்



திருமால் பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதத்தினை தேவர்களுக்கு மட்டும் பிரித்து தருவதற்காகவும்,பிட்சாடனாருடன் இணைந்து தாருகா வன ரிசிகளின் ஆணவம் அழிக்கவும் சாஸ்தாவை படைக்கவும் மோகினி அவதாரம் எடுத்தார்.


ஐயப்பன் அவதாரம் 



மகிசி தேவகண்ணியாக மாறுதல்

  இந்த இரண்டு அவதாரங்களுக்கும் பிறந்ததே ஐயப்பன் ஆகும்.  இந்த இரண்டு அவதரமும், முனிவரின் ஆணவத்தை அழிக்க, மகிசியின் கதையை முடிக்க  எடுக்க பட்டதாகும். இவர்கள் இருவரும் கணவன் மனைவியர் ஆவார். மணிகண்டன் பிறந்ததும் இவ்வதாரத்தின் நேக்கம் முடிந்தது, அதுவரை இவர்கள் காட்டில் தான் வாழ்ந்தனர்.


இப்பொழுது விஷயத்திற்க்கு வருவோம் ஒரு அவதாரமாக தான், வந்து ஐயப்பனை தந்தார்களே தவிர நேரடையாக சிவன் மோகினியை புணர்ந்து ஐயப்பன் வரவில்லை


மேலும் சிவன் வேறு பிச்சாடனார் வேறு இது அவரின் அவதாரமாகும்


அவதாரம் என்பது அந்தந்த மூர்த்தில் இருந்து வெளிப்படுவதாகும்.அதாவது ஒரு நோக்கத்திற்க்காக வெளிப்படுவது,நோக்கம் முடிந்தவுடன் மீண்டும் அது அவருடைய பரபிரம்மத்தில் ஐக்கியமாகி விடும்.


எடுத்துக்காட்டாக சிவனில் இருந்து பல வடிவங்கள் 

பைரவர்,வீரபத்தரர்,முருகன்,தஷ்ணாமூர்த்தி,பிச்சாடனார்,அனுமான் இன்னும் பல


திருமால் அவதாரம் ஊர் அறிந்ததே 

மரியாதைக்குரிய கிருஷ்ணர்


பரசுராமர்

நீங்கள், இறைவன் தான் நேரடியாக அவதாரம் என்ற பெயரில் வருகிறார் என்றால், இறைவன், அதாவது விஷ்ணு அவதாரம் எடுக்கிறார், ராமனாக வருகிறார் என்றால் விஷ்ணு இருக்ககூடாது அல்லவா?


இப்பொழுது ராம அவதாரத்தில் விஷ்ணு இருக்கிறார் என்றால், வைகுண்டத்தில் யார் இருக்கிறார்,காக்கும் தொழில் செய்வது யார்,யோசித்துபாருங்கள் 


இதே அவதாரத்தில் திருமண மண்டபத்தில் பரசுராமர் வருவார்,


அதே போல் மகாபாரதத்தில் கிருஷ்ணணுக்கு சுதர்சனம் தருவார் பரசுராமர்,

மேலும் மோகினியை கிருஷ்ணர் அரவானுக்கு மணம் முடித்து தலையை பலி பெறுவார் 

இது எப்படி சாத்தியம் பரசுராமர் விஷ்ணு தானே!!!! 


இங்கு கவனிக்க வேண்டியது இருவரும் அவதாரங்கள் ( மனிதர்கள் ) அவர்கள் வந்த வேளை முடியவில்லை அதனால் ஒரு அவதாரம் மற்றவரை சந்திக்க நேரிடுகிறது ஆக இறைவன் என்கிற சிவனோ திருமாலோ நேரிடையாக வருவதில்லை அவதாரம் மூலம் தான் வருகிறார்.


அப்படி வந்து தந்ததே ஐயப்பன் என்கிற சாஸ்தா அதை விடுத்து ஹோமோ செக்ஸ் மூலம் ஐயப்பன் வந்தார் என்றும், சிவன், மோகினி மீது தீராத காமம் கொண்டு புணர்ந்தார் என்றும் விஷ்ணுவிற்க்கு மகன் பிறந்தார் என்றும் தவறாக இழிவாக கூறவேண்டாம் ஆணுக்கு கர்ப்பபையெல்லாம் கிடையாது அது கடவுளாக இருந்தாலும் சரி


மேலும் விஷ்ணுவின் தொப்புளில் பிரம்ம வருகிறாரே என்றால் அது தவறு, அதற்கு அடுத்த பதிவில் பதில் கூறுகிறேன்

தயவு செய்து இதை அனவருக்கும் பகிரவும் இது எனது குருவின் வேண்டுகோள்


ஐயப்பன் கலியுகம் முடியும்வரை இருப்பதாக வாக்கு கொடுத்துள்ளார்,அதே போல் அனுமான்,முருகன் அஷ்வத்தாமா,வியாசர்அனைவரும் தவத்தில் உள்ளனர்