May 7, 2012

கொங்கணவர் சித்தர் குகை



                                      பொன்னூதிமாமலை 

கொங்கணவர் சித்தர் குகை 

பொன்னுதிமாமலை தான்  சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலையில் உத்தண்ட வேலாயுத சுவாமி எழுந்தருளியுள்ளார். மலையின்இடைப்பகுதியில் முருகன் கோவில் உள்ளது. மலைப்பகுதியின் தொடக்கத்தில் மிகவும்அழகிய மயில் மண்டபம் உள்ளது. அடுத்து இருப்பது பாதவிநாயகர் கோவில், வழியில் வடபுறம் இடும்பன் கோயிலும், தென்புறம் அனுமந்தராயன் கோயிலும் உள்ளன. கடந்து 
மேலே சென்றால் நுழைவாயிலோடு கூடிய ஒரு மண்டபம் இருக்கிறது. அதைக் குறட்டுவாசல் என்பர். சித்தர்கள் வாழ்ந்த இம்மலைமீது விளங்கும் இறைவனை தரிசித்தவர்வாழ்வில் தரித்ததிரங்கள் நீங்கி வளம் பெறுவர் 

மலைமேல், கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த சிறிய குகை உள்ளது. சிவனைக் கண்டு வணங்கியவர் இவர்; மேற்கே உள்ள ஊதியூர் மலையில் தவம் செய்த அவர், ஊதி, ஊதி பொன் தயாரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. மட்டமான உலோகங்களுடன் பச்சிலைச்சாற்றினைச் சேர்த்து கொங்கணர் செம்பொன் செய்ததாகக் கூறப்படுகிறது. மலையின் வடபுறம், பொன் ஊதியத்திற்கு அடையாளமாக மண் குழாய்கள் பல இன்றும் கிடைக்கின்றன. கொங்கணச் சித்தர் வாழ்வுடனும் வரலாற்றுடனும் தொடர்புப்படுத்திக் கூறப்படுவதால், ஊதியூர் மலை, கொங்கணகிரி எனவும் அழைக்கப்படுகிறது.

குகையில் நான் 


இவரின் சீடர் செட்டிதம்பிரான்  கொங்கவரை  பூஜித்து அவரின் தரிசனம் கண்டு ,பின் இங்கயே ஜீவ சமாதியானார் .இந்த மலையில் பல மூலிகைகள் உள்ளன.  இதன் அருகில் வட்டமலை உள்ளது இதையும்  கொங்கணகிரி   என்று அழைக்கபடுவர். இந்த இரு மலைமீதும் வந்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.

No comments: