January 2, 2014

செல்வம் பெருக எளிய வழிகள்

செல்வம் பெருக எனது குருநாதர் அவர்கள் சில வழிகளை கூறியுள்ளார். அவற்றை என்  குருவின் அனுமதியோடு நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன். நிச்சயம் இந்த வழிகளை பின்பற்றினால் செல்வம் குறையாமல் மகிழ்ச்சியாக வாழமுடியும். மேலும் கடன் தொல்லை இல்லாமல் செலவுக்கேற்ற வரவு அமையும்.

இந்த வழிமுறைகள் எல்லாம் முறைப்படி பரிசோதித்து பார்த்துதான் பதிவிடுகிறோம், அதனால் குறையேதும் கூறி நிராகரித்து விடவேண்டாம். இதில் பத்துக்கு ஏழு பேரிடம் வெற்றி கண்டுள்ளது,அதுவும் மீதி மூன்று பேர் நம்பிக்கையில்லாமல் தவறாக செய்ததால் தான்.

வழிமுறைகள்:


மகா சொர்ணாகர்சண பைரவர்

1.காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை  தான் பார்க்கவேண்டும்

2.குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும் பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பால் பின்தான் லட்சுமி வருவாள்.

3.பின் பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது

4.சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத்தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.

லட்சுமி-குபேரர் படம், மந்திரத்துடன்

அடுத்து மிக முக்கியம்

5.இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.


ராஜ அலங்காரம் கையை கவனிக்க


ஆண்டியின் கையேந்தும் படம்























6. பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம்.அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும் இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.

7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்)படம் வைக்க வேண்டும்,இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்

8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.

9.படத்திற்க்கும் ,கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ  கட்டாயம் வைக்கவேண்டும்,மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ

10.பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்


மகா ஐஷ்வரேஸ்வரர் இது அதிக பலனை தருகிறது



11.திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்


திருவள்ளுவர் காசு

12.லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல  “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “   என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும் .


பூதம் படம் இது வைக்க கூடாது


13.வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர்,முருகர் படங்களை மாட்டவும் அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும் ,அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.

14.விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது

கூடாது

கூடாது
கூடாது










இது எதுவுமே  செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும் அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும் அப்புறம்தான் பொருள்செல்வம்.

அரங்க மகா தேசிகர்

ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!



என்று கூறினால் பாவமாது குறையும்

தயவு செய்து இதை மற்றவர்களுக்கும் தெரிய படுத்தவும்.