June 30, 2012

ஔவையாரும் திருவள்ளுவரும்




ஔவை மதுரை போகும் வழியில் ஒரு வீட்டில் உள்ள திண்ணையில் அமர்ந்து ஒய்வு எடுக்கிறார். அப்போது அந்த வீட்டுக்கு சொந்தக்கரர்  அங்கு தன் மனைவியை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார் . அதை கேட்ட அவ்வை நான் இன்று உங்கள் வீட்டில் தான் உணவு அருந்த வேண்டும், என்று கட்டாயபடுத்தி கூறுகிறார்.வீட்டுகாரரும் மிகுந்த வருத்தபட்டு வாருங்கள் அன்னையே என்று உள்ளே அழைத்து செல்கிறார் உள்ளே உள்ள அடங்க மனைவி கணவனை திட்டி தீர்த்து விட்டு அன்னைக்கு சிவந்த முகத்தோடு அன்னம் இடுகிறாள் இதை கண்ட அன்னை உன் உணவில் சினம் என்ற நஞ்சு உள்ளது இதை உண்டால் எனக்கும் அது வந்து விடும் என்கிறார். இதை   கண்ட அப்பெண் கணவனை திட்டுகிறாள்.இதை கண்ட அன்னை மனைவி மதிக்கவில்லை என்றால் உடனே துறவறம் மேற்கொள் என்கிறார்.இதை கண்ட மனைவி அதிச்சியுற்று, தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள் .
பின் அங்கிருந்து வள்ளுவர் உள்ள பகுதிக்கு செல்கிறார் அங்கு அவர் தன் கவியை மாணாக்கர்களுக்கு போதித்து கொண்டிருக்கிறார் இதை கண்ட அவ்வை,மிகவும் ஆழமான கருத்துகள் இதை தாங்கள் தமிழ் சங்கத்தில் வெளியிட்டு விட்டீர்களா ? என்று வினம்பினார்.அதற்க்கு, இதை அவர்கள் பார்க்காமலேயே நிராகரித்துவிட்டார்கள் என்றார். இது தமிழுக்கு ஏற்ப்பட்ட அவமானம் வாருங்கள் இதை நான் கேட்கிறேன், என்றார் அவ்வை. உடனே இருவரும் குறளை எடுத்து கொண்டு முத்தமிழ் சங்கத்திடம் சென்றனர். அங்கு அவ்வைக்கு குறளோடு வந்ததால் வாயிற்கதவு மூடப்பட்டது தன் கவிதிறத்தல் அதை உடைத்து எறிந்து உள்ளே சென்றனர் .உடனே பாண்டியமன்னன் அங்கு வந்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு சங்கத்தை கூட்டினான்.அங்கு குறள் பாடப்பட்டது .அங்குள்ள புலவர்கள் வெண்பாவால் இருந்தால் நான்கடி வேண்டும் இது ஈரடி வெண்பா ஏற்க முடியாது என்றனர்.உடனே சினம் கொண்டு அவ்வை ,  'சங்கபலகையைகொண்டுவாருங்கள் பொற்றாமரை குளத்தில் வைப்போம், குறள் உலகத்திற்கு வேண்டுமா? வேண்டாமா?', என்று ஈசனே முடிவு கூறட்டும் என்றார். பின் குறளை ஈசன் ஏற்று கொண்டதின் அடையாளமாக சங்கபலகையின் மீது இருந்த ஓலைசுவடிகள் தங்கசுவடிகளாக மாறின பின் அனைவரும் ஏற்று கொண்டனர். பலத்தடைகளை தாண்டி குறள் வெளிவர காரணமாக இருந்தவர் அவ்வையே         
அவ்வை எழுதிய நூல்கள் 

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை 

ஔவை குறள், விநாயகர் அகவல்
இதில் விநாயகர் அகவல் என்ற நூலில்  குண்டலினியை விழிப்படைய செய்யும் முறையை மிக அழகாக கூறியிருக்கிறார் 
           

June 27, 2012

ஔவையார்



 பகவன் என்பவனுக்கும் ஆதி என்பவளுக்கும் ஏழாவது குழந்தையாக பாணரகத்தில் பிறந்ததாகவும், அங்கே பாணரோடு செய்த உடன்படிக்கையின்படி, குழந்தையை அங்கேயே விட்டுவருமாறு பகவன் கூற, பெற்ற குழந்தையைப் பிரிய விரும்பாத ஆதி அழுததாகவும், ஆதிக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு ஔவைக் குழந்தை வெண்பா கூறியதாகவும் கூறுவர். 
பின் அவர்கள் அவ்விடம் விட்டு சென்றனர் பின் மழை பெய்து, வெள்ளம் வந்தது கூடையில் இருந்த குழந்தை ஆற்றில் சென்றது .அங்குள்ள ஒரு வணிகரால் எடுத்து வளர்க்கபட்டது. இளமை பருவம் வந்ததால் மணம் முடித்து வைக்க முடிவு செய்தனர் ஆனால் அவ்வைக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை பின் விநாயகரிடம் புலம்ப அவர் பிறப்பின் நோக்கத்தை கூறி அனைவருக்கும் தாயான வயதான தோற்றத்தை கொடுத்து தமிழ் தொண்டு செய்ய மதுரை அனுப்பிவைத்தார். பின் அவர்போகும் வழியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது 
முதலில் ஔவையார்  தகடூரை அடைந்தார். அங்கு பஞ்சம் நிலவியது, இதனால் அங்குள்ள சிற்றரசனான காரி ஆசான் என்கிற காரி மன்னன் தன்னிடம் இருந்த தானியங்களை எல்லாம் மக்களுக்காக கொடுத்துகொண்டிருந்தன் இதை பார்த்த அவ்வை இது மிகபெரிய செயலல்லவா நீ வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர். பின் இவரைதான் அதியமான் விளைச்சலில் பங்கு தராததால் கைது செய்தான். இவரை விடுதலை செய்து அந்த நாட்டில் தம்  கவிதிறத்தால் மழை பொழிய செய்தார் ஔவை.
தன் நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதால் தன் நாட்டின் ஒரு பகுதியான கஞ்சமலையில் இருந்து கருநெல்லி என்ற ஒரு நெல்லிகனி கொண்டுவரப்பட்டது .இதை சாப்பிட்டால் நீண்டநாள் வாழலாம் என்று அதை அவ்வைக்கு கொடுத்தான் அதியமான். மிக அதிசிய கனியான நெல்லியை கொடுத்ததால் நீயும் வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர்.
பின் அங்கிருந்து பறம்பு நாடு வழியாக சென்றார் அங்குதான் ஒரு அதிசயத்தை கண்டார் பாரி மன்னனும் அவன் மகள்கள் இருவரும் வழியில் உள்ள ஒரு முல்லை கொடியின் மீது இறக்கம் கொண்டு தன் தேரையே அங்கு நிறுத்தி அந்த கொடிகளை எடுத்து தன் தேர்மீது படர  விட்டனர் இதை கண்ட அன்னையின் உள்ளம் அளவற்ற மகிழ்ச்சி கொண்டது .பின் பாரியை பார்த்து  வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர்.
அது சரி கடையேழு வள்ளல்கள் யார்யார் என்று தெரியுமா? அவர்களில்  மூன்று பேர் ஔவையால் வள்ளல் என்று பெயர் சூட்டபெற்றனர் 
பேகன் 
காட்டு மயில் அகவியதை கேட்டு அது குளிருக்காக நடுங்கியது என்று தன் பொன்னாடையை எடுத்து மயிலுக்கு போர்த்தி விட்டான் பேகன். சிறு உயிர்களிடத்தில் அன்பாக  கொடுத்ததால்  வள்ளல் என்று பெயர் எடுத்தான்  
பாரி 
முல்லைக்கொடிக்கு தேர்கொடுத்தான், அதனால் செடி கொடிக்கு எல்லாம் மரியாதை செலுத்தியவன் என்ற பேரு பெற்று வள்ளல் என்ற பெயர் பெற்றான் 
காரி 
நல்ல சொற்களையும் உணவு தான்யங்களையும் வழங்கியதால் வள்ளல் என்ற பெயர் பெற்றான்    
ஆய்
நீலமணியும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலருக்கு கொடுத்தான் இதனால் இவன் இப்பெயர் பெற்றான் 
அதியமான் 
தமிழ் புலவரான ஔவைக்கு நெல்லிக்கனி (கரு நெல்லி )தந்தவன் 
நள்ளி
கர்ணனை போல(இரவலருக்கு ) வேண்டியவர்க்கெல்லாம் கேட்டதை கொடுத்தவன் நள்ளி 
ஓரி 
கூத்தாடுபவர்களுக்கும்,இரவலருக்கும் பல நாடுகளையும் ,செல்வங்களையும் பரிசாக வழங்கியவன் 
இதில் இவர்களின் கொடைத்திறம் கண்டு பொறாமை கொண்ட மூவேந்தர்கள், சூழ்ச்சி செய்து 
பாரி ,ஓரி,காரி,அதியமான் போன்ற வள்ளல்களை காலநேரம் பார்த்து ஒருவர் பின் ஒருவராக கொன்றனர்  
திருக்குறள் ஔவையின் மூலம் தான், மதுரை தமிழ் சங்கத்தில் பலத்தடைகளையும்  தாண்டி வெளியிடப்பட்டது. அதன் விளக்கம் நாளைய பதிவில் காண்போம்.


June 18, 2012

வர்மக்கலை நோக்கு வர்மம்




தனசெயன் நாடி 



வர்மக்கலை தெரிய முக்கிய கலையானஆயுதம் மூலம் தாக்கவேண்டும் என்றால் களரியும்பின் நோக்கு வர்மத்திர்க்கு   யோகாசனம், பிரணாயமம் இரண்டும் தெரியவேண்டும் 


வர்ம கலை வகைகள் 
படுவர்மம்-12
தொடுவர்மம் -96
ஆக மொத்தம் 108 ஆகும் இந்த வர்மங்களில் அடிபட்டலோ அல்லது அழுத்தம் கொடுத்தலோ அந்த பகுதி செயல் இழப்போ அல்லது வலியோ ஏற்படும் இது அமைந்துள்ள இடங்கள் 
கை, கால் -44
தலை -23
நெஞ்சு முதுகு-33
மூலம் -8
இதற்கெல்லாம் தலைவன் தனஞ்செயன் என்கிற வர்மம் 
வர்மம் சரிசெய்யும் முறை :
எந்த வர்மத்தில் அடிபட்டாலும் முதலில் கால்களை மடக்கி பத்மாசனமோ அல்லது சம்மணம் போட்டு உட்காரவைத்து தலையில் தனஞ்செயன் வர்மத்தில் மூன்றுமுறையும் முதுகில் மூன்றுமுறையும்  தட்ட வேண்டும். பின் சுக்கை வாயில் போட்டு அடிபட்டவரின் வாயில், காதில்,மூக்கு துவாரத்தில் ஊத வேண்டும் பின் அரிசி கஞ்சி சாதம் தான் மூன்று வேலை தரவேண்டும் அடிபட்டயிடத்தில் வீக்கம் அதிகமாக இருப்பின் நல்லெண்ணெய் விட்டு தடவி விடவேண்டும்.   
இந்த படு வர்மம் தொடுவர்மம் பற்றி பலபேர் கூரியுள்ள்ளனர்.
நோக்கு வர்மம் :
நோக்கு வர்மம் என்பது மூன்றுவகை படும்  
  1. தட்டு வர்மம் 
  2.சூண்டு வர்மம் 
  3.மெய் தீண்டா கால வர்மம்  

தட்டு வர்மம் 
கண்களால் பார்த்து எந்த பகுதியை செயலிழக்க வைக்கவேண்டுமோ அந்த பகுதியில்  பார்வையை செலுத்தி அழுத்தம் கொடுப்பது அல்லது  
தட்டியவுடன் அந்த நபர் மயங்கி கீழே விழுந்து விடுவார் . அவரை மேலே கூறிய முறையுடன் செய்தால் பிழைக்க வைக்கமுடியும் 
        உதாரணம் : 
          "கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படகூடாது " இதை பலபேர் கண் திருஷ்டி என்று தவறாக கூறுகிறார்கள்   
சூண்டுவர்மம் 
கண்களால் பார்த்து எந்த பகுதியை செயலிழக்க வைக்கவேண்டுமோ அந்த பகுதியில்  பார்வையை செலுத்தி சீண்டிவிடுதல் 
           உதாரணம் :
                   ஹர்ட் அட்டாக் , இது எப்படி வேலை செய்யும் என்று எளிமையாக சொன்னால் நமது கை முட்டியில் நுனி பகுதியை கையால் சீண்டி விட்டால் கரண்ட் ஷாக் அடித்தது போல் இருக்குமல்லவா அதுதான் வர்ம பகுதியில் கண்ணால் செய்வது 
மெய் தீண்டா கால வர்மம் 
            இருப்பதிலேயே இதுதான் மிக ஆபத்தான வர்மம் இந்த வர்மத்தில் இரண்டு பிரிவு உள்ளது ஒன்று மூலிகையுடன் செய்வது மற்றொன்று பிராண சக்தியின் மூலம் செய்வது. இதன் மூலம் யாரையும் எளிதில் வசியம் செய்து  , எதிராளியின் பிராணனை நிறுத்தலாம் இந்த மூலிகை மூலம் செய்வது மிக சுலபம் ஆனால் மூலிகை கிடைப்பது மிக கடினம் அந்த மூலிகை இரண்டு வகைப்படும் அது என்ன வென்று எனது குருவான மகான்  கோரக்கர் ஆசி கூர்ந்தால் உங்களுக்கு கூறுகிறேன் . ஒன்று மலைகளில் கிடைப்பது மற்றொன்று காடுகளில் கிடைப்பது .  பிராண சக்தியின் மூலம் செய்வதை 12 ஆண்டுகள் மாணவராக இருந்தால் மட்டுமே எந்த ஒரு குருவும் சொல்லித்தருவார்கள் 
         உதாரணம் :
              இந்த கலைக்கு உதாரணம் பல பேர் உள்ளனர் அதில் எனக்கு தெரிந்த சிலர் : 
வர்மக்கலை ஆசான் 
உயர்திரு ராஜேந்திரன் - மதுரை மாவட்டம் (zee tamil tv)
உயர்திரு பிரகாசம் குருக்கள் - திருவனந்தபுரம் (கேரளா )(vijay tv )
உயர்திரு டிராகன் டி ஜெயராஜ் -கோவை மாவட்டம் 
                                 மேற்கூறிய இருவர் தொலைக்காட்சியின் முலம் தெரிந்தவர்கள்

அடுத்த பதிவில் ஔவையார் பற்றி பல அறிய தகவல் காத்துகொண்டுயிருக்கிறது   

June 6, 2012

வர்மக்கலை

                                         

வர்மக்கலை ஓர் அறிமுகம் 


வர்மக்கலை பற்றி பலபேர் கூறுகிறார்கள்  நான் என்ன புதிதாக சொல்ல வேண்டும் என்று யோசிக்கும்போது இந்த உலகில் எதுவுமே புதிதில்லை பழையதை புது பெயருடன்  புகுத்துகின்றனர். அப்படி தான் நாமும் சொல்ல வேண்டும் இது கட்டாயம் அல்ல காலத்தின் நோக்கம்.  

வர்மக்கலை அப்படித்தான் பல பெயர்களில் உலவுகிறது குங்க்பூ,கராத்தே,அகிடோ,தாய்சி,சிலாத்,டிம் மாக்,கர் மகா, என பல பெயர்கள் ஆனால் அடிப்படை வர்மக்கலை தான் 

இதை முதன் முதலில் எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் இறைவனிடம் தான், ஆம் வர்மத்தை பற்றி பார்வதியிடம் சிவன் தான் முதலில் கூறினார் .பின் பார்வதி தேவி அதை நந்திதேவரிடம் கூறுகிறார், பின் அது அங்கிருந்து அகத்தியரிடம் போய் சேருகிறது. வர்மக்கலை அங்கு தான் பகுத்தறியப்பட்டு அகத்தியர் அனைவருக்கும் கூறுகிறார் அவர் சாதாரணமாக கூறவில்லை உடலைவைத்து வர்மம் உள்ள இடத்தையும் அதன் முடிச்சையும் விளக்கமாக கூறுகிறார் யாரிடம், அந்த காலத்து மெடிக்கல் ஸ்டுடண்ட் போகர்,ராமதேவர்,புலிப்பாணி,தன்வந்திரி,பதஞ்சலி,குதம்பை சித்தர்,புலத்தியர்,தேரையர்   இதில் மிகவும்வர்மத்தை அற்புதமாக கற்று தேர்ந்தவர்கள்  போகர் ,ராமதேவர் ,புலிப்பாணி,தன்வந்திரி,தேரையர்.   

இவர்கள்  கற்றதை தனக்கென ஒரு பெயர் வைத்து கொண்டார்கள் ஆனால் வர்ம புள்ளி ஒன்றுதான் . அவர்கள் தனித்தனியாக நூல்கள் இயற்றினார்கள்

அவைகளில் எனக்கு தெரிந்த  சில நூல்கள்  : 



அகத்தியர் -வர்ம சூத்திரம் ,வர்ம திறவுகோல் ,ஒடிவு முறிவு சாரி,வாகட நிதானம்  

போகர் - வர்ம சூத்திரம் (மெய் தீண்ட காலம் )

பதஞ்சலி -வர்ம களஞ்சியம் 
குதம்பை சித்தர் -வர்ம பீரங்கி 
தன்வந்திரி சித்தர் - வர்ம சஞ்சீவி (மெய் தீண்ட காலம் )
புலிப்பாணி சித்தர் -வர்ம கண்ணாடி    

வர்ம சூச்சா சூச்சமம் ,வர்ம சூடி ,வர்ம தண்டூசி,வர்ம சூடி ,வில் விசை உட்சூத்திரம் ,லாட சூத்திரம் 300 இவைகள் யார் எழுதியது என்று தெரியாது ஆனால் வர்ம ஆராய்ச்சியில் நான் தேடியபோது இரண்டுயிரண்டு பாடல் வரிகள் கிடைத்தன. இதில் எனக்கு தெரிந்து நமக்கு கைக்கு கிடைக்க கூடிய நூல்கள்
    அகத்தியர் -ஒடிவு முறிவு சாரி,போகர் - வர்ம சூத்திரம் கடைகளில் கிடைகின்றன 
இக்கலையில்மூன்று பிரிவுகள் உள்ளன அவை 
படுவர்மம் 
தொடு வர்மம் 
நோக்கு வர்மம்
இந்த நோக்குவர்மத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன  
  1. தட்டு வர்மம் 
  2.சூண்டு வர்மம் 
  3.மெய் தீண்டா கால வர்மம்  
இதை பின்வரும் பதிவுகளில் காண்போம் .

June 1, 2012

மச்ச சாஸ்திரம்

மச்ச சாஸ்திரம் 



மச்ச சாஸ்திரம் என்பது உடம்பில் உள்ள மச்சங்களை வைத்து அதற்கு தகுந்தார் போல் பலன் கூறுவது .மச்ச சாஸ்திரம் என்பது அங்க லட்சண சாஸ்திரம் என்றும் அழைக்கபடுகிறது 

வாழ வந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பதும் பெண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.

அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் . பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள்.


ஆண்களுக்கான மச்ச பலன்கள்:

புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் – தனயோகம்
வலது புருவம் – மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்
வலது கண் – நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி
மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்
உதடுகளுக்கு மேல் – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் – அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

பெண்களுக்கான மச்ச பலனகள்:

நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்
நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை – பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்
வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் – சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை

கோரக்கர்

   




மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும்? உடம்பு வளர உணவு வேண்டுமே..? பசியும் தாகமும் உடம்போடு ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ முடியும்தான்... மச்சமுனியோ, அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று முடிவு செய்து விட்டார். இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும் என்று தோன்றுவதற்குப் பின்னால் ஒரு கணக்கு உள்ளது. அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது, பிட்சையிடும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு கணக்கு உள்ளது. நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பை, கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே கருதுவார்கள். ஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே பார்ப்பார்கள். மச்சமுனி பிச்சை கேட்டு வரும்போது, ஒரு மாதரசி கூட அப்படித்தான் பார்த்தாள். அவளுக்கோ பிள்ளைப் பேறு இல்லை. அவள் ஜாதகம் அப்படி... அதனால் அவள் முகத்தில் சதா சர்வ காலமும் ஒரு துக்கம். இந்த நிலையில்தான் மச்சமுனி அவள் எதிரில் நின்றபடி பிச்சை கேட்டார். அவளும் அலுப்புடனேயே பிட்சை இட்டாள். பிட்சை இட்டால் காலில் விழுந்து வணங்க வேண்டும். வணங்கும்போது சித்த சன்யாசிகள் ஆசிர்வதிப்பார்கள். அவள் மனம் துயரத்தில் இருந்ததால், அவளுக்கு வணங்கத் தோன்றவில்லை. பேசாமல் திரும்பி நடந்தாள். ‘‘நில் தாயே..’’ _ தடுத்தார், மச்சமுனி. அவளும் திரும்பினாள். ‘‘பிட்சையிட்ட நீ வணங்க வேண்டாமா?’’ _ மச்சமுனிதான் கேட்டார். ‘‘நான் வணங்க நீர் என்ன தெய்வமா?’’ _ அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப் பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி விட்டது. ‘‘தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..’’ என்றார். ‘‘அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ?’’_அவளிடம் இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது. உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத் தந்தார் மச்சமுனி. ‘‘இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு உண்டாகும்...’’ ‘‘இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்?’’ ‘‘சாம்பல் தானம்மா... இருந்தாலும் ‘இதை நீ உண்டால் பிள்ளைபேறு பெற்றிடுவாய்.. ஒருநாள், நான் அந்த பாலகனைக் காண நிச்சயம் திரும்பவும் வருவேன்’’ என்று கூறியபடியே பிட்சைப் பொருளுடன் திரும்பி நடந்தார். பார்த்துக் கொண்டேயிருந்தாள், பக்கத்து வீட்டுக்காரி, ஓடி வந்தாள். ‘‘கையில் என்ன?’’ கேட்டாள். ‘‘விபூதி..’’ கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள் அந்தப் பெண். ‘‘இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக் கூடும். திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும். இதை வீசி எறி..’’ _அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில் எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப் போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள். அவள் விதி அந்த விபூதியின் வழியை மாற்றி விட்டது. கிட்டுவதே கிட்டும், ஒட்டுவதே ஒட்டும் என்று ஆன்றோர்களும் காரணமில்லாமலா கூறிச் சென்றனர்.

 சில காலம் சென்றது. மச்சமுனி, முன் சொன்னது போல திரும்பி வந்தார். அந்தப் பெண்ணிடம், ‘‘விபூதியால் பாலகன் பிறந்தானா, எங்கே அவன்?’’ என்று கேட்க, அவளிடம் தடுமாற்றம். திக்கினாள், திணறினாள். ‘‘உங்களை மாயாவியாக நான் எண்ணி விட்டதால், கோவகத்து அடுப்பில் அந்த விபூதியை வீசி விட்டேன். அதுவும் சாம்பலோடு சாம்பலாகி விட்டது..’’ என்றாள். உடனே அந்த அடுப்பின் முன் சென்று நின்றவர் மனம் வருந்தினார். ‘‘தாங்கள் கடவுள் என்றால், அந்த அடுப்புச் சாம்பலில் இருந்து கூட ஒரு உயிரை உருவாக்க இயலுமே’’_என்று சந்தேகத்தையே முன் நிறுத்தினாள். மச்சமுனி அதைக்கேட்டு சினமுற்றார். சித்தன் வாக்கு பொய்க்கக் கூடாது. எந்த விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை பிறக்கும். உன் கருப்பைக்குள் வளரத்தான் உன் கர்மம் இடம் தரவில்லை. ஆனால், கோசாலையாகிய இந்த கோவகம் அதற்கு இடமளித்துவிட்டது. நான் சிவசித்தன் என்பது சத்யமானால், இந்த கோவகம் ஒரு கோவகனைத்தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல, கோரகனும் கூட. கோவாகிய பசுவுக்கு உள்ள இரக்கம் இவனிடமும் இருக்கப் போவது சத்யம். அதனால், இவன் கோ இரக்கனும்கூட. முக்கண்ணன் அருளால் நான் மச்சத்தில் இருந்து உதித்து மச்சமுனியானது போல, என்னுள்ளில் இருக்கும் அந்த முக்கண்ணனே மூன்று நாமங்களை இவனுக்குப் பிறக்கும் முன்பே அளித்துவிட்டான். அந்த நாமங்களைக் கூறி அழைக்கிறேன்... கோவகனே... கோரகனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா...’’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்திட, கோரக்கரும் அந்த சாம்பலுக்குள் இருந்து ஒரு பாலகனாய் வெளிப்பட்டார். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள், ஒரு கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த ஊர், வடபொய்கை நல்லூர்