September 28, 2016

தமிழ் மொழி ஒரு தந்திரா மொழி பாகம் – 14

தமிழும் சமஸ்கிருதமும் ஆய்வு – 3



இன்றைய பதிவில் நாம் காண இருப்பது சமஸ்கிருதத்தில் ஒலி அமைப்புகள் மற்றும் மந்திர சக்திகள்.அதாவது உலகம் இயங்குவது சப்தத்தால் என நாம் அறிந்த ஒன்று அந்த சப்தமான பல அதிர்வுகளால் இயங்குகிறது.

நம் உடல் மற்றும் இன்றி காணும் அனைத்தும் அணுக்களால் ஆனது. இந்த அணுக்கள் ஒவ்வொன்றும் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.இந்த அதிர்வுகளை நாம் உணர்வதில்லை.காரணம் அந்த அலைவரிசையில் நாம் இருப்பது இல்லை.

சமஸ்கிருத உச்சரிப்பு மொழி அதன் அதிர்வுகள் மிகவும் சக்திவாய்ந்தவை ஆனால் திரும்ப திரும்ப எழுப்பவேண்டிய ஒன்று அதன் எழுத்துகள் மற்றும் உச்சரிப்பு கவனமாக கையாள வேண்டும்.

பிரபஞ்சத்தில் இதன் ஒலியலைகள் தாக்கம் அந்த காலத்தில் அதிகம் எழுப்பட்டு இந்த ஒலிகள் குறிபிட்ட அலைவரிசையில் பரப்பி கண்டுபிடித்தனர். அதே அலைவரிசையில் சொன்னால் வான் மண்டலம் சென்று அதற்க்கான பலனை தரும்.

சமஸ்கிருதம் வேதமந்திரங்களுக்கு பயன்பட்டதன் காரணம் அதன் ஒலியமைப்புகளும், அதன் அர்த்தம் மறைந்திருக்கும் விதமும் தான் காரணம்.சமஸ்கிருத ஒலியலைகள் மிகவும் நுணுக்கமானவை இந்த ஒலியலைகள் பெரும்பாலும் பிறபொருள் மீது பிராண சக்தியை  செலுத்தவும்,தன் மீது பிராண சக்தியை பெறவும் பயன்படுத்தபட்டது.

இந்த மொழி ஒலியலைகள் மிகவும் குறுக்கலைகளை கொண்டது.இது பிராண மண்டலத்தில் சென்று திரும்ப நேரம் எடுக்கும்.ஆதலால் திரும்ப திரும்ப இந்த அலைகளை எழுப்பவேண்டியதாக உள்ளது.இப்படி செய்யும் போது உடல் அணுக்களில் மாற்றம் ஏற்படும் உடல் உஷ்ணம் ஆகும்.இதை சரிசெய்ய கிருதம் என்கிற நெய்வகைகளை அதிகம் உணவில் சேர்க்கவேண்டியதாக உள்ளது.இதனால் இதன் பாதிப்பு குறைக்கபடும்.

நாம் ஏற்கனவே பார்த்தது தான் பிராணணை வெளியிட நெடில் எழுத்துகள் அதிகம் பயன்படும்.இதன் மூலம் அதிகம் பிராணன் வெளியேறினாலும, அதை காட்டிலும் அதிகம் உள்ளே வரும் ஆனால் அதற்க்கான பீஜங்கள் அறிய வேண்டும்.

நீங்கள் ஒலியை எழுப்பும் போது குறிப்பிட்ட அலைவரிசையில் பயணபடுவீர்கள் அந்த அலைவரிசையின் பண்புகள் அனைத்தும் நீங்கள் அறிவீர்கள். அதற்க்கு அதிர்வுகள் பற்றி சரியான புரிதல் இருந்தால் தான் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் அதிர்வுகளை உணரமுடியும்.

இந்த உலகமனைத்தும் அணுக்கலானவை அவை எப்போதும் அதிர்ந்து கொண்டே இருக்கும்.இது அறிவியல் கூறும் உண்மை.இதை நாம் எப்படி அறிவது அதானே, நீங்கள் எங்கு உள்ளீர்கள் என பார்த்தால் சுத்திகொண்டே உள்ள பூமியில் அப்படியானால் நீங்களும் அதனோடு சேர்ந்து சுத்திகொண்டே இருக்கிறீர்கள்.

இங்கு நிற்க!

நீங்கள் ஏன் உணவு சாப்பிடுகிறீர்கள் என தெரியுமா? பசிக்காக என்றால் அது நேரடியான பதில்.மறைமுகமான பதில் என்னவென்றால் பூமி சுத்துகிறது நீங்களும் சுத்துகிறீர்கள் அப்படியானால் சுத்துகின்ற ஒரு பொருள், எதன் மீது பட்டாலும், அதன் அணுஅடுக்கு குலையும் அதாவது தேய்மானம் ஏற்படும்.

எந்த பொருள் குறிப்பிட்ட வேகத்தில் தேய்க்கபடுமோ அந்த பொருள் தேய்மானம் ஆகும்

உங்கள் உடலில் இருந்து அணுசிதறல் அனுதினமும் நடைபெறுவதால் அதனை சரி செய்ய பிராணன் உள்ள, உணவினை எடுத்து உள்ளே கொடுக்கிறீர்கள் அதனால் அதன் அடுக்கு திரும்பவும் அணுகட்டமைப்பு நடக்கிறது. இதன் மூலம் பிராண சக்தி பலம் கிடைக்கிறது.பிராணன் பலம் என்றால் உடலும் பலம் என நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

உதாரணம்: நீங்கள்(சுழலும் இறக்கை),பூமி(மோட்டார்),வான்மண்டலம்(அழுத்தம் அல்லது விசை)
நீங்கள் பூமியோடு இணைக்கபட்டுள்ளதால் பூமி சுற்றும் இடம் வானமண்டலம்,அங்கு தள்ளும் ஆற்றல் ஈர்க்கும் ஆற்றல் உள்ளதால் அந்த அழுத்த்தில், பூமி(மோட்டார்) சுற்றுவதால், இதனோடு நீங்களும்(இறக்கையும்) சுற்றுவதால் அணுசிதறல் ஏற்படுகிறது. பூமிக்கு சூரியனிடம் இருந்து பிராண சக்திவருவதால் அதன் அமைப்பு சரியாக உள்ளது. ஆனால் நமக்கு உணவின் மூலம் மட்டுமே இயற்க்கையாக கிடைக்கும் படி உள்ளது.

இதை வேறு விதமாக பெறவேண்டுமானால் யோகசாதனைகள் மூலம் பெறலாம்.

இப்போது சமஸ்கிருத மந்திரம் வருவோம்.இப்படி உள்ள பிராண சக்தி உள்ளே பெறவும் வெளியே போகவும் மொழியின் ஒலியலைகள் பயன்பட்டன. இதில் 48 ஒலியன்கள் முக்கியமாக உள்ளன.இந்த ஒலியன்களில் ஹ என்ற எழுத்து அதிகம் பயன்படுத்தபடுகிறது.

காயத்திரி மந்திரம் சொன்னால் பிராணன் அதிகம் கிடைக்கும். இந்த காயத்திரி மந்திர அதிர்வுகளை நீங்கள் உணர காலை பிரம்ம்முகூர்த்த்தில் கூறினால் அதன் அதிர்வுகளை உங்களால் காண முடியும். மந்திரம் சொல்லும்போது நீங்கள் இயற்க்கையாக எழும் அதிர்வுகளில் பயணபடுவீர் அந்த நேரம் சுற்றுபுறம் அனைத்தும் அமைதியாக இருந்து நீங்கள் மந்திர அதிர்வோடு பயணம் செய்வீர் அப்போது இந்த அதிர்வுகளை நிச்சம் உணர முடியும்.

இந்த நேரத்தில் பிராண மண்டல தொடர்பு எளிதாக கிடைப்பதால் அதன் தன்மை உங்களுக்கு புரியும்.

உங்கள் உடல்மேல் ஒரு அழுத்தமான ஒரு விசை போர்வையாக உள்ளதை காண்பீர்கள் சாதனை தொடர்ந்து செய்யும்போது உணரமுடியும்.

அதிர்வுகளை உணர்ந்து பழகிவிட்டால் சரியான அலைவரிசையை உங்களால் காண முடியும்.

மந்திர ஒலியலைகள் என்பது குறிப்பிட்ட அலைவரிசையில் பிராண மண்டலத்தில்தொடர்பு கொள்வது,அதன் ஆற்றல்களை தொடர்புகொள்வது.
காயத்திரி மந்திரம் தினமும் சொல்வதால் அதிர்வுகளை நீங்கள் கிரகிக்கும் ஆற்றல் எளிதாக கிடைக்கும்.இதனால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

இந்த பிராண மந்திர எழுத்துகளில் 24 எழுத்துகளில், குறைந்தது ஆறு எழுத்துமட்டுமே நெடில்கள் உள்ளாதல் அதிகமாக பிராணனை ஈர்த்து உங்கள் பிராண உடலில் கலந்து பிராணமயகோசத்தை வளிமையடைய செய்கிறது. மற்ற மந்திரங்கள் பிராண பிரிதஷ்டை அனுப்ப பயனபடுகிறது.

தமிழ் மந்திரத்திற்க்கும் சமஸ்கிருத்த்திற்க்கும் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் தமிழ் மந்திரம் திரும்பதிரும்ப ஒலி எழுப்பதேவையில்லை அதற்கு ஒரு கூறு உள்ளது. அதனால் நீங்கள் சமஸ்கிருதமந்திரம் 100000தடவை செபிக்க வேண்டும் அப்பதான் நீங்கள் அந்த அலைவரிசையில் பயணபடுவீர் அடுத்த பதிவில் தமிழை காண்போம்.

உங்கள் சித்தர் அடிமை

ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

September 15, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் -13

தமிழும் சமஸ்கிருதமும் ஓர் ஆய்வு – 2

சமஸ்கிருதம் யோக சாதனைக்கு கடினமான மொழி என்று கூறுவதை நாம் ஏற்றுகொண்டாலும் சமஸ்கிருதத்தில் உச்சரிப்பு மிக கவனமாக கையாண்டால் இந்த மொழியையும் சாதனைக்கு உட்படுத்தலாம்.




சமஸ்கிருத மொழி ஆரிய மொழி அல்ல என்று நிறைய சான்றுகள் உள்ளன. வடக்கே இருந்தவர்கள் அதிகம் இது பேசபட்டதால், பல இடங்களில் இது பரவி ஆரிய இனத்தவர் என சுட்டும் நபர்கள் மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் வந்ததாக ஆன்றோர் பெருமக்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் வருகைக்கு முன்பே சமஸ்கிருதம் தமிழர்கள் பேசியதாக கூறபடுகிறது.

ஆரியன் என்றால் சிவன் , தீப்பிளம், ஒப்பில்லாதவன் என்றும் நிறைய பொருள் கூறுகிறார்கள்.ஆரியன் என்ற வார்த்தை எங்குள்ளது என்றால் நிறைய இடம் காட்டமுடிகிறது

உதாரணம்

சூரியன் சந்நிதியிற் சுடு மாற்போல்
ஆரியன் தோற்ற முன் அற்ற மலங்களே
               
                  ----திருமந்திரம் முதல் தந்திரம் உபதேசம் பாடல்-5

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

           ----திருவாசகம் சிவபுராணம்

சூரிய காந்தக் கல்லினிடத்தே செய்ய
சுடர் தோன்றியிடச் சோதிதோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான் வந்தருளால் தோன்ற

                    -----சிவஞான சித்தியார்சாதனவியல்

ஆரியர் வழுத்திய வருணிலையனாதி காரியம்
விளக்குமோர் காரண விளக்கே

                  ------- அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடல்-1510

இப்படி அனைத்து இடங்களிலும் ஆரியன்,ஆரியம் என்ற வார்த்தை காணலாம்.
சமஸ்கிருதம் பற்றி ஆன்றோர்கள் கருத்து கீழே வருகிறது

பாரதிய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்க்ருத மொழியை இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதை நான் உணர்கிறேன்.
                                                                                      காமராஜர்.
 வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி

          -----தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை  .

வடமொழியும் நமது நாட்டுமொழி, தென்மொழியும் நமது மொழி என்பது என் கருத்து’                              --- திரு.வி.க.

யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் ஒன்றும் இல்லை என்கிறார் பாரதியார். (பாரதியார் பலமொழி கற்றவர் என நமக்கு தெரியும்)

இப்படி சமஸ்கிருதமும் தமிழும் இருந்த பூமியில், சமஸ்கிருதம் அழிந்ததற்க்கு காரணம் வெள்ளையர்கள்.ஏனெனில் ஆங்கிலம் உருவானது சமஸ்கிருதத்தில் இருந்து தான். அதனால் அதன் மூலமொழியான சமஸ்கிருதம் அழிய தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்க்கும் எது சிறந்தது என சண்டை  மூட்டபட்ட்து. அண்ணனை வைத்து அவன் தம்பியை கொன்றது போல் தமிழை வைத்து அதன் இருப்பிடத்தை அழித்தனர்.அதனால் அந்த மொழி அழிவுப்பாதையில் உள்ள மொழியாகும்.(இது பெரிய பதிவு சுருக்க பட்டுள்ளது)

இப்போது சமஸ்கிருதம் பேசும் இடம் இரண்டே இரண்டு கிராமம் தான்.ஒன்று ஒரிசா மாநிலத்தில் கந்தர்புரா மாவட்டம் சியாம்சுந்தர் பஞ்சாயத்துக்குட்பட்ட சசானா கிராமம்.மற்றொன்று கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் துங்கா நதிக்கரையில் உள்ளது மாத்தூர் கிராமம். இந்தியாவில் இரண்டு கிராமங்களில்தான் இன்று வரை சமஸ்கிருதம் பேச்சுமொழியாக உள்ளது. அதில் மாத்தூர் கிராமம் மிக முக்கியமானது.மொழியை அழியவிடமாட்டோம் என கொள்கையோடு இருக்கிறார்கள் கிராமம் என்பதால் இன்னும் உள்ளது.


நன்றாக நினைவில் கொள்ளவும் ஒரு இனம் அழிந்தால் அந்த இனத்தின் கலாச்சாரமும்,மொழியும் தானாக அழியும். நாம் இப்போது தமிழ் பேசுவது சரியான உச்சரிப்பு இல்லை என அனைவரும் அறிந்த ஒன்று. உருபடியாக பேசியது யார் என்றால் இலங்கை தமிழ் மக்கள் மட்டுமே, ஏன் 11 நாடுகள் உதவியின் மூலம் இலங்கை தமிழர்கள் கொல்லபட்டனர்,யாழ்பாண நூலகம் ஏன் அழிக்கபட்டது என ஆராய்ந்தால் ஒன்று மட்டுமே விளங்கும்.அதை சிந்திக்க!!!

நாங்கள்(போராளிகள்) எங்களுக்காக போராடவில்லை, எங்கள் இனத்திற்க்காக தான் போராடுகிறோம்.எங்கள் இனத்தின் ஒவ்வொரு நபருக்காகவும் போராடுகிறோம்”.   இந்த வரி  தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களுடையது.இதற்க்குள் என்ன என்ன உள்ளது என்று உங்களுக்கு புரியும் என நினைகிறேன்.


உலக செம்மொழிகளில் முதலில் இருப்பது தமிழ் என்றால் அடுத்து இருப்பது சமஸ்கிருதம் அதற்கடுத்து இருப்பது சீன மொழி ஆகும்.ஒரு மொழி செம்மொழி என அறிவிக்க 11 தகுதிகள் அந்த மொழிக்கு இருக்க வேண்டும்.ஆனால் குறைந்தது 7 தகுதி இருந்தால் அது செம்மொழி என ஏற்றுகொள்வர்.

தமிழ் மொழி முழுமையாக 11 தகுதிகளை கொண்டது அதற்கடுத்து இருப்பது சீன மொழி தான் 10 தகுதிகளை உடையது.சமஸ்கிருதம் 7 தகுதிதான் ஆனால் அது பற்றி கவலை இல்லை அது அழிக்கபட்டுவிட்டது. அப்படியானால் பார்வையெல்லாம் எதன் மீது இருக்கும்?சிந்திக்க

சீன மொழி செம்மொழியாக அறிவிக்கபட்ட ஆண்டு 1948ல், ஆனால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கபட்ட ஆண்டு 2004 . பலபேர் திரு.கருணாநிதி அய்யா தான் செம்மொழி பட்டம் வாங்கி தந்தார் என நினைகிறார்கள் உண்மை எது தெரியுமா?

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து , இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த விடயத்தை ……………..

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் சேர்த்து நடத்தப்பட்டது. (என்பதால் கருணாநிதி தான் அறிவிப்பு வாங்கினார் என நாம் நினைகிறோம்.)
                        ------- இந்த அரசியல் தகவல்கள் விக்கிபீடியா மூலம் எடுத்தது

அடுத்த பதிவில் தமிழ் மொழி, சமஸ்கிருத மொழி உபயோகம் மற்றும் மந்திரம் அவற்றின் சக்தி மற்றும் அதன் தன்மையை ஆராய்வோம்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு
நன்றி

வாழ்க வளமுடன்



September 12, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் -12

தமிழும் சமஸ்கிருதமும் ஓர் ஆய்வு – 1


ஊக்கம் அளித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி மேலும் பல ஆன்றோர்கள் வாழ்த்து தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி.

இன்றைய பதிவில் நாம் காண்பது தமிழுக்கும் சமஸ்கிருதம் என்ன வேறுபாடு மற்றும் சமஸ்கிருதம் பற்றிய தகவல்கள், மேலும் அதன் அவசியம் மற்றும் சமஸ்கிருதத்தை காட்டிலும் தமிழ் மொழியில் உள்ள ஆற்றல் என்ன என்பது பற்றி ஆதார பாடல்கள் ஆங்காங்கே வரும் ஆதலால் பதிவு நீளமாக இருக்கும் நிதானமாக படித்து தமிழ்மொழியின் சக்தியை புரிந்துகொள்ளுங்கள்.

நண்பர்களே சில பாடல்கள் எண் கொடுக்கபடும் பதிவின் நீளம் கருதி!
முதலில் தோன்றிய மொழி தமிழ் இது அனைவரும் அறிந்ததே அடுத்து தோன்றிய மொழி எது என்றால் சமஸ்கிருதம் தான். சமஸ்கிருதம் தமிழ்மொழியில் இருந்து சிவன் உருவாக்கியதாக சொல்கிறார்கள் ஆனால் அதுவும் முருகனால் உருவாக்கபட்ட்து என சில குறிப்புகள் மட்டும் உள்ளன. சரி ஆய்வின் உள்ளே செல்வோம்.

சமஸ்கிருதம் தமிழின் சகோதர மொழி என்றும் அது மந்திர பூட்டுக்களுக்காக உருவாக்கபட்டமொழி என்றும் கூறுகிறார்கள்.அதனால் மந்திர ஒலியலைகளை எழுப்ப முடியும் ஆனால் ஞான விளக்கங்களை சரியாக எடுத்துகாட்டமுடியாது என்கிறார்கள்.சமஸ்கிருதத்தால் கட்டியதை அவிழ்க்க தமிழ்மொழி ஒன்றால் தான் முடியும் என்கிறார்கள்.

வசிஷ்டமுனிவர் தமிழ்மொழி கற்றார் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன மேலும் ராமனுக்கு தமிழ்மொழியில் தான் ஞானத்தை வழங்கினார் என்றும் உள்ளன.தமிழ்மொழி ஞானத்தின் பிறப்பிடம் என்று நிறைய குறிப்புகள் வருகிறது.

எல்லா அறிஞர்களும் இந்த இரண்டு மொழியிலும் புலமை கொண்டு உள்ளதை அனேக இடங்கள் வெளிப்படுத்துகிறது.

பாசையென்ன சமஸ்கிருத வடமாம்பாசை
பரிச்சுழியைக் காட்டிடுமே முத்தியீமா
                                -----காகபுஜண்டார் பெருநூல் – 436

விரும்பாற் செய்தீரே நூலைத் தொட்டு
மேலானோ ரெதினாலே கிரந்தத்தாலோ
              -----காகபுஜண்டார் பெருநூல் – 439

இதை தொடர்ந்து

கிரந்தமென்ன அகத்தியன்சொற் பாசைதானே
                  -----காகபுஜண்டார் பெருநூல் – 440

இங்கு நிற்க  அதாவது கிரந்தம் வடமொழிக்கு கிரந்தம் என பெயர் உள்ளது அனைவரும் அறிவர் ஆதன் விளக்கம் யாதெனில் முடிச்சுவைக்கபட்டுள்ளது என்று அர்த்தம் அதாவது யோகத்தில் முக்கிரந்தி உள்ளது இந்த மூன்று கிரந்தியும் சமஸ்கிருத்த்தில் முடிச்சாக உள்ளது. அதை அகத்தியர் சொன்னார் அந்த யோகநூலையும் குறிப்பிடுகிறார். பின்னாலில் அந்த நூல் பூட்டை நீக்கி தமிழில் செய்ததாக அகத்தியரே கூறுகிறார் 
அதை கீழே காணவும்

திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்து
பரஞ்சேர்ந்த பூரணமாம் அறிவில் ஏறி
பாடினேன் செளமிய சாகரத்தை மைந்தா
               -----செளமிய சாகரம்  பாடல் – 7

தேனான வட மொழியை தமிழ்தான் செய்த
திரமான கருவிபரம் நன்றாய்ச் சொன்னீர்
                           ----செளமிய சாகரம்  பாடல் – 8

(இந்த பாடல் முருகன் கூறியதாக சொல்கிறார் முழு பாடல்கள் பதிவு செய்தால் பதிவு நீளும் என்பதால் பாடல் எண் கொடுத்துள்ளேன்)

(வடமொழி தேன் என்றால் தமிழ் மொழி அமிழ்தம் என்பார் ஒரு இடத்தில் முருகபெருமான்)

வடமாம் பாஷை என்றால் வடம் என்றால் தேர்பிடித்து இழுப்பார்கள் அல்லவா அந்த கயிறுக்குபேர் தான் வடம் என்பார்கள். அந்த கயிறு மிகவும் பலபிரிவுகளை பின்னி முறுக்கி உண்டாக்கிய பலம்வாய்ந்த சுலபமாக பிரிக்க முடியாத கயிற்றை குறிக்கும். அது போல நேரடியாக சொல்லாமல் பல முடிச்சுகளை கட்டி சொல்லும் பாசை ஆகும் என்கிறார் காகபுஜண்டர்

துய்ய தமிழ்ப்பண்டிதனாம் கவிவானாம்
             போகர் 7000ல் பாடல்-5835

போக முனிவர் வசிஷ்டர் தமிழ் பண்டிதர் என கூறுகிறார் கவனிக்க

நவிலுகிறேன் ரகுராமா நன்றாய்ப் பாரு
   வசிஷ்டர் வைத்திய சூத்திரம் – 206ல் முதல் காப்பு பாடல்

இந்நூல் தமிழ் நூல் இதுபோல பல தமிழ்நூல்கள் பல வசிஷ்டர் எழுதியுள்ளார்.

தமிழ் அந்த காலத்தில் அதிகம் அதை தவறாக உபயோகபடுத்தியதால் தான். சமஸ்கிருதம் உருவக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் தான் வேதத்தை சமஸ்கிருதத்தில் கூறினார்கள். அது வாய்மொழியாக தான் இருந்தது பின் தான் சமஸ்கிருதம் எழுத்துக்கு கொண்டுவரப்பட்டது.

பேசியோ,பாடியோ ஒருவரை கொல்லமுடியும் என்றால் அது தமிழில் தான் முழு வல்லமை உள்ளது. இன்னும் ஆதரத்துடன் சமஸ்கிருதம் தமிழ் உள்ள வேறுபாடு, சமஸ்கிருத நன்மைகள் மற்றும் தமிழில் உள்ள ரகசியங்கள் மற்றும் ஏன் மந்திரங்கள் தமிழில் கூறவில்லை என அறிவியலோடு ஆராய்வோம்.

உங்கள் சித்தர் அடிமை

ரா.சங்கர்
ஈரோடு

நன்றி


வாழ்க வளமுடன்



September 6, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 11

பிற உயிரினங்களும் தமிழ் மொழியும் பகுதி -2

 (கருத்து புரிய திரும்ப திரும்ப படிக்கவும்)

இப்படி அனைத்து உயிரினங்களுடனும் பேசும் மொழியே தமிழ் மொழியாகும். சில இடங்களில் தமிழ் சொற்கள் முழுமையாக வராது அதனுடைய ஒலியன்கள்(phonetic)மட்டும் வரும் அதை பல உயிரினங்கள் உபயோகபடுத்துகின்றன.


சங்க கால இலக்கியத்தில் மரத்தை தோழியாக நினைத்து மற்றும் தங்கையாக நினைத்து அதனுடன் நல்உறவை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது மரத்தின் உணர்வுகளை அப்படியே புரிந்துகொள்ளும் தன்மை இருந்து இருக்கிறது.


அதேபோல் குறுந்தொகை இலக்கியத்தில் சிவபெருமானின், கவிதை ஒன்று வரும். அது தருமிக்கு பொற்கிளி கொடுக்கவும், நக்கீரருடன் வாதம் செய்யும் இடம் . அந்த கவிதையில் வண்டுடன் பேசுவதாக அமையும் அதாவது தும்பி இனத்தை சேர்ந்த வண்டே நீ கூறு என்கிறார் சிவபெருமான் வண்டு பேசும் என குறிப்பிடுகிறார்(ஆதாரம்: குறுந்தொகை பாடல் எண் -2)


அதே போல் திருதக்கதேவர் எழுதிய காப்பியமான சீவகசிந்தாமணியில் சீவகன் பிற உயிரினங்கள் பேச்சுமொழியை அறிந்திருந்தான் என ஆசிரியர் கூறுகிறார் உதாரணம்: எறும்பு,வண்டு(ஆதாரம்:சீவகசிந்தாமணி பாடல் எண்-892-893,1331)

பாண்டவர்களில் நகுலன் விலங்குகள் பேச்சு மொழி (பரி பாஷையை)அறிந்திருந்தான் என கதை வரும். மற்ற உயிரனங்களை காட்டிலும் குதிரையுடன் பேசும் மொழியில் வல்லவன் என வியாசர் கூறுகிறார்(ஆதாரம் மகாபாரதம்--விராட பர்வம்)


இங்கு கவனிக்க அது என்ன குதிரை பேச்சு அதுதான் அய்யா, பரி(குதிரை)….பாஷை(பேச்சு) அதை சொல்லவே இந்த பதிவு.

 இது மறைக்கபட்ட தமிழ்ர் கலைகளில் ஒன்று.

இந்த கலையில் வல்லவர்கள் பாண்டியர்கள் தான், ஆரம்பத்தில் இது அனைத்து இடங்களிலும் இருந்தது ஆனால் பின்னால் மறைந்துவிட்டது.

இதை சுருக்கமாக தெரிந்துகொள்வோம். பரிபாஷை இரண்டு வகைபடும். ஒன்று 1.ஒலியலைகள் மூலம் கொடுப்பது,இன்னொன்று 2.கண் பார்வையால் பேசுவது அல்லது கொடுப்பது.

குதிரைக்கும்,நாய்க்கும் இந்த இரண்டு பேச்சும் இப்பவும் தெரியும். இதை அதிகமாக உபயோக படுத்துவது குதிரை மட்டுமே என்பதால் பரிபாஷை என்கிறார்கள்.

பரிபாஷை கூறும் பழமொழி : ஆறு பொருள்,பதினெட்டு சந்தம் வைத்து பேசாதே!!!!
(இந்த பழமொழி இப்பவும் மதுரையில் பயன்படுகிறது சந்தம் என்பது சந்து என இப்போது கூறுகிறார்கள்)

இந்த கலையை புலவர்கள், சித்தர்கள் அதிகமாக பயன்படித்தினார்கள். தாம் சொல்ல வந்த கருத்தை மறைப்பாக கண்மூலமாகவோ அல்லது ஒலியலைகள் மூலமாகவோ கூறுவார்கள் இதை பக்குவபட்டவன் அடையாளம் கண்டுகொள்வான்.

அதனால் தான் குரு சிஷ்ய உறவு மிக முக்கியம் என்பார்கள். சீடனுக்கு அப்போது புரியவில்லை என்றாலும் குரு பார்வை தக்க சமயத்தில் ஞாபகத்தில் தோன்றி அர்த்தம் கிடைக்கும்.

இதை அறியாமல் சிலர் பரிபாஷை என்பதை அகராதியில் தேடுவார்கள். சித்தர்கள் பரிபாஷை புத்தகம், நிகண்டு புத்தகம் என்பதெல்லாம் மருத்துவம், மூலிகை,ஜோதிடம் பற்றி அறியவே.

பிரம்ம வித்தைகள் மற்றும் சில யோக சாதனைகள் அனைத்தும் பரிபாஷை(குதிரைபேச்சு கண்) மூலமே கொடுக்கபடுகிறது.

இரண்டாவது பரிபாஷை  ஒலியலைகள், குறிப்பிட்ட சப்தம் மூலம் சில வார்த்தைகள் மாணவன் சொல்லும்போது அது அவன் உடம்பில் அதிர்வுகளாக இருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இது எப்படி என்றால் நன்றாக நினைவில் கொள்ளவும் மனித தேகம்  72 சதவீதம் நீரால் ஆனது.நீருக்கு சப்தத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. (ஆதாரம்: நீரை பற்றிய ஆய்வுகளில் இங்கிலாந்து கூறியுள்ளது)

அப்படியானல் இப்போது புரியும் மந்திர எழுத்து ஒலியை இந்த உடல் எப்படி வாங்குகிறது என்று, இந்த ஒலி அலைகள் மூலம் என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைக்க அந்த வரியை உருவாக்குவார்கள்.

அப்படியானால் இந்த கந்த சஷ்டி வரிகள், என்ன பரிபாஷை வகை என புரியும்.

செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
           
உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

September 3, 2016

மறைக்கப்பட்ட தமிழர் கலைகள் பாகம் - 3

பதினைந்தாம் புலி - ஓர் ஆய்வு

பதினைந்தாம் புலி என்பது ஆடு புலி ஆட்டம் என்ற விளையாட்டே ஆகும்.


இந்த விளையாட்டை கண்டுபிடுத்தவர்கள் சோழரா,பாண்டியரா,கொங்குநாட்டை சேர்ந்தவரா என தெரியவில்லை.

ஆனால் நாம் இதில் உள்ள நுட்பம் பற்றி மட்டும் ஆராய்வோம்.

இதில் 3 புலிகள் 15 ஆடுகள் உள்ளது. மேலும் முக்கோணத்தின் மீது மூன்று பட்டை கோடுகள்.மொத்தம் 23 புள்ளிகள்.

ஆடுபுலி ஆட்டம் ஒரு போர்கலையை மையபடுத்தி மறைமுகமாக விளையாடும் அறிவுபூர்வமான விளையாட்டு.

மூன்று புலிகள் ஆணவம்,கன்மம்,மாயை மேலும் 15 ஆடுகள் என்பது பத்து தசேந்திரியங்கள்,5 பூதங்களால் ஆன உடலை குறிக்கும்.

இதில் காலியான ஐந்து புள்ளிகள் ஐந்து அவஸ்தைகளை குறிக்கும்.

மூன்று கோடுகள் ஆழ்மனம்,நடுமனம்,புறமனம் ஆகிய நிலைகளை குறிக்கும்.

இதில் புலிகளின் குகை எனபடுவது *ஆழ்மனம்* என்கிற மேல் அடுக்கை குறிக்கும்.

அங்கிருந்து தான் புலிகள் வந்து ஆடுகளை கவரும்

ஐந்து ஆடுகள்(உடலை இழந்தால்) வெட்டுபட்டால் மூன்று புலிகள்(ஆணவம்,கன்மம்,மாயை) வெற்றியடைந்தது.


இந்த புலிகளை வெல்ல நமக்கு கொடுத்தது தான் இந்த முக்கோணம்(அறிவு).

விளையாடுபவர் முக்கோணம் பார்த்து விளையாடுவதால் அறிவு விருத்தியாகும். மூளையின் செல்கள் அவரை அறியாமலே விழிப்புடன் இருக்கும்

இதை தான் இன்றை காலம் உபயோகபடுத்துகிறது.

180° பார்வையில் உங்கள் கண்ணில் முக்கோணம் பட்டால் உங்கள் மூளை உடனே விழிப்பு அடையும் நீங்களும் நிதானம் ஆவீர்கள். உதாரணம்:


போக்குவரத்து அறிவிப்புகள் அனைத்தும் முக்கோணத்திலேயே வைப்பார்கள்.வேகத்தடை,வலதுபக்கம்,இடதுபக்கம் குறியீடுகள்.

கோவிலுக்குள் செல்லும் முன் கலச தரிசனம் செய், என்பது கலசம் பார்ப்பது முக்கோணம் அமைப்பில் இருபதால் மனம் ஒரு நிலைபடும். அதன் பின் உள்ளே செல்வது

முக்கோணத்தின் கூர்மையான பகுதியை உற்று பார்ப்பதால் கவனம்(concentration)ஓர் நிலை படும் இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.


முருகனை வணங்கிணால் அறிவு வளரும் என்பது அவன் கையில் உள்ள வேல் முக்கோண அமைப்பு என்பதால் தான்.

நீங்கள் உங்கள் வீட்டில் முக்கோண படம் உங்கள் கண்ணில் படும்படி வைத்தால் மூளை எப்போதும் விழிப்புடன் இருக்கும் என்பது சூட்சமம்



பூஜை அறையில் பிரமிடு இருந்தால் மூளை மனம் ஒருமுகமாக இருக்கும் என்பது அது முக்கோணம் ஆகும்

ஆக இந்த விளையாட்டை விளையாடினால் புலிகளை எப்படி அடைப்பது என்பதும் அறிவு வளர்ச்சி அதிகபடுத்தவும் என்பதும் புரியும்.

ஆன்மீக கருத்து ரீதியாக எந்த ஒரு ஆட்டையும் இழக்காமல் மும்மலங்களை வெல்வது எப்படி என்பது இந்த விளையாட்டில் நுட்பமாக உள்ளது.

கீழே படம் மூலம் விளக்கி ஒன்று அனுப்பியுள்ளேன் கவனிக்க


உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

September 2, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 10

 பிற உயிரினங்களும் தமிழ் மொழியும் பகுதி -1


அந்த காலத்தில் எல்ல விலங்குகளும் பேசியிருக்கின்றன என பல மதங்களில் சான்று உள்ளன .


ராமயணத்தில் குரங்குகள்,கரடி,மரவகைகள்,பறவைகள்(ஜடாயு) அதேபோல் பைபிளில் பாம்பு,திமிங்கலம்,பன்றிகள். என்றும் இஸ்லாமியத்தில் நரிகள், மாடுகள் என விலங்குகள் பேசியதாக வருகிறது.

இது எல்லாம் உண்மையாக இருக்குமா என்றால் உண்மைதான். ஆனால் இக்காலத்தில் இது ஒரு சில இடத்தில் மட்டுமே இவை நடக்கிறது.

அவை சில சிம்பான்சி குரங்கு வகை,கிளிகள்,பேசுகிறது. மேலும் கொரியாவில் வன விலங்கு பூங்காவில் உள்ள, ஆசிய யானை ஒன்று, கொரிய மொழி பேசும் அதிசயம் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அமேசான் ஆற்று பகுதியில் வாழும் சில காட்டுவாசிகள் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்க்கு தகவல் அனுப்ப குறிப்பிட்ட ஒரு மரத்தை பயன்படுத்துகின்றனர்.இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கே இது இன்னும் விளங்கவில்லை.


இதை பற்றி அந்த காட்டுவாசியிடம் கேட்டதற்க்கு இந்த மரத்தோடு பேசும் வழக்கம் எங்களுக்கு உண்டு அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. ஆனால், நான் அனுப்பும் செய்தியை இந்த மரம் கேட்டு அது அந்த கிராமத்தில் உள்ள அந்த மரத்திடம் கூறும், பின் அந்த மரம் அது கூறுவதை கேட்டு அங்குள்ள என் மனைவி, மக்கள் அறிவார்கள் என கூறினார். இதுவும் இன்னும் விஞ்ஞானிகளுக்கு விளங்கவில்லை.

சித்தர்கள் மூலிகை பறிக்கும் போது சில சடங்குகள் செய்து தான் மூலிகை பறிப்பர் அதில் சாப நிவர்த்தியும் ஒன்று சில மரங்களிடம் சபநிவர்த்திக்காக பேசியதாக குறிப்புகள் ஆங்காங்கே உள்ளன.

இப்படி எல்லாவகையிலும்  சில குறிப்பு பேச்சுகளை அனைத்து உயிரினங்களும் வெளிபடுத்துகின்றன.

அந்த குறிப்பு பேச்சு என்பது சில ஒலியலைகள் உள்ளடக்கியதாக உள்ளது. அது பல தமிழ் ஒலியலைகளை கொண்டதாக உள்ளது.

மதுரையில் வன்னிமரம் சாட்சி சொல்லியது, பசுமாடு சாட்சி சொல்லியது என்பதெல்லாம் இந்த ஒலியலைகளை வைத்து தான். இதை சித்தர்களும் பேசுகின்றனர் ஆனால் நம்மால் தான் அறிய முடியவில்லை.

ஒரு சிலர் மனிதனுக்கு மனம் உண்டு என்பது போல், பிற விலங்குகளுக்கும் மனம் உண்டு என கூறுகின்றனர்.

நமது யோகிகள்,சித்தர்கள்,முனிவர்கள் கூறிய கருத்து மனம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ளது என்றும் அதனால் தான் அவனை மனிதன்(மனுஷ்யன்) என்கிறோம். ஆனால் சிலர் இதை மறுத்து பேசுகின்றனர்.

தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் மரபியல் பிரிவில் கீழ்காணும் பாடலை கவனிக்க
“……………………………………..
ஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவு அதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
என்கிறார்.

இதை படித்தால் நன்கு விளங்கும். அவர் தான் கூறியதாக கூறாமல், நேரிதின் உணர்ந்தோர் நெறிசெய்தனர் என்கிறார். அதாவது இதை உணர்ந்தவர்கள் கூறினார் என்கிறார்.

இதை சில பேர் அறியாமல் அதை ஆராயாமல் உணராமல்  மனம் என்பது எல்லாருக்கும் உள்ளது என கூறுகின்றனர்.அதற்கு இந்த பாடல் குட்டு வைத்தது போல் உள்ளது

எல்லா சித்தர்களும் மனிதன் மனதை செம்மைபடுத்தினால் வெற்றி பெறலாம் என கூறினார்களே அன்றி, மரமோ , விலங்கோ மனதை செம்மைபடுத்த வேண்டும் என கூறவில்லை.

அடுத்தபதிவில் இன்னும் காண்போம்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்