July 22, 2013

சாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)




 நத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு


நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது)
கருவூரார் பலதிரட்டு என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார் 

நத்தை சூரி (மிக எளிதாக கிடைப்பது ஜாலங்கள் மருத்துவங்களில் பயன்படுவது)
  
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
  தாரணிக்குள் சாபமில்லை பெரியோர் கொள்வார்
  சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு

  ………………………………………

  ………………………………………
    
உலகத்தில் அநேக மூலிகைக்கு சாபம் உண்டு. இந்த        நத்தைசூரிக்கு சாபம் இல்லை என்கிறார்,
இதையும் பறித்து அப்படியே பயன்படுத்தலாம்.


துளசி,வில்வம் - மூலிகை ரத்தின சிந்தாமணி


மூலிகை ரத்தின சிந்தாமணி என்னும் நூல் சாபம் இல்லா மூலிகை இரண்டு கூறுகிறது அவை பின்வருமாறு
துளசி


ஒன்று துளசி மற்றொன்று வில்வம் இவை இரண்டுக்கும் சாபம் இல்லை என்றும் இதை எத்தனை முறை வேண்டுமானாலும் பூஜைக்கு திரும்ப திரும்ப பயன்படுத்தலாம் என்று கூறுகிறது.மேலும் இதன் மருத்துவ பயன்கள் அளவிடற்கரியது
மஹா வில்வம்




வில்வம் (சாதாரணமாக கிடைப்பது )




மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி அய்யா குப்புசாமி அவர்கள் நிறைய கூறியுள்ளார். அவருடைய வலைதளத்திற்க்கு சென்று பல மூலிகையின் பயன்களை அறியுமாறு நண்பர்களுக்கு வேண்டுகோள் தெரிவிக்கிறேன்

அய்யா குப்புசாமி அவர்கள் 
        
                  http://mooligaivazam-kuppusamy.blogspot.in/









July 18, 2013

சாபம் இல்லா மூலிகைகள் (பாகம் - 1)



திருநீற்று பச்சிலை - கோரக்கர்

குரு கோரக்கர்

கோரக்கர் சந்திர்ரேகை என்னும் நூலில் 144,145 பாடலில் சபநிவர்த்தி இல்லா மூலிகையை குறிப்பிடுகிறார்
…………………………………………………………
……………………………..
………………………………………………………………
………………………………………….
வேகமுற்ற குருமூலி பதினெண் பேர்க்கும்
  விளங்க வைத்த திது தனக்கு சாபம் இல்லை
பாகமுறப் பரிபாஷை யதனை நீத்துப்
  பட்சமுட னியம்பிடுவேன் மூலி தானே
 
திருநீற்று பச்சிலை
தானெற்ற திருநீற்று இலையு மாகும்
  தன்மையுடன் சரக்கெல்லாம் நிற்க்கும் பூடு
கோனென்ற கொள்கையுடன் பதினெண் பேரும்
   குவலயத்தில் மறைத்திட்டார் குணமாகத்தான்
……………………………………………………………
…………………………………………………………
………………………………………………………
……………………………………………………

அதாவது மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை குருமூலி என்றும் இதனால் மருந்து சரக்கெல்லாம் சுண்ணமாக மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர் குரு மூலிகையை தனது நூலில் மறைமுகமாக பதினெண் சித்தர்களும் கூறியுள்ளனர் என்றும், இந்த மூலிகைக்கு சாபம் இல்லை என்றும், அந்த மூலிகை திருநீற்று பச்சிலை தான் என்று மிகவும் வெளிப்படையாக கூறுகிறார்

 அருகம்புல் - மூலிகை ஜாலரத்தினம்






அருகம்புல்



மூலிகை ஜாலரத்தினம் என்ற நூலில் சாபநிவர்த்தி இல்லா மூலிகை பற்றி கூறுகிறது.

மூலிகையில் முதல் மூலிகையாம் இதற்க்கு சாபம் இல்லை
அநேகம்பேர் கண்டதுண்டு அதன்பேர் கணேசமூலிகையாகும்.

கணேசமூலிகை என்பது அருகம்புல்லேயாகும்


அருகம்புல் என்ற மூலிகைக்கு சாபம் இல்லை இதை பறித்து அப்படியே பயன்படுத்தலாம்