May 31, 2013

அல்லி (சூரியன் சுருங்கி) - மூலிகை மர்மம்

அல்லி மலரில் முதலாழ்வார் மூவருள் ஒருவராகிய பேயாழ்வார் தோன்றினார் என்பர்.இவர் தோன்றிய அல்லி மலரைச் செங்கழுநீர் என்றும், செவ்வல்லி என்றும் குறிப்பிடுகின்றனர்.
அல்லியின் பயன்கள்
சிவப்பு அல்லி 

அல்லிப்பூ தாமரையைப் போல் இருந்தாலும் மிகச் சிறியதாக காணப்படுகின்றது. வெள்ளை அல்லிப் பூ தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அல்லி இதழ்களையும், உள்ளேயுள்ள முடிச்சுக்களையும் பச்சையாகச் சாப்பிடலாம். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூவில் சர்பத் செய்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.உடல் சூடு தணிய,நீரிழிவு பாதிப்பு நீங்க,சிறுநீர் எரிச்சல் குறைய,தாகம் தணிய,கண்ணோய்கள் நீங்க,இரத்தம் சுத்தமாக,அல்லியை அதிகம் பயன்படுத்துவர்.



சித்தர் நூல்கள்
              
                 அல்லி மலரை பற்றி அகத்தியர் குணபாடம் பின்வருமாறு கூறுகிறது.



                                                              மேகமறும் புண்ணாறும் விட்டேகும் 
                                                              நீரிழிவுதாகந் தணியும் தழலகலும் - வாகான
                                                              மெல்லியலே! ஆயுள்மறை வேதிய ரெலாமுரைக்கும்
                                                              அல்லி மலரால் அறி




நீல அல்லி ( குவளை)

                   செவ்வல்லியின் மருத்துவக் குணங்கள்                                                                                                                    செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ 
                  டொவ்வுமே கப்பிணியும் ஓய்வதன்றி இவ்வுலகிற்
                  கண்ணின்நோய் தீரும் கனத்தபித்த ரத்தமொடு
                   புண்ணின் நோய் பன்னோயும் போம்

                                                                                -அகத்தியர் குணபாடம்.

அல்லி கிழங்கு 


அல்லி கிழங்கை வைத்து பஸ்பங்கள் நிறைய செய்யப்படுகின்றன . சித்தமருத்துவத்தில் அல்லி அல்லது ஆம்பல் கிழங்கின் பங்கு பெரிதும் பயன்படுகிறது.






May 30, 2013

தாமரை( சந்திரன் சுருங்கி) - மூலிகை மர்மம்


தாமரைமலர் மகத்துவம்


தாமரை மலரில் செந்தாமரை,வெள்ளைதாமரை என இரண்டு உண்டு இரண்டும் ஒரே பயனைத்தான் தருகிறது. தாமரைமலரின் மகத்துவம் பற்றிசொல்லவேண்டுமானால் நிறைய சொல்லலாம்.ஆனால் பதிவின் நீளம் கருதி முக்கியமான சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

யானை தாமரைக்கொண்டு பூஜித்தல்

தாமரையுடன் விநாயகர்

தாமரையுடன் குருவாயூரப்பன்


எப்போதும் தாமரையுடன் காட்சி தரும் விஷ்ணு பகவான்

பிரம்மா தாமரையுடன்


சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான மலர் தாமரை தான், தாமரைமலர் கொண்டு சிவபெருமானை அர்ச்சனைசெய்தால் உடனே நினைத்தகாரியம் கைகூடும். உதாரனமாக:விஷ்ணுபகவான் ஆயிரம்தாமரைமலர் கொண்டு அர்ச்சித்துதான் சுதர்சனரை பெற்றார். ஆயிரத்தில் ஒன்றாக அவர்கண்ணும் அடங்கும். மேலும் பல தெய்வங்கள் தாமரைமலர் கொண்டு பெருமானை அர்ச்சனை செய்கின்றனர். பிரம்மா,விஷ்ணு,கணபதி,முருகன்,அன்னைபார்வதிதேவி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
திருச்செந்தூர் முருகன் தாமரையுடன்

ஆகையால் பெருமானிடம் வேண்டுதல் வைப்பவர் வில்வத்திலும் மேலான தாமரையும் சேர்த்து கொண்டு அர்ச்சனை செய்யுங்கள் எடுத்தக்காரியம் தடையின்றி நிறைவேறும்.உதாரணம்: திருச்செந்தூர்முருகனைபோல,திருமால் எப்போதும் தாமரையை கையில் வைத்து கொண்டேயிருப்பார்.

ஆயிரம் தாமரையை கொண்டு திருமால் சுதர்சனம்  பெறுதல்
தாமரை சூரியபகவானுக்குரிய மலராகும், மேலும் அனைத்து உபதெய்வங்களும்(சிவபெருமானையும்,ஆதிசக்தியும் தவிர்த்து) தாமரைமலர் மீது நின்றவண்ணமே காட்சிதருகின்றனர். அனைவரும் ஆயிரத்தெட்டு இதழ்கமலத்தைகடந்தவர்கள். ஆதலால்தெய்வமாகினர்.

ஆதிமூலவரும்,ஆதிசக்தியும்தான் பரம்பொருளின் ஆசியுடன் மற்ற தெய்வங்களை படைத்தனர்.
  

தாமரைக்கிழங்கின் பயன்கள்


இக்கிழங்கால் பித்த சம்பந்தமான நோய்கள் நீங்கும். இதயம், நுரையீரல் பாதிப்பால் ஏற்ப்பட்ட காசநோய், சளி போன்றவற்றை குணப்படுத்தும், கண்நோயிக்கு இதை சூரணம் செய்து சாப்பிடலாம், மேலும் இதிலிருந்து தைலம் தயாரித்து தலைக்கு தேய்த்து குளித்தால் கண்நன்றாக தெரியும்.


தாமரை பூ


நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது. வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி குணமடையும் என்பர். மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும்.

தாமரை 


தாமரைத்தண்டை எடுத்து நூல் தயாரித்து ,காப்புகட்டுவதற்க்கும் பயன்படுத்துவர்.
தாமரையின்கிழங்கிற்க்கு கீழே ஆணிவேர் உண்டு அதையும் எடுத்து பயன்படுத்துவர், ஆணிவேர் நட்சத்திரம் பார்த்து எடுக்கவேண்டும்.

தாமரை ஜாலம்


தாமரை விதையை பொடிசெய்து பாலில் கலக்கினால் தண்ணீர் போல ஆகிவிடும்.இயற்க்கை நிறம் வருவதற்க்கு வெய்யிலில் வைத்தால் வந்துவிடும்.அன்னபறவையை போல நீரும் பாலையும் பிரித்துவிடும்


சிவபெருமானை பற்றி சில தகவல்கள் ஒரு பதிவில் தரப்படும்








May 6, 2013

மூலிகை மர்மம் - நிலம்புரண்டி

நிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும் .இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு உபயோகபடுத்துகிறார்கள்

இந்த மூலிகை சாதாரணமாக பூமியில் மற்ற செடி கொடிகளுக்கு இடையில்முளைத்திருக்கும்இது மனிதர்களின் வாசனை பட்ட மாத்திரத்தில் மண்ணை கீறிக்கொண்டு உள்ளே  போய்விடும்அதனால்தான் இதற்கு நிலம் புரண்டி என்ற பெயரை நமது முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்இதை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் சாதாரணமாக நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் தேத்தான்  கொட்டைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நடந்தால் தேத்தான் கொட்டையினுடைய வீரியத்தால் நிலத்திற்குள் போகாமல் வெளியே நின்று விடும்,


மூலிகை இருக்கும் இடம் சென்றால் சல சல என சத்தம் வரும் அதை வைத்து அறியலம் .மேலும் தேத்தான் கொட்டைகள் கையில் இருந்து கீழே நழுவி விடும் . 


சாப நிவர்த்தி 


நிலம்புரண்டி மூலிகையை ஞாயிறு. செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சூர்ய உதயத்திற்கு முன் இடத்தை சுத்தம் செய்து அச்செடிக்கு சாப நிவர்த்தி செய்து மந்திரத்தால் உயிர் கொடுத்து காப்பு கட்டி தூப தீபங்கள் காட்டி பறித்து வந்துகுழித்தைலம் இறக்க வேண்டும்அந்த தைலத்தில் பச்சை கற்பூரம் ஜவ்வாது. கோரோசனை மூன்றும் சம எடையில் சேர்த்து குழைத்து அஞ்ஜனமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்அந்த அஞ்ஜனத்தில் ஆஞ்சநேய மூல மந்திரம் மற்றும் அஞ்ஜனா தேவி மூல மந்திரம் முறையே 1008 முறை ஜபித்து உருஏற்ற வேண்டும்,தேவையான போது அந்த அஞ்ஜானத்தை சிறிது எடுத்து வெற்றிலையில் தடவி மேற்குறிப்பிடும் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்து வெற்றிலையில் பார்த்தால் தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவது போல் புதையல் இருக்கும் இடத்தை நமக்கு மிகதுல்லியமாக காட்டும்,    மேலும். இந்த மூலிகையின் வேரை கன்று போடாத பசுஞ்சானத்தோடு எரித்து சாம்பலாக்கி நீரில் கரைத்து மேற்குறிப்பிட்ட மூல மந்திரத்தை முறைப்படி ஜபித்து புதையல் இருப்பதாக நாம் கருதும் இடத்தில் இரவில் தெளித்து விடவேண்டும்,காலையில் சென்று பார்த்தால் அங்கு புதையல் இருக்கும் பட்சத்தில் பாளம் பாளமாக வெடித்து இருக்கும். புதையல் இல்லையென்றால் சாதாரணமாக இருக்கும்