April 17, 2012

கஞ்சமலை சடையாண்டி சித்தர்

                                          

சித்தர் குகை 

சடையாண்டி சித்தர் 

சடையாண்டி சித்தர் கோவில் 
                                      






சடையாண்டி முக்தி அடைந்த இடம்




சடையாண்டி ஊத்து 


சடையாண்டி சித்தர் என்பவர் இந்த பகுதியில் மாடு மேயித்துகொண்டிருந்த ஒரு நபர். இவர் இங்குள்ள ஊற்றுக்கு பக்கத்தில் உள்ள சிவன் சிலைக்கு வழிபாடு நடத்திவந்தவர்  .சப்த கன்னிமார்கள் மாடு மேய்க்கும் பெண்களாக வந்து ஒரு நாடகம் நடத்தி அதன் மூலம் முக்தியும்  அளித்தனர் . ஒரு நாள் இவர் இங்கு மாடு மேயித்துக்குகொண்டிருக்கும் போது,  ஏன் இங்கு நீங்கள் பெண் தெய்வத்தை வழிபடவில்லை என்று ஒரு பெண் கேட்டாள் அதற்க்கு பெண் துணை எனக்கு தேவையில்லை என்று சொன்னார் , இன்னொருபெண் நாங்கள் இல்லாமல் நீங்கள் பிறக்கவும் இல்லை, மணக்கவும் இல்லை,துறக்கவும் இல்லை, இப்படி எல்லா விதங்களிலும் உதவி செய்து கொண்டிருக்கிறோம் என்றாள் இதை கூர்ந்து கவனித்த  பின் தன் தவறை உணர்ந்தார். இதுவரை நான் உங்களை பார்த்ததே இல்லை யார் அம்மா நீங்கள் என்று கேட்டார் உடனே தன் சுயஉருவிற்கு வந்து  பின் அவருக்கு ஆசிகள் வழங்கினர்   இப்போது சிவபெருமான் ஆணையை ஏற்று  உனக்கு முக்தி வழங்க போகிறோம் என்று சொல்லி உடனே மறைந்தனர். அவருக்கு ஒன்றும் புறியவில்லை பின் கீழ் நின்றுகொண்டுயிருந்த மக்கள் மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்களை காணவில்லை இவன் தான் மறைய வைத்து விட்டான் என்று சடையாண்டியை  துரத்தினர் அவர் இங்குள்ள ஊத்துக்குள் தன் மாடுடன் சென்று மறைந்துவிட்டார் (முக்தியடைந்துவிட்டார் ) அன்று முதல் இந்த ஊத்து சடையாண்டி ஊத்து என்று அழைக்கப்படுகிறது   இந்த ஊற்று வற்றாமல் இன்றும் வந்துகொண்டிருக்கிறது மேலும் இதில் குளித்தால் பிணிகள் அகலும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை 







                                                      

No comments: