April 6, 2012

கஞ்சமலை கரடி சித்தர்

                                 கஞ்சமலை 

கரடி சித்தர் 




கரடி சித்தர் என்பவர் கஞ்சமலையின் ஏழு சித்தர்களில் ஒருவர். அவர் இந்த பகுதியில் கரடி உருவம் எடுத்து அடிக்கடி இங்கு உலவிக்கொண்டு இருப்பார்.  

இந்த ஊரையாண்ட சிற்றரசனின்  மகள் ஒரு ஏழையை விரும்பினால்,அதனால்  அவன் மகளை ஒரு ஏழைக்கு கல்யாணம் செய்து தரமுடியாது என்பதற்காக அவனை இந்த பகுதியில் உள்ள புலியை வேட்டையாடினால் தன் மகளை திருமணம் செய்து தருவதாக  வாக்களித்தான். அதற்கு சாச்சியாக அங்கு உலவிகொண்டிருந்த கரடியை பார்த்து இது தான் சாச்சி என்றான் . 

கரடி வந்து சாச்சி சொல்லாது என நினைத்து கூறினான். சொன்னபடியே  புலியை வேட்டையாடி வெற்றி கொண்டான்.ஆனால் மன்னன் தன் மகளை தர முடியாது என்றன். இதற்கு யார் சாச்சி என்று கேட்க ஏழை அதிர்ந்து போனான், உடனே நான் தான் சாச்சி என்றது ஒரு குரல்  பார்க்க ஜடாமுடியுடன் ஒரு முனிவர் .யார் நீ என்றார் அரசர், நான் தான் கஞ்சமலையின் சப்த சித்தர்களில் ஒருவன் இந்தமலையை  வளம் வருபவன். 

 நீ சாச்சியாக கூறியபோது நான் கரடி உருவில் இருந்தேன் என்றார். உடனே கரடியாக உருமாறினார் அனைவரும் அதிர்ந்து போய் முனிவரின் வல்லமை உணர்ந்தனர்.

 பின் மன்னன் மனம் வருந்தி தன்  மகளை ஏழைக்கே மனம் முடித்துவைத்தான். 

அன்று முதல் இவரை  அங்கு கரடி சித்தர் என்று எல்லோரும் அழைத்தனர். 

மேலும் இவர்கஞ்சமலை அருகே உள்ள உத்தம சோழபுரத்தில் உள்ள கரபு நாதர் ஆழையத்தில் ஜீவ சமாதி அடைந்தர்.  

இன்று அங்கு இவருக்கு தனி சந்நிதி உள்ளது. 
   

1 comment:

VELU.G said...

ரொம்ப நல்லாருக்குங்க