April 30, 2012

கஞ்சமலை சஞ்சீவி லிங்கம் என்னும் சுயம்பு லிங்கம்

                                      

சஞ்சீவி லிங்கம் என்னும் சுயம்பு லிங்கம் 

இது மலை அடிவாரத்தில் இருந்து 3650 அடி உயரத்தில் இருக்கிறது இங்கு செல்ல முதலில் 77  அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை உள்ளது இதை முதலில் தரிசனம் செய்து விட்டு பின் சிறிது தூரத்தில் நாகதேவி சிலை உள்ளது இங்கு மஞ்சள் குங்குமம் இட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும் அதன் பிறகு அடிவாரத்தில்  கஞ்சபெருமாள் என்கிற தசாவதார பெருமாள் கோவில் இருக்கிறது.  இங்கிருந்து தான் பாதை தொடங்குகிறது இங்குள்ள கருப்பு நிற பைப் தொடர்ந்து சென்றால் சஞ்சீவி லிங்கத்தை காணலாம் அது அங்குள்ள ஊற்று நீரில் இருந்து வருகிறது பைப்யின் மூலம் ஊற்று நீரை கீழே கொண்டுவருகிறார்கள். மேலும் அது சற்று கடினமான பாதையாக உள்ளது மேலும் சிறுவர்கள் பெண்கள் செல்லுவது மிக கடினம் ,பாதை செங்குத்து மேடுபோல் உள்ளது விட முயற்சி உடன் செல்ல வேண்டும் முதலில் பாம்புகள் உள்ளபகுதி வரும் பின் மாட்டு எலும்பு பகுதி அதன் பின் ராமர் கொடிமரம் இங்கிருந்து பார்த்தால் சஞ்சீவி மேடு தெரியும் இங்கு தான் ஐயன் எம்பெருமான் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார் இவரை நேரில் தரிசனம் செய்து விட்டால் கைலாயத்தை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் இது உண்மை இதை சுழுமுனை சித்தர் கூறுகிறார். இதன் பாதை மற்றும் படங்கள் உங்கள் பார்வைக்கு 
77  அடி ஆஞ்சநேயர்  
நாகதேவி 

தசாவதார பெருமாள் 

மாட்டு எலும்புடன் எனது நண்பர் 
சஞ்சீவி மேடு 

பாம்புகள் உள்ளபகுதி



சஞ்சீவி லிங்கம்


சஞ்சீவி லிங்கத்தை தரிசனம் செய்து இன்புற்று வாழ்வீர்களாக ஓம் சிவாய நம:







No comments: