September 3, 2016

மறைக்கப்பட்ட தமிழர் கலைகள் பாகம் - 3

பதினைந்தாம் புலி - ஓர் ஆய்வு

பதினைந்தாம் புலி என்பது ஆடு புலி ஆட்டம் என்ற விளையாட்டே ஆகும்.


இந்த விளையாட்டை கண்டுபிடுத்தவர்கள் சோழரா,பாண்டியரா,கொங்குநாட்டை சேர்ந்தவரா என தெரியவில்லை.

ஆனால் நாம் இதில் உள்ள நுட்பம் பற்றி மட்டும் ஆராய்வோம்.

இதில் 3 புலிகள் 15 ஆடுகள் உள்ளது. மேலும் முக்கோணத்தின் மீது மூன்று பட்டை கோடுகள்.மொத்தம் 23 புள்ளிகள்.

ஆடுபுலி ஆட்டம் ஒரு போர்கலையை மையபடுத்தி மறைமுகமாக விளையாடும் அறிவுபூர்வமான விளையாட்டு.

மூன்று புலிகள் ஆணவம்,கன்மம்,மாயை மேலும் 15 ஆடுகள் என்பது பத்து தசேந்திரியங்கள்,5 பூதங்களால் ஆன உடலை குறிக்கும்.

இதில் காலியான ஐந்து புள்ளிகள் ஐந்து அவஸ்தைகளை குறிக்கும்.

மூன்று கோடுகள் ஆழ்மனம்,நடுமனம்,புறமனம் ஆகிய நிலைகளை குறிக்கும்.

இதில் புலிகளின் குகை எனபடுவது *ஆழ்மனம்* என்கிற மேல் அடுக்கை குறிக்கும்.

அங்கிருந்து தான் புலிகள் வந்து ஆடுகளை கவரும்

ஐந்து ஆடுகள்(உடலை இழந்தால்) வெட்டுபட்டால் மூன்று புலிகள்(ஆணவம்,கன்மம்,மாயை) வெற்றியடைந்தது.


இந்த புலிகளை வெல்ல நமக்கு கொடுத்தது தான் இந்த முக்கோணம்(அறிவு).

விளையாடுபவர் முக்கோணம் பார்த்து விளையாடுவதால் அறிவு விருத்தியாகும். மூளையின் செல்கள் அவரை அறியாமலே விழிப்புடன் இருக்கும்

இதை தான் இன்றை காலம் உபயோகபடுத்துகிறது.

180° பார்வையில் உங்கள் கண்ணில் முக்கோணம் பட்டால் உங்கள் மூளை உடனே விழிப்பு அடையும் நீங்களும் நிதானம் ஆவீர்கள். உதாரணம்:


போக்குவரத்து அறிவிப்புகள் அனைத்தும் முக்கோணத்திலேயே வைப்பார்கள்.வேகத்தடை,வலதுபக்கம்,இடதுபக்கம் குறியீடுகள்.

கோவிலுக்குள் செல்லும் முன் கலச தரிசனம் செய், என்பது கலசம் பார்ப்பது முக்கோணம் அமைப்பில் இருபதால் மனம் ஒரு நிலைபடும். அதன் பின் உள்ளே செல்வது

முக்கோணத்தின் கூர்மையான பகுதியை உற்று பார்ப்பதால் கவனம்(concentration)ஓர் நிலை படும் இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.


முருகனை வணங்கிணால் அறிவு வளரும் என்பது அவன் கையில் உள்ள வேல் முக்கோண அமைப்பு என்பதால் தான்.

நீங்கள் உங்கள் வீட்டில் முக்கோண படம் உங்கள் கண்ணில் படும்படி வைத்தால் மூளை எப்போதும் விழிப்புடன் இருக்கும் என்பது சூட்சமம்



பூஜை அறையில் பிரமிடு இருந்தால் மூளை மனம் ஒருமுகமாக இருக்கும் என்பது அது முக்கோணம் ஆகும்

ஆக இந்த விளையாட்டை விளையாடினால் புலிகளை எப்படி அடைப்பது என்பதும் அறிவு வளர்ச்சி அதிகபடுத்தவும் என்பதும் புரியும்.

ஆன்மீக கருத்து ரீதியாக எந்த ஒரு ஆட்டையும் இழக்காமல் மும்மலங்களை வெல்வது எப்படி என்பது இந்த விளையாட்டில் நுட்பமாக உள்ளது.

கீழே படம் மூலம் விளக்கி ஒன்று அனுப்பியுள்ளேன் கவனிக்க


உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

No comments: