December 19, 2012

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-4

சுயம்பு மரகத லிங்கம்- வரலாறு 

             
 பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, ""முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்,'' என சாபமிட்டாள்.

இதையறிந்த சிவன், "நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை' எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது. 

பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்க்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கவுரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார்.(இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது).அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவ பொருமான் லிஙக வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார்

இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்து கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்க்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார் (போகர் பழனியில் புலிப்பாணி முனிவருக்கு இட்டது போலே சில விதிமுறைகள்)மீதி நேரத்தில் சதாரணமாக இந்த லிஙத்தை (மரகதலிங்கம்) வைத்து விடுங்கள் என்றார் பின் அர்த்தநாரீசர் திருவுருவத்தை முக உரு இல்லாமல் வெண்பாசாணம் கொண்டு செய்தார் பின் அங்கு ஒரு ஊற்று நீரையும் ஏற்படுத்தி அந்த நீரை பக்தர்களுக்கு கொடுக்குமாறு செய்தார்.

சுயம்பு லிங்கத்தின் மர்மம்


மரகதலிங்கத்துடன் மூலவர்

மரகதலிங்கம் இல்லாமல்
தினமலர் மாவட்டகோவில்கள் பகுதியில் சுயம்புலிங்கத்தை சுட்டி காட்டி உள்ளதை பாருங்கள்
           


      யார் இந்த மார்கழி மாதத்தில் குளித்து முடித்து மலையின் மீது நடந்தே வந்து இந்த சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்கிறார்களோ அவர்க்கு வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது ஐதீகம் அல்ல உண்மை நாங்கள் அதை கண் கூடாக கண்டவர்கள் அதனால் எப்பாடுபட்டாவது பக்தர்கள் இதை வந்து பார்க்கவேண்டும் என கேட்டு கொள்கிறேன் குறிப்பு குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும் இல்லை என்றால் அதற்க்கு பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து விடுவார்கள் இது அதை விட சற்று பெரியதாக இருக்கும் இது தான் சாதரணமான தினத்தில் வைக்கபடும் லிங்கம்.  இந்த உண்மை பலரும் மறைத்து உள்ளனர்.அங்குள்ள வம்சாவழிகளுக்கு மட்டுமே தெறிந்த உண்மை. நாங்கள் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்க்காக இதை கூறினேன்.மலையின் பஸ் ரூட்டு வழியாக நடந்து செல்லலாம்.    

நாகமாணிக்கம் மர்மம்


 நாகமாணிக்கம் எங்குள்ளது என்று தெரியவில்லை.சுயம்பு மரகத லிங்கத்தின் பால் அபிஷேகம் பார்பது மிகவும் கொடுத்துவைத்திருக்கவேண்டும் அந்த பாக்கியம் எங்கள் குழுவுக்கு 17.12.12(மார்கழி-2)திங்கள் கிழமை கிடைத்தது.


அமைவிடம்:


திருச்செங்கோடு ஈரோடிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் நாமக்கலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

                                           
                                             ஓம் நமசிவய !!!!!


     
   

No comments: