December 18, 2012

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-2

மலையின் ஆண் வடிவம் இது மலையின் முன் பகுதி

சித்தர்கள்

சதுரகிரி,பொதிகை,கொல்லிமலை,போன்றே இந்த மலையிலும் பல சித்தர்கள் தங்கி தவம் புரிந்துள்ளனர்.மேலும் இந்த மலையில் பல குகைகள், சஞீவினி மூலிகைகள் உள்ளன. இந்த மலையில் மூலிகை காவல் தெய்வமாக அனுமன் உள்ளார். நான் சில மூலிகைகள் தேடுகின்ற போது பல தடவை முக்கியமான மூலிகை உள்ள யிடத்தில ஒரு குரங்கு கூட யில்லை ஆனால் நான் மூலிகையின் அருகில் சென்றால் பல குரங்குகள் வந்துவிடுகின்றன. அதே போலத்தான் இங்கு ஒரு குகை ஒன்று உள்ளது அங்கு சென்றால் உதகஞ்செயநீர்(அகத்தியர் பரிபூரணம்1200) என்ற ஒரு நீர் உள்ளது அதை காட்ட என் குரு என்னை அழைத்து சென்ற போது அனுமன் படைகளால் நாங்கள் சூழ பட்டோம் பின் என் குரு அனுமத் கவசம் செய்து விலகி செல்லுமாறு செய்தார் பின் தான் அங்கு சென்றோம்.
மலையின் பெண் வடிவம் இது மலையின் பின் பகுதி


இங்கு அல்லி சுனை ஒன்று உள்ளது அதன் அருகில் தான் சித்தர் பீடம் உள்ளது.  ஒரு சித்தர் தினம் அங்கு வந்து வழிபடுவதாக என் குரு பலமுறை கூறியிருக்கிறார். மேலும் இந்த மலையில் ஆரா சுவாமி என்கிற ஒருவர் வாழ்ந்து வந்தார் அவர் இந்த மலையில் ஜீவ சமாதியாகி உள்ளார் என்றும் பல மூலிகைகள்,சித்துகள் அவருக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார் .மேலும் போகர் கூறிய மலைதாங்கி(வர்மகலையில் நோக்கு வர்மத்திற்க்கு பயன்படும் மூலிகை அது)  என்ற மூலிகை இருப்பிடம் ஒரு சித்தர் இங்கு தான் காட்டினார் என்று என் குரு கூறியதுண்டு 

இந்த மலையில் நடந்த அனுபவம் நிறைய உண்டு அதை பின் ஒரு பதிவில் கூறுகிறேன்.

பதிவின் நோக்கம் பாகம் -3 நாளை


No comments: