June 30, 2012

ஔவையாரும் திருவள்ளுவரும்




ஔவை மதுரை போகும் வழியில் ஒரு வீட்டில் உள்ள திண்ணையில் அமர்ந்து ஒய்வு எடுக்கிறார். அப்போது அந்த வீட்டுக்கு சொந்தக்கரர்  அங்கு தன் மனைவியை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார் . அதை கேட்ட அவ்வை நான் இன்று உங்கள் வீட்டில் தான் உணவு அருந்த வேண்டும், என்று கட்டாயபடுத்தி கூறுகிறார்.வீட்டுகாரரும் மிகுந்த வருத்தபட்டு வாருங்கள் அன்னையே என்று உள்ளே அழைத்து செல்கிறார் உள்ளே உள்ள அடங்க மனைவி கணவனை திட்டி தீர்த்து விட்டு அன்னைக்கு சிவந்த முகத்தோடு அன்னம் இடுகிறாள் இதை கண்ட அன்னை உன் உணவில் சினம் என்ற நஞ்சு உள்ளது இதை உண்டால் எனக்கும் அது வந்து விடும் என்கிறார். இதை   கண்ட அப்பெண் கணவனை திட்டுகிறாள்.இதை கண்ட அன்னை மனைவி மதிக்கவில்லை என்றால் உடனே துறவறம் மேற்கொள் என்கிறார்.இதை கண்ட மனைவி அதிச்சியுற்று, தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள் .
பின் அங்கிருந்து வள்ளுவர் உள்ள பகுதிக்கு செல்கிறார் அங்கு அவர் தன் கவியை மாணாக்கர்களுக்கு போதித்து கொண்டிருக்கிறார் இதை கண்ட அவ்வை,மிகவும் ஆழமான கருத்துகள் இதை தாங்கள் தமிழ் சங்கத்தில் வெளியிட்டு விட்டீர்களா ? என்று வினம்பினார்.அதற்க்கு, இதை அவர்கள் பார்க்காமலேயே நிராகரித்துவிட்டார்கள் என்றார். இது தமிழுக்கு ஏற்ப்பட்ட அவமானம் வாருங்கள் இதை நான் கேட்கிறேன், என்றார் அவ்வை. உடனே இருவரும் குறளை எடுத்து கொண்டு முத்தமிழ் சங்கத்திடம் சென்றனர். அங்கு அவ்வைக்கு குறளோடு வந்ததால் வாயிற்கதவு மூடப்பட்டது தன் கவிதிறத்தல் அதை உடைத்து எறிந்து உள்ளே சென்றனர் .உடனே பாண்டியமன்னன் அங்கு வந்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு சங்கத்தை கூட்டினான்.அங்கு குறள் பாடப்பட்டது .அங்குள்ள புலவர்கள் வெண்பாவால் இருந்தால் நான்கடி வேண்டும் இது ஈரடி வெண்பா ஏற்க முடியாது என்றனர்.உடனே சினம் கொண்டு அவ்வை ,  'சங்கபலகையைகொண்டுவாருங்கள் பொற்றாமரை குளத்தில் வைப்போம், குறள் உலகத்திற்கு வேண்டுமா? வேண்டாமா?', என்று ஈசனே முடிவு கூறட்டும் என்றார். பின் குறளை ஈசன் ஏற்று கொண்டதின் அடையாளமாக சங்கபலகையின் மீது இருந்த ஓலைசுவடிகள் தங்கசுவடிகளாக மாறின பின் அனைவரும் ஏற்று கொண்டனர். பலத்தடைகளை தாண்டி குறள் வெளிவர காரணமாக இருந்தவர் அவ்வையே         
அவ்வை எழுதிய நூல்கள் 

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை 

ஔவை குறள், விநாயகர் அகவல்
இதில் விநாயகர் அகவல் என்ற நூலில்  குண்டலினியை விழிப்படைய செய்யும் முறையை மிக அழகாக கூறியிருக்கிறார் 
           

No comments: