January 3, 2013

மறுபிறவி - 1

மறுபிறவி பற்றி நான் அறிந்த வரையில் மிக எளிமையான விளக்கத்தில் கூறியது வள்ளலார் மட்டும் தான். பல மதங்கள் மறு ஜென்மம் என்பதை மறுக்கிறது. ஆனால் இந்து மதம் மட்டும் அது உண்மை என்று திட்டவட்டமாக கூறுகிறது

கீதையில் கண்ணனே கூறியுள்ளார், மானிட ஆன்மா என்பது அழியாது அது மீண்டும் பிறக்கும் என்றும் மனிதன் கர்மம் செய்ய கடமை பட்டவன் என்றான் இங்கு கர்மம் என்பது புண்ணிய பாவ கணக்கு

சுலுமுனை சித்தர் கூற்று




மனித பிறவிக்கு அடுத்து தேவ,தெய்வ பிறப்பு தான்
இது எப்படி சாத்தியம் என்றால் ,ஒரு மனிதன் 1,2,3 வகுப்பு படிக்கிறான் என்றால் நிறைய மதிப்பெண் வாங்கினால் அடுத்த வகுப்பிற்க்கு செல்கிறான் 
அது போலவே பிறப்பு என்பது செடி,கொடி,மரம்,பறவை,விலங்கு,மனிதன்,தேவர்கள், தெய்வம் என்ற வகுப்புகளாக பிறிந்து வருகிறது. இதில் பாவம் செய்தால் அந்த வகுப்பிலேயே
மீண்டும் விழுகிறோம். கவனிக்க மீண்டும் 1 ம் வகுப்பு செல்வதில்லை 

வள்ளலார் என்கிற ஞான சித்தர் கூற்று


மறுபிறவி


இப்போது வள்ளலார் கூறுவதை கேட்போம் ஒருவன் ஒரு வீட்டை விட்டு காலி செய்து புது வீட்டிற்க்கு காசு கொடுத்து குடி போகிறான் என்றால் அவன் ஏற்கனவே ஒரு வீட்டில் தங்கினான் என்பதை மறந்து விட வேண்டாம். அது போலத்தான் ஆன்மா ஒரு உடம்பில் இருந்து வேரு ஒரு உடம்பிற்க்கு குடி பெயர்கிறது.அவன் செய்த நன்மை பொறுத்து (நிறைய செல்வத்தை) வீடு என்கிற உடம்பு அமைகிறது

கர்ம வினை


இதில் கர்ம வினை என்பது அவன் செய்த பாவ மூட்டை அது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. இது எப்படி என்றால் முன்பு கூறியதை போல வேறு ஒரு வீட்டிற்க்கு போன மனிதனின் தீய நண்பன் அந்த வீட்டுக்கும் போவான்.மீண்டும் அவ்வீட்டை கெடுப்பான் அது போல தான் கர்மா என்கிற பாவமும் ஆன்மாவுடன் போகும் மீண்டும் தவறு செய்ய வைத்து மனித வகுப்பிலே படிக்க செய்கிறது. அதனால் முடிந்தவரையில் பாவம் செய்யாமல் தீய நட்பு கொள்ளாமல் நன்மை செய்து வாழ்வோம்   

புண்ணியத்தின் பலன்


அப்போது நாம் செய்த நன்மையின் பலன் என்பது எங்கே என்றால் நாம் செய்த பாவத்திற்க்கு போகும் . இதை விளக்கமாக சொன்னால் நன்மை என்பது நாம் சம்பாதித்து வாங்கும் பணம் போல, பாவம் என்பது செலவு செய்வதற்க்கு வாங்கி கடன் போல, கடன் நிறைய வாங்கி வைத்து பணம் சம்பாதித்தால் அது கடனுக்கு தான் போகும் சொத்தில் சேராது அதாவது புண்ணியத்தில் சேராது 


இன்னும் இது பற்றி பின்வரும் பதிவுகளில் காண்போம் பின் மூலிகை மர்மம் செல்வோம்





No comments: