June 19, 2017

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-8

வானூர்தி மற்றும் சமிக்ஞை கோபுரம் (AIRCRAFT AND SIGNAL TOWER) நுட்பத்தை காண்போம்

அதற்கு முன் என் சில முடிவுரைகளை தொடக்கத்திலேயே கூறிவிடுகிறேன்.தமிழராக பிறந்த நாம் இன்று வேற்று மொழியினரால் ஆளபடுகிறோம்.தமிழனுடைய தொன்மை,பண்பாடு,பூர்வ கலைகள்,விஞ்ஞான பார்வை என அனைத்தையும் மறைத்து அதற்கான சான்றுகளை அழித்து அயல்நாட்டின் பண்பாடுகளை சிலர் புகுத்தி வருகின்றனர்.

இதற்கு காரணம் யாருடைய பண்பாடு பின்பற்றபடுகிறதோ அவர்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும்.அவர்கள் ஆட்சியின் கீழ் மக்கள் வளர ஏதுவாக இருக்கும்.ஆனால் தமிழன் பண்பாடு, நாகரீகம் என்பது அழிக்க ஏதுவாக உள்ள ஓலை சுவடிகளிலோ, செப்பேடுகளிலோ,கல்வெட்டிலோ மட்டும் இருப்பது அல்ல எல்லாவற்றையும் தாண்டி அவனுடைய மரபணுவிலே காலம் காலமாக பிரதி எடுக்கப்பட்டு வருகிறது ஆக அதை யாராலும் அழிக்க முடியாது என்பதை கூறிகொள்கிறேன் அது யாருடைய சிந்தனை மூலமாக வெளிவந்து கொண்டே இருக்கும் இது உண்மை.

இதையும் புரிந்து கொண்ட அயல்நாட்டினர் அம்மரபணுகளை சிதைவை ஏற்படுத்தவே மரபணு மாற்றிய உணவுகளை மறைமுகமாக கொடுத்துவருகிறான். ஆனால் தமிழன் தன் தூக்க நிலையிலும் மரபணுவை காப்பற்றும் வழிமுறை அவனுக்கு அந்த இறைநிலை வழங்கியுள்ளது.ஆக அவன் இத்தீய சக்திக்கு எதிராக எப்போதும் இருப்பான் என முடித்து என்னுடைய கட்டுரைக்குள் உங்களை அழைத்து செல்கிறேன் வாருங்கள் தோழர்களே.

AIRCRAFT AND AUTOMATIC AIRCRAFT

அக்காலத்திலே வானத்தில் மிதந்து செல்லும் ஊர்திகளை மிகபெரிய மன்னர்கள் பயன்படுத்தி உள்ளனர்.அதற்கு நிறைய ஆதாரம் இலக்கியங்களில் உள்ளது.

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னோடு
வானவூர்தி ஏறினள் மாதோ
கானமலர் புரிகுழல் கண்ணகி தானென்
                                  (சிலப்பதிகாரம் மதுரைகாண்டம் கட்டுரை காதையில் எண்:196 - 200 )

சிலப்பதிகாரத்தில் கோவலனோடு கண்ணகியை மேல் உலகம் என கூறும் இடத்திற்க்கு கூட்டி செல்ல அமரர் அரசன் இந்திரன் வானில் உலவும் தேரோடு வந்து இருவரையும் கூட்டி சென்றான் என கூறுகிறது.

ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்
                  (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:233)

பண்தவழ் விரலில் பாவை பொறிவலந் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பிறக்கும்: வெய்ய
புண்தவழ் வேல்கண் பாவை பொறி இடந் திரிப்பத் தோகை
கண்டவர் மருள் வீழ்ந்து கால் குவித் திருக்கும் அன்றே
                       (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:239)

துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்
                        (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:273)

எஃகு என விளங்கி வான்கண் எறுகடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய்மயில் ஊடும் ஆங்கண்
வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள்
                        (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:299)

மேற்கண்ட பாடலில் கதையின் சுருக்கம் கூறுகிறேன்.எதிரியிடம் இருந்து தப்பி செல்ல விரைவாக வானவூர்தி செய் என ஆணையிடுகிறான் அறிவு என்னும் அமைச்சர்.
இவ்வாணை அவனுடைய மன்னர் சச்சந்தன் ஏற்று ஒரு மயிற்பொறி செய்யுமாறு அதற்கான ஆளைப்பணிக்கிறான்.

அவன் உருவாக்கிய மயிற்போன்ற வானூர்தி இயக்கம் எப்படி இருக்கும் என்றால் அதன் பொறியினை வலஞ்சுழி, இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அவ்வூர்தி வான் மேகங்களிடையே பறக்கவோ, தரையில் இறங்கவோ செய்ய முடியும்.அந்த ஊர்தி சிறிதும் துன்பம் தராமல் விரைவாக செல்லும் திறன் படைத்தது.போரின் அவசரத்தில் இருந்து தப்பி விசயை என்கிற மன்னனின் மனைவி தவறான பொத்தானை திருகியதால் அது சில தூரம் சென்று ஒரு சுடுகாட்டில் இறங்குகிறது இங்கிருந்துது சீவக சிந்தாமணி கதை பரபரப்பாக செல்கிறது.

நாம் பதிவுக்கு வருவோம் கம்பராமாயனத்தில் வானூர்தி பற்றி குறிப்புகள் காணபடுகின்றன அதில் எட்டு பேர் செல்லும் புட்பக விமானம் திருஞானசம்பந்தர் கூறும் மதிப்புமிக்க இராவணரிடம் இருந்ததாகவும் பின் அது இராமனிடம் சென்றதையும் கூறுகிறார் கம்பர். குறிப்புக்கு கம்பராமயணம் காணவும்.தமிழை வாழ்த்தி தமிழனை முழுக்க தவறாக சித்தரித்து விட்டார்.

புறநானூரில் ஒரு பாடல் உள்ளது. வானூர்தியில் யாரும் இல்லாமல் செல்லும் வகையில் அது உருவாக்கபட்டது குறித்து ஒரு அடி உள்ளது.

……………..வலவன் ஏவ வானவூர்தி
                       (புறநானூறு பாடல் எண்- 27)

வலவன் என்றால் இப்போது கூறும் விமான ஓட்டி(pilot)
இதை ஒரிசா பாலு அய்யா கூறும் போது இந்த அடிக்கு சான்றாக கடல்சார் பயணத்தில் ஆமைகள் மீது மர துண்டுகளை அக்காலங்களில் கட்டி விடுவர் அது மறுகரையான ஈழநாடுவரை எடுத்து செல்கிறது.அங்கு மக்கள் அந்த மரகலங்களை எடுத்து கப்பல் செய்தனர் என கூறுகிறார்.ஆளில்லாமல் பொருளை நாடு விட்டு நாடு அனுப்பியுள்ளோம் அதே போல் ஆளில்லாமல் வானவூர்திகளை அக்காலத்தில் அனுப்பியுள்ளோம் என கூறுகிறார்.

SIGNAL TOWER 

வானவூர்திகள் பற்றி ஆராயும்போது அதற்கு அவர்கள் சிலமரவகைகளை சமிக்ஞை கொடுக்க பயன்படுத்தியுள்ளனர் என கண்டறிந்தேன் ஓர் இடத்தில் இருந்து சென்று இன்னொரு இடத்தில் சேர்ந்தவுடன் மரத்தின் மூலம் தான் வந்து சேர்ந்ததாக தகவல் அனுப்புகிறார்கள்.

மரங்களை சமிக்ஞை கோபுரமாக பயன்படுத்தியுள்ளனர்.இது பற்றி அதிகம் நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை இருப்பினும் உயர்திரு ஓஷோ அவர்கள் தன்னுடைய HIDDEN MYSTERIES(மறைந்திருக்கும் உண்மைகள்) என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பு தருகிறார்.அதாவது ஒரு கிராமவாசி தன் கிராமத்தை விடுத்து பணி நிமித்தமாக அடுத்த கிராமத்திற்க்கு சென்றவுடன், தன் மனைவியிடம் பேச, அங்குள்ள ஒரு மரவகையை பயன்படுத்தி தன் கிராமத்தில் உள்ள அதே மரவகையின் மூலம் பேசியுள்ளான் என கூறுகிறார்.இதை ஆய்வு செய்த ஆய்வாளருக்கு கூட தெரியவில்லலை. ஏன், பேசுகிற அவனுக்கே இதை விவரிக்க முடியவில்லை பின் எப்படி என்றால் பாரம்பரியமாக இதை அவன் செய்கிறான்.அதனால் அது முடியும் ஆனால் நம்மால் அதை அறிய முடியாது என கூறுகிறார்.

இது சாத்தியமா என என்னிடம் கேட்டால் நூறு சதவீதம் உண்மை அதற்கு நான் பெரிய புத்தக விளக்கம் தான் கொடுக்க வேண்டும் அது இயல் தமிழ் ,இசைதமிழோடு தொடர்புள்ள ஒரு விடயம் அது பற்றி இன்னும் ஆழமாக நான் ஆய்வு செய்யவில்லை.செய்தவுடன் இறையருள் மூலம் வெளிவரும்.

இதனுடைய மாறுபட்ட வெளிபாடு தான் SIGNAL TOWERS இதுவும் மரமும் ஒரே மாதிரியாக இருப்பதை கவனிக்கவும்.காலத்தின் கோலம் மரம் நடாமல் TOWER ஆக நடுகிறோம் இவை புற கருவி இல்லை என்றால் வேலை செய்யாது என்பதை நினைக்க வேண்டும்

இறுதியாக நான் கூறவருவது தமிழில் ஏராளமான விடயங்கள் உள்ளது. ஆனால், வெளிகொணர ஆட்கள் போதவில்லை. என்னுடைய கட்டுரைகள் உங்களிடம் தூண்டுதல் ஏற்படுத்தி சிந்திக்க வைத்தால் அது தான் என் வெற்றி.மேலும் உங்கள் மரபணுவில் இவைகள் பதிவு செய்யபட்டுள்ளது அதை நான் ஒரு கருவியாக இருந்து நியாபக படுத்தியுள்ளேன்.
                           

உங்கள் சித்தர் அடிமை
இரா.சங்கர்
ஈரோடு

வாழ்க தமிழ்; வளர்க நம் கலைகள்

1 comment:

jay said...

Miga Arumai ..