August 30, 2016

மறைக்கபட்ட தமிழர் கலைகள் பாகம் – 2

யாளியும் தமிழனும் ஓர் ஆய்வு


யாளி இந்த பெயரையும் விலங்கையும் நாம் கேள்விப்படுவது கோவில்களில் தான். அங்கு தான் இதன் சிற்பம் வைக்கப்பட்டு இருக்கும்.


மகரயாளி
இந்த யாளிக்கும் தமிழர்க்கும் என்ன சம்பந்தம் என ஆராய்வோம் அதற்கு முன் யாளி பற்றி தெரிந்து கொள்வோம். யாளி என்ற விலங்கை பற்றி ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளை வைத்து கூறுகிறேன் இதற்கென தனி நூல்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை அதான் மிக பெரிய கொடுமை.
அங்கோவாட்







கஜ யாளி 
யாளி…. ஒரு அறிய வகை சங்ககால விலங்கு அந்த விலங்கு அழிந்துபோன உயிரினம். அது டைனோசர் கால விலங்கு. இது நம் லெமுரியா மற்றும் தமிழ் நாட்டில் இருந்த விலங்குதான், அதிகம் பலம் கொண்ட விலங்கு. இது சிம்மயாளி, மகர யாளி , கஜயாளி, ஞமலியாளி,  பெரு யாளி(சிறிய வகை ) பெருச்சாளி அல்ல அது போன்ற எலிவகையான யாளி என கூறுகிறார்கள்
ஒரு யானையின் தந்தம்
யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது கஜயாளியும்,சிம்மயாளியும் தான் இதை கண்டால் அனைத்துவிலங்குகளும் நடுங்கும் டைனோசர் உட்பட. இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள் ஒரு யாளி பத்து காட்டுயானைகளுக்கு சமம்,காட்டு யானை என்றால் இப்போது உள்ளவை அல்ல 10000 BC படத்தில் வருமோ அதுபோல பெரியது.

அங்கோர் வாட் யாளியும்  டைநோசர்
இப்படிபட்ட யாளியை நம் தமிழர்கள் எப்படி அடக்கினார்கள் என்று தானே கூறுகிறீர்கள் அது தான் நம் தமிழரின் நுணுக்கமான வீரம்.

யாளியை அடக்குபவன் மாவீரனாக இருக்கவேண்டும். அவன் சில மூலிகைகளின் பலம் கொண்டு, யாளியை அடக்கும் ஆற்றல் பெற்றவன் கஜகேசரி ஆவன்(வீரன் என்பவன் தனி ஆட்களை சமாளிப்பவன், மாவீரன் என்பவன் நூறு வீரர்களை ஒரே போரில் சமாளிக்கும் திறன் கொண்டவன்)

பெரு யாளி
இந்த மூலிகைகள் என்னென்ன என சித்தர்கள் பாடல்களில் தெளிவாக உள்ளது.சில மூலிகைகளை உண்டால் யாளியின் பலம் கிடைக்கும் என கொடுத்து இருப்பார்கள். அதை வைத்து யாளியை அடக்கி அதற்க்கு கடிவாளம் போடுவார்கள் பின் அதை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பார்கள்.
ஆனால் பின் வந்தவர்கள் விளக்கவுரையில் ஒரு யாளின் பலத்தோடு பெண்ணை புணரலாம் என  கொடுத்துள்ளனர். சில விளக்கம் பரிபாஷையாக உள்ளதை நாம் புரிந்து கொள்ளாமல் போனோம். இதை வேறு வகையான புரிதல் கொண்டதால் விளக்க முடியாமல் போனது

    புணர்தல் என்பதற்க்கு சந்தித்தல் என ஒரு விளக்கம் தொல்காப்பியம் கூறுகிறது          
                                                ------தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் 108)

யாளியை அடக்கிய மாவீரன் மதிப்பு மிகுந்தவனாக இருந்திருக்கிறான்,அதுவும் கஜயாளி அடக்கியவனை மிகபெரிய தலைவனாக மதிக்கபட்டுள்ளான்.  அந்த மாவீரன் பட்ட பெயராக கஜகேசரி என அழைக்கபடுவான் . எல்லாம் மூலிகை மூலம்தான் என்றாலும் அதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா.

சரி யாளி எப்படிபட்டவை யாளிகள் தெய்வீக தன்மை கொண்டவை எனவும் இசைக்கு மயங்கும் தன்மை உள்ளவை என்றும் கூறுகிறார்கள் இது சரியான ஆதாரம் இல்லை.  

கோவில்களில் முகப்புகளில் இந்த யாளியின் உருவம் இருக்க காரணம் இதை கண்டால் தைரியமான விழிப்புணர்வு கிடைக்கும் என்கிறார்கள்.இந்த யாளியின் எழும்புகளில் இருந்து உருவாக்கபட்டதே யாழ் இசை கருவி என்றும் குறிப்பிட்ட யாழ் மிகவும் அதிகபடியான ஒலியலைகளை கொண்டதாக இருந்தது எனவும் உயிரை கொன்றது எனவும் கூறுகிறார்கள்.

காலத்தால் இவை அழிந்து மரவகைகளை பயன்படுத்தி யாழ் செய்யபட்டதாக கூறுகிறார்கள்.

யானை, சிங்கம் அமைப்புள்ளதை கஜயாளி என்றும்,சிங்கம் போல் உள்ளதை சிம்மயாளி என்றும் ஆடுகளைபோல் கொம்பும் சிறிய வால் உள்ளதை மகரயாளி என்றும்,நாய்போல் நாக்கு மிக நீளமானதை ஞமலியாளி என்றும் பெருச்சாளியை போல் உள்ள சிங்கமுக உயரம் குறைவாக உள்ளதை பெருயாளி என்றும் கூறுவர்.

யாளி குறித்த மருத்துவ பாடல்கள் கீழே

நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
யாளி யென விஞ்சுவார் போகத்தில்(போர்களத்தில்)
                    -அகத்தியர்

நிரச்சொன்னர்  மெய்யாம் தகரையை ஒத்த
யாளி(ஆழி),அன்னர்(அன்னம்),புலத்து கையான் தகரை
ஒத்துகால்             
                        ----தேரையர் 

யாளி கற்பனை விலங்கு அல்ல அதற்க்கு லெமுரியா கண்டம் அகழ்வாரச்சி செய்தால் தான் தெரியும் என்பதால் வெளிநாட்டவர் டைனோசர்தான் பலம் வாய்ந்த விலங்கு என்கிறார்கள், ஆனால் அங்கோர்வாட் கோவிலில் டைனோசரை காட்டிலும் யாளியின் சிற்பம் அதிகம் உள்ளது என இங்கு சுட்டுகிறேன். டைனோசர் உருவம் சில தான் உள்ளன

டைனோசாசர் சுட்டி காட்டும் வெள்ளையர்
டைனோசர்களை பார்த்து வியக்கும் ஆங்கிலேயர்கள் அதற்க்கு மேலான யாளியையே கட்டி ஆண்டுள்ளான் என்பது, தமிழனின் வீரத்தை பறை சாற்றும் விதமாக உள்ளது. கோவில்களில் இதற்கு யாளி சிற்பத்தின் மீது தமிழன் இருப்பது சான்றாக உள்ளது.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு 

நன்றி
வாழ்க வளமுடன்


No comments: