August 21, 2016

மறைக்கப்பட்ட தமிழர்கலைகள் பாகம் - 1

யாழ் மீட்டி யானையை வீழ்த்தும் தமிழர்கள்

 யாழ் மீட்டுதல் - ஓர் ஆய்வு

யாழ் மீட்டுதல் ஒரு பெரிய கலையா? என்றால் இல்லை,ஆனால் யாழ் மீட்டி ஒரு உயிரை பறிப்பது, உடலை பொத்தல் பொத்தலாக கிழிப்பது என்றால் பெரிய கலை தானே.

சாதரணமாக யாழ் இசைக்காக உருவாக்கபட்டது தான். முதல் யாழ், வில் யாழ் என கூறுகிறார்கள்.

இங்கு யாழ் பற்றிய மறைக்கப்பட்ட விடயங்களை மட்டும் ஆராய்வோம்.

யாழ் வைத்து போர் செய்யும் உத்தி ஒன்று உள்ளது. அதாவது படை கொண்டுவருவோரை தடுத்து நிறுத்தி யாழ் மீட்டி அவர்களுடைய உடல்  நரம்புகளை வெட்டி(cutting) விடுதல்


காலட்படையை தாக்க வில்யாழ், யானைகளை மட்டும் தாக்க மகரயாழ், குதிரை மட்டும் தாக்க சகோட யாழ், செங்கோட்டியாழ், படைவீரர்களுடன் சேர்த்து தாக்க *பேரியாழ்.* இது எல்லாம் இசையிலும் பயன்பட்டது ஆனால் போரில் பயன்படுத்தும் முறை வேறு.

யாழ் மீட்டுதல் போர்முறையில் மீட்டலின் தெருட்டல்,உருட்டல் வகையில் அதிகபடியாக மீட்டுவதை குறிக்கிறது.

யாழிசை நூல் என்பது நரம்பின் மறை
     ---- தொல்,எழுத்ததிகாரம்

இங்கு நூல் என்பது யாழில் இசை மீட்டும் குறிப்பு நூல்(புத்தகம்)

இந்த யாழ் குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு தயாரித்தால் மட்டுமே இது போன்ற முறைக்கு வேலை செய்யும் என்பது குறிபிடதக்கது.


இவை அனைத்தும் இயற்கையாக உள்ள மரம் , விலங்குகளிடம் இருந்து மூல பொருள் எடுப்பது என்பது யாழிசை நூல் கூறுகிறது.

இப்படி தயாரித்த யாழை வைத்து தான் போரில் வெற்றி பெற்றனர்.

இந்த கலை நம்மிடம் கற்று சீனர்கள் போரில் பயன்படுத்தி வந்தனர்.

இதை பற்றி சீன படத்தில் இந்த கலையை காட்டி இருப்பார்கள்,அது பற்றி அந்த இயக்குனர் கூறுகிறார்.


இது குறித்து Stephen chow (இயக்குனர்)

" kung fu hustle படத்தில் pipa,zheng( யாழ் போன்ற சீன இசைகருவி) மீட்டி எதிராளியின் உயிர் நரம்புகளை அழித்துள்ளனர். இது பண்டைய சீன போர்கலையில் நாம் மறந்த கலை அதையே காட்டியுள்ளோம்." என்றார்

உண்மையில் அவர்கள் மறந்த கலை அல்ல. நாம் இழந்த போர் கலை தான் இது. இந்த pipa,zheng இசைகருவி மகரயாழ் , செங்கோட்டியாழ் வகையை சார்ந்தது.
 
சீன யாழ்

சீன யாழ்

இந்த யாழில் இருந்து தான் வீணை உருவாக்கபட்டது இது யாழ் இருக்கும்போதே உருவக்கபட்டது. இது வந்ததால் தான் யாழ் மறைந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற யாழ் இப்போது தயாரிக்க சில மூலபொருட்கள் இல்லை என ஆய்வு சொல்கிறது

யாழ் மீட்டி மீன் பிடித்தல்,இறை வழிபாடு செய்தல் என பலவகையில் யாழ்கள் பயன் தந்துள்ளது.


எது எப்படியோ இந்த *யாழ்மீட்டி போர்கலை* அழிந்தது, மறைந்தது என்பது வருந்தம். தமிழன் போர்கலை மிகவும் வலிமை என்பது இதுவும் ஒரு சான்று.

வாழ்க தமிழர்கலைகள்

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

1 comment:

Anonymous said...

டேய் யாழ் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றால் சும்மா இரு. தப்பு தப்பாக எதையும் சொல்லாதே..தமிழ் இசை செத்து விட்டது.நீ சங்கு ஊதாதே.. நாங்கள் விரைவில் உயித்தெழ செய்வோம். தேவையற்ற யூகத்தை தவிர்க்கவும். நன்றி.