May 30, 2013

தாமரை( சந்திரன் சுருங்கி) - மூலிகை மர்மம்


தாமரைமலர் மகத்துவம்


தாமரை மலரில் செந்தாமரை,வெள்ளைதாமரை என இரண்டு உண்டு இரண்டும் ஒரே பயனைத்தான் தருகிறது. தாமரைமலரின் மகத்துவம் பற்றிசொல்லவேண்டுமானால் நிறைய சொல்லலாம்.ஆனால் பதிவின் நீளம் கருதி முக்கியமான சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

யானை தாமரைக்கொண்டு பூஜித்தல்

தாமரையுடன் விநாயகர்

தாமரையுடன் குருவாயூரப்பன்


எப்போதும் தாமரையுடன் காட்சி தரும் விஷ்ணு பகவான்

பிரம்மா தாமரையுடன்


சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான மலர் தாமரை தான், தாமரைமலர் கொண்டு சிவபெருமானை அர்ச்சனைசெய்தால் உடனே நினைத்தகாரியம் கைகூடும். உதாரனமாக:விஷ்ணுபகவான் ஆயிரம்தாமரைமலர் கொண்டு அர்ச்சித்துதான் சுதர்சனரை பெற்றார். ஆயிரத்தில் ஒன்றாக அவர்கண்ணும் அடங்கும். மேலும் பல தெய்வங்கள் தாமரைமலர் கொண்டு பெருமானை அர்ச்சனை செய்கின்றனர். பிரம்மா,விஷ்ணு,கணபதி,முருகன்,அன்னைபார்வதிதேவி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
திருச்செந்தூர் முருகன் தாமரையுடன்

ஆகையால் பெருமானிடம் வேண்டுதல் வைப்பவர் வில்வத்திலும் மேலான தாமரையும் சேர்த்து கொண்டு அர்ச்சனை செய்யுங்கள் எடுத்தக்காரியம் தடையின்றி நிறைவேறும்.உதாரணம்: திருச்செந்தூர்முருகனைபோல,திருமால் எப்போதும் தாமரையை கையில் வைத்து கொண்டேயிருப்பார்.

ஆயிரம் தாமரையை கொண்டு திருமால் சுதர்சனம்  பெறுதல்
தாமரை சூரியபகவானுக்குரிய மலராகும், மேலும் அனைத்து உபதெய்வங்களும்(சிவபெருமானையும்,ஆதிசக்தியும் தவிர்த்து) தாமரைமலர் மீது நின்றவண்ணமே காட்சிதருகின்றனர். அனைவரும் ஆயிரத்தெட்டு இதழ்கமலத்தைகடந்தவர்கள். ஆதலால்தெய்வமாகினர்.

ஆதிமூலவரும்,ஆதிசக்தியும்தான் பரம்பொருளின் ஆசியுடன் மற்ற தெய்வங்களை படைத்தனர்.
  

தாமரைக்கிழங்கின் பயன்கள்


இக்கிழங்கால் பித்த சம்பந்தமான நோய்கள் நீங்கும். இதயம், நுரையீரல் பாதிப்பால் ஏற்ப்பட்ட காசநோய், சளி போன்றவற்றை குணப்படுத்தும், கண்நோயிக்கு இதை சூரணம் செய்து சாப்பிடலாம், மேலும் இதிலிருந்து தைலம் தயாரித்து தலைக்கு தேய்த்து குளித்தால் கண்நன்றாக தெரியும்.


தாமரை பூ


நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது. வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி குணமடையும் என்பர். மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும்.

தாமரை 


தாமரைத்தண்டை எடுத்து நூல் தயாரித்து ,காப்புகட்டுவதற்க்கும் பயன்படுத்துவர்.
தாமரையின்கிழங்கிற்க்கு கீழே ஆணிவேர் உண்டு அதையும் எடுத்து பயன்படுத்துவர், ஆணிவேர் நட்சத்திரம் பார்த்து எடுக்கவேண்டும்.

தாமரை ஜாலம்


தாமரை விதையை பொடிசெய்து பாலில் கலக்கினால் தண்ணீர் போல ஆகிவிடும்.இயற்க்கை நிறம் வருவதற்க்கு வெய்யிலில் வைத்தால் வந்துவிடும்.அன்னபறவையை போல நீரும் பாலையும் பிரித்துவிடும்


சிவபெருமானை பற்றி சில தகவல்கள் ஒரு பதிவில் தரப்படும்








2 comments:

Sankar m said...


VERY VERY Nice one. thank u sankar. maha.gobi.

Sankar m said...

Excelent article. thank you sankar ,for give me the details of LOTUS.