December 24, 2014

பிரம்மா ஓர் உண்மை விளக்கம்

பிரம்மா

                 பிரம்மா என்பவர் மும்மூர்த்திகளில் ஒருவர், படைப்பு தொழில் செய்யும் கர்த்தா,சரஸ்வதி கணவர் , விஷ்ணுவின் மகன் என்று பலர்
கூறுகிறார்கள் எல்லாம் சரிதான் ஆனால் விஷ்ணுவின் மகன் என்பது சற்று கவனிக்க வேண்டும் இதை சிலர் தவறாக கருதுகிறார்கள் 

பிரளயகாலத்தில் அதாவது யுக முடிவில் பிரம்மா உட்பட அனைத்து தேவர்களும் அழிக்க படுவார்கள் மீண்டும் நாரயணர் வந்து பிரம்மாவை படைப்பார் பிரம்மா மற்றவற்றை படைப்பார்.

சரி ப்ரம்மாவை எப்படி படைக்கிறார் என்றால் இறைவன் திருமால் சிறு பிள்ளையாக ஆலியிலை மீது அமர்ந்து உலகை வலம் வருகிறார் அனைத்தும் அழிந்ததை உறுதி செய்த பின்னர் விஷ்ணுவாக மாறுகிறார் ஆலியிலை ஆதிசேசனாக மாறுகிறது பின் விஷ்ணு தியானத்தின் மூலம்,  பிரம்மா உண்டாக என்று நினைத்தவுடன் பிரம்மா வருகிறார், எங்கிருந்து தொப்பூள் என்கிற நாபிகமலத்திலிருந்து, ஏன் நாபியிலிருந்து வரவேண்டும் காரணம் உண்டு
இறைவன் கொடுத்த சிலை ரங்கநாதர்

மனிதன் வடித்த சிலை

நமது எண்ணங்கள் அனைத்தும் நாபியிலிருந்ந்து தான் கிளம்புகிறது,அங்கு தான் காற்று தங்குகிறது நமது எண்ணத்திற்க்குதான் மனம் என்று சொல்லுவார்கள் அம்மனத்திற்க்கு உருவம் கிடையாது ஆனால் அது காற்றாக மாறி எண்ணமாக வெளிப்படும் அப்படி வெளிப்பட்டவர் தான் பிரம்மா

எண்ணம் என்கிற படைப்பின் மூலம் உருவானவர் தான் பிரம்மா.பிரம்மாவும் அவ்வாரே தியனித்து சிருஷ்டியை படைக்கிறார் இங்கு எண்ணம் என்பதற்க்கு ஆசை என்ற ஒரு பெயரும் உண்டு, இன்னும் சிலர் தியனத்தின் மூலம் அனைத்தையும் பெறலாம் என்பதற்க்கே விஷ்ணுவின்  தொப்பூள் மூலம் பிரம்மா வந்தார் என்று சிலை வடித்தனர் இதை கொண்டு குறைகூறும் ஒருஇனம் திருமாலை தவறாக கருதுகின்றனர்
திருச்சிராப்பள்ளி

அவர்களுக்கு ஒரு சான்று தருகிறேன்,விபிஷணன் விஷ்ணுவின் சயன கோலத்தை சிலையாக  வேண்ட,விஷ்ணுவே தந்த ஆத்ம லிங்கத்தில் பிரம்மா இல்லை என்பது திருச்சி ரங்கநாதர் திருமேனியில் காணலாம்
மற்ற சிலைகள் எல்லாம் மனிதனால் செய்யப்பட்டது
திருப்பட்டூர் பிரம்மா

மேலும் கடப்பை சச்சிதானந்தர் கூறுவதை கேளுங்கள்
புத்தகத்தில் பிரம்மா
கடப்பை யோகீஸ்வரர்

திருமாலின் கர்ப்பபையிலிருந்து எல்லாம் பிரம்மா வரவில்லை ஆண் கடவுளுக்கு கர்ப்பபை கிடையாது

பிரம்மாவை வணங்க அற்ப்புத தலங்கள் திருப்பட்டூர்,கொடுமுடி(திருபாண்டி கொடுமுடி) ஏன் இவை என்றால் இங்கு பிரம்மாவுக்கு தனிச் சன்நிதி உண்டு





No comments: