April 30, 2012

கஞ்சமலை சஞ்சீவி லிங்கம் என்னும் சுயம்பு லிங்கம்

                                      

சஞ்சீவி லிங்கம் என்னும் சுயம்பு லிங்கம் 

இது மலை அடிவாரத்தில் இருந்து 3650 அடி உயரத்தில் இருக்கிறது இங்கு செல்ல முதலில் 77  அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை உள்ளது இதை முதலில் தரிசனம் செய்து விட்டு பின் சிறிது தூரத்தில் நாகதேவி சிலை உள்ளது இங்கு மஞ்சள் குங்குமம் இட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும் அதன் பிறகு அடிவாரத்தில்  கஞ்சபெருமாள் என்கிற தசாவதார பெருமாள் கோவில் இருக்கிறது.  இங்கிருந்து தான் பாதை தொடங்குகிறது இங்குள்ள கருப்பு நிற பைப் தொடர்ந்து சென்றால் சஞ்சீவி லிங்கத்தை காணலாம் அது அங்குள்ள ஊற்று நீரில் இருந்து வருகிறது பைப்யின் மூலம் ஊற்று நீரை கீழே கொண்டுவருகிறார்கள். மேலும் அது சற்று கடினமான பாதையாக உள்ளது மேலும் சிறுவர்கள் பெண்கள் செல்லுவது மிக கடினம் ,பாதை செங்குத்து மேடுபோல் உள்ளது விட முயற்சி உடன் செல்ல வேண்டும் முதலில் பாம்புகள் உள்ளபகுதி வரும் பின் மாட்டு எலும்பு பகுதி அதன் பின் ராமர் கொடிமரம் இங்கிருந்து பார்த்தால் சஞ்சீவி மேடு தெரியும் இங்கு தான் ஐயன் எம்பெருமான் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார் இவரை நேரில் தரிசனம் செய்து விட்டால் கைலாயத்தை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் இது உண்மை இதை சுழுமுனை சித்தர் கூறுகிறார். இதன் பாதை மற்றும் படங்கள் உங்கள் பார்வைக்கு 
77  அடி ஆஞ்சநேயர்  
நாகதேவி 

தசாவதார பெருமாள் 

மாட்டு எலும்புடன் எனது நண்பர் 
சஞ்சீவி மேடு 

பாம்புகள் உள்ளபகுதி



சஞ்சீவி லிங்கம்


சஞ்சீவி லிங்கத்தை தரிசனம் செய்து இன்புற்று வாழ்வீர்களாக ஓம் சிவாய நம:







April 17, 2012

கஞ்சமலை சடையாண்டி சித்தர்

                                          

சித்தர் குகை 

சடையாண்டி சித்தர் 

சடையாண்டி சித்தர் கோவில் 
                                      






சடையாண்டி முக்தி அடைந்த இடம்




சடையாண்டி ஊத்து 


சடையாண்டி சித்தர் என்பவர் இந்த பகுதியில் மாடு மேயித்துகொண்டிருந்த ஒரு நபர். இவர் இங்குள்ள ஊற்றுக்கு பக்கத்தில் உள்ள சிவன் சிலைக்கு வழிபாடு நடத்திவந்தவர்  .சப்த கன்னிமார்கள் மாடு மேய்க்கும் பெண்களாக வந்து ஒரு நாடகம் நடத்தி அதன் மூலம் முக்தியும்  அளித்தனர் . ஒரு நாள் இவர் இங்கு மாடு மேயித்துக்குகொண்டிருக்கும் போது,  ஏன் இங்கு நீங்கள் பெண் தெய்வத்தை வழிபடவில்லை என்று ஒரு பெண் கேட்டாள் அதற்க்கு பெண் துணை எனக்கு தேவையில்லை என்று சொன்னார் , இன்னொருபெண் நாங்கள் இல்லாமல் நீங்கள் பிறக்கவும் இல்லை, மணக்கவும் இல்லை,துறக்கவும் இல்லை, இப்படி எல்லா விதங்களிலும் உதவி செய்து கொண்டிருக்கிறோம் என்றாள் இதை கூர்ந்து கவனித்த  பின் தன் தவறை உணர்ந்தார். இதுவரை நான் உங்களை பார்த்ததே இல்லை யார் அம்மா நீங்கள் என்று கேட்டார் உடனே தன் சுயஉருவிற்கு வந்து  பின் அவருக்கு ஆசிகள் வழங்கினர்   இப்போது சிவபெருமான் ஆணையை ஏற்று  உனக்கு முக்தி வழங்க போகிறோம் என்று சொல்லி உடனே மறைந்தனர். அவருக்கு ஒன்றும் புறியவில்லை பின் கீழ் நின்றுகொண்டுயிருந்த மக்கள் மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்களை காணவில்லை இவன் தான் மறைய வைத்து விட்டான் என்று சடையாண்டியை  துரத்தினர் அவர் இங்குள்ள ஊத்துக்குள் தன் மாடுடன் சென்று மறைந்துவிட்டார் (முக்தியடைந்துவிட்டார் ) அன்று முதல் இந்த ஊத்து சடையாண்டி ஊத்து என்று அழைக்கப்படுகிறது   இந்த ஊற்று வற்றாமல் இன்றும் வந்துகொண்டிருக்கிறது மேலும் இதில் குளித்தால் பிணிகள் அகலும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை 







                                                      

April 11, 2012

கஞ்சமலைச்சித்தர்

                                    கஞ்சமலை 

சித்தர் குகை 

அகத்தியர் பரிபூரணம் 1200 நூலில் இருந்து எடுக்கப்பட்டது 


தானான கஞ்சமலை நடுவிலேதான் 
சதிரான கரும்பாறை யதர்க்குமேலே 
தோணாது அதினில் ஒரு குகைதானுண்டு 
துவார  மென்ன இடிகிணறு போலேகாணூம் 
காணாத இடிகிணற்றின் பாகந்தனில்
கருவனான வாசலுண்டு உள்ளே சென்றால்
கோணாத வட்டமாங்  குகை மேலாக 
கொடுவளைமேல் பரணியுண்டு கூர்ந்துபாரே 

கூர்ந்துபா ரப்பரணி தன்னிலேதான் 
குருவான செந்தூர மெழுகுபற்பம்
சார்ந்துபார் தைலமொடு உதகஞ்செயநீர் 
சங்கையில்லா குப்பிகளில் மெத்தவுண்டு 
சேர்ந்துப்பார்த் ததைஎடுத்துத் தவசுபண்ணி  
சிவயோகத் தில்தோணச் சேந்துநில்லு 
ஆயிந்துஅந்தச் சரக்குவைப்பு கஞ்சமலைச்சித்தர்
அன்புவைத்துச் செய்தமுறை அறிந்துபாரே   
                                                                       
                                                                (அபபூ-1200    197 , 198 )

இந்தகுகை காலங்கிசித்தர் வாழ்ந்தகுகையாகும்