Showing posts with label மின்நூல்கள். Show all posts
Showing posts with label மின்நூல்கள். Show all posts

March 2, 2017

தமிழ் மின் நூல்கள்

 ஆன்மீகம் சார்ந்த நூல்கள் கீழ்காணும் லிங்க் கூகுள் டிரைவில் உள்ளது டவுண்லோடு செய்து கொள்ளவும்







          click the link----------------> மருத்துவ நூல்கள் இங்கு கிளிக் செய்யவும்



நன்றி வாழ்க வளமுடன்

February 15, 2016

தமிழ் மின் நூல்கள்

நண்பர்களே தமிழ் மின்நூல்கள் தேவைபடுவோர்

கீழ் காணும் இணையதளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளுங்கள் இது முற்றிலும் இலவசம்



http://www.tamilnavarasam.com/



நன்றி நண்பர்களே இதில் அனைத்து வகையான நூல்களும் உள்ளன

                                                வாழ்க வளமுடன்







September 30, 2015

"சூட்சும ரகசியம் (ASTRAL SECRET)"



"சூட்சும ரகசியம் (ASTRAL SECRET)" புதிய நூல் வந்து விட்டது 


பாலன்  அவர்கள்  எழுதியது 
சூட்சும ரகசியம் 



புத்தகத்தின் உள்ளே மற்றும் முகவரி போன்  நம்பர்கள் 

புத்தகம்  உள்ளே 

அன்பு நண்பர்களே  புத்தகத்தில் நிறைய இரகசியத்தை  வெளிபடுத்தியுள்ளார் 

தவறாமல் வாங்கி படிக்கவும் 
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி 



June 24, 2014

மின் நூல்கள்

நான் இணையத்தில் கண்ட  சித்தர்கள் நூல்களின் இணைப்பை, இங்கு கொடுப்பதை கடமையாக கொள்கிறேன்.











 





இந்த லிங்கை கிளிக் செய்து சேவ் செய்யவும்



சித்தர்கள் தத்துவம்
அகத்தியர் - நாகமுனிவரின் நயனவிதி
அகத்தியமாமுனிவரின் அமுதகலைக் ஞானம் - 1200
அகத்தியமுனிவரின் பூரண சூத்திரம் 216
போகமுனிவரின் சரக்குவைப்பு எண்ணூறு
அகத்தியர் வாத சௌமியம் என்னும் சௌமிய சாகரம் - 1200
அகத்தியமாமுனிவர் பரிபூரணம் 400
நந்தீசர் கருக்கிடை 300 ஞானம் 100
அகத்தியர் கன்ம காண்டம் கெளமதி
போகர் ஜெனனசாகரம்



நூலை படித்து பயன்பெறுங்கள்

                                              ஓம் கோரக்கதேவாய நம!!!






October 28, 2013

கருவூரார்

சித்தர்களின் SUPERSTAR போகரின் இளைய தளபதி தான் கருவூரார்

கருவூரார் போகரின் சீடர்களில் ஒருவர்.போகருக்கு 63 சீடர்கள்,அதில் தலைமை பொறுப்பு கொண்டவர்கள் ஏழு பேர் ,அவர்கள்
போகரின் பிரதான ஏழு சீடர்கள்
புலிப்பாணி,கருவூரார்,கோரக்கர்,கொங்கணவர்,யாகோபு,ரோமரிஷி,பாபாஜி நாகராஜ். இவர்களின் தலைமை குரு வேறொருவராக இருந்தாலும் போகரின் கீழ் அந்தந்த தலைமை குருவின் அறிவுறுத்துதலின் பேரில் போகரிடம் சீடர்களாக சேர்ந்தனர்.நவபாஷாண சிலை செய்வதில் பெரும் பங்கு கொண்டவர்கள் இந்த ஏழு பேர்,இதில் கருவூராரும் ஒருவர், இவரை பற்றி பல கதைகள் உண்டு.
கருவூரார் மூல மந்திரம்
இரண்டு கதைகளுக்கு சான்று உள்ளது.ஒன்று தஞ்சை பெரியகோவிலின் சிலை நிறுவியவர் மற்றொன்று, சிதம்பரம் நடராஜர் சிலையை செய்தவர்.இரண்டும் போகரின் வழிகாட்டுதலால் செய்தார்
கருவூரார் நூல்

இவர் அட்டமாசித்திகளை மக்களுக்கு எளிதில் போதிக்க எந்திர முறையை கையாண்டார்.அனைத்து சித்தர்களின் கோபத்திற்க்கு உள்ளாகி பிறகு போகர் தடுத்தாட்கொண்டு சில ஏடுகளை மட்டும் தந்தார்.அதை தான் நாம் இப்போது கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து என்ற நூலாக படிக்கிறோம்.
போகரும் 63 சீடர்களும்

இந்த நூலை மூடர்களுக்கு கொடுக்காதே என்று இந்நூலில்லேயே கூறுகிறார் .சித்தர்கள் வலைதளங்களை பார்வையிடுபவர்கள் மூடர்கள் அல்ல மேலும் அவர்கள் ஆசியால் தான் இவ்வலை தளங்களை பார்வையிடுகிறோம். கருவூரார் அருளிய  கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து  என்ற நூலை பகிர்கின்றேன்




 நூலுக்கு மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

முந்தைய பதிவில் காக புஜண்டர் அருளிய மந்திரம் எது என கேட்ட நண்பர்களுக்கு,  அது நற்பவி என்பது தான் மந்திரம் என கூறிக்கொள்கிறேன்.. இது மிகவும் பிரசித்தி பெற்றது


                                                    ஓம் கருவூர்தேவாய நம!!!






October 14, 2012

உலக அழிவு 21-12-2012 PART 2

உலகம் அழிகிறதா?இல்லையா? என்ற கேள்விக்காக நான் இதை பதிவு செய்யவில்லை இந்த கட்டுரையில் பல விஷயங்களை உயர்திரு ராஜ்சிவா அவர்கள் ஆதரபூர்வமாக படஙளுடன் வெளியிடுகிறார் அதுதான் இந்த கட்டுரையின் சிறப்பு.மேலும் அவ்ர்கள் விமானம் ,ராகெட்,கால்பந்து விளையாடியது,அவர்கள் அமைத்த பிரமீடு விளக்கம்,விகிலீக்ஸ் பத்திரிக்கை பற்றி கூருவது அனைத்தும் வியப்பை தருகிறது. மேலும் ரகசிய கட்டிடங்கள் கட்டபடுவது என அனைத்தும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என பொதுவாக கூரியது எனக்கு மிகவும் பிடித்தது அதனால் தான் இதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என வெளியிடுகிறேன்.முதல் பகுதியை வெளியிட்ட மூன்று மணி நேரத்திலே (41)நாற்பத்தியோரு மெயில் வந்தது இரண்டாம் பகுதியை கேட்டு .இந்த கட்டுரை வெளிட்டதன் நோக்கம்.இதில் பல விஞ்ஞான தத்துவங்கள் அடங்கியுள்ளன என்றுதான்

உதாரணம்:
இந்தபடத்தை பெரிதாக்கி பார்க்கவும்




முதல் பகுதியில் 92 பக்கங்கள் உள்ள கட்டுரை பகிர்ந்துள்ளேன். இது 213 பக்கம் உள்ள முழு கட்டுரை அதை அப்படியே கொடுத்துள்ளேன் இதில் நான் எதுவும் திருத்தம் செய்யவில்லை இதன் அனைத்து பதிப்பு உரிமையும் உயிர்மெய் பத்திரிக்கையே சார்ந்தது தகவல்களை பகிர்ந்து கொண்டதற்க்கு உயர்திரு ராஜ்சிவா அவர்களுக்கு நன்றி.

இதோ அந்த முழு கட்டுரை

http://www.ziddu.com/download/20596603/JudgementDayEndOfWorld2Completed.pdf.html



October 10, 2012

உலக அழிவு 21-12-2012 PART-1

உலகம் அழிவு குறித்து பல பேர் கூறியிருக்கிறார்கள்.அதிலும் மாயன் காலண்டர் 21 டிசம்பர் 2012 உடன் முடிகிறது.பல பேர் அவர்களுடைய  காலண்டர் முடிகிறது என்கிறார்கள்.ஆனால் அவர்கள் ஏன் அதோடு நிறுத்தினார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும் அவ்ர்கள் காட்டுவாசிகள் அல்ல என்றும் மேலும் வேதியியல், வான சாத்திரம், ரசவாதம்,கட்டிடகலை போன்றவற்றில் சிறந்து விளங்கினர் என்றும்,இவர்களுக்கு எப்படி இந்த சக்திகள் வந்தது என்றும் நாம் பல உண்மையான விபரங்களை கீழே கொடுத்துள்ள மின்னூலை படித்து தெரிந்துகொள்ளலாம். இது உயிர்மெய் பத்திரிக்கையில் வந்த தொடர் இணையத்தில் கண்ட இந்த நூலை உங்களுக்கு தொடர்பு படுத்துகிறேன்


சூரியபுயல்

இதன் முதல் பகுதி 93  (213) பக்கம்:

http://www.ziddu.com/download/20566468/2012JudgementDay.pdf.html







September 25, 2012

ஷிர்ரடி சாயி பாபா - வரலாறு

சாயி பாபா 
சீரடி சாய்பாபா  அக்டோபர் 15, 1918மராட்டி மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (உருது: پیر) அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. இவருடைய வரலாறு கூறும் புத்தகம் கீழே கொடுத்துள்ளேன் 

July 24, 2012

போகர் ஏழாயிரம்

போகர் ஏழாயிரம் என்ற நூல் அகத்தியர் 12000 என்ற நூலுக்கு இணையானது 

போகர் ஏழாயிரம்

போகர் நூல்கள் 

  • போகர் 12000
  • சப்த காண்டம் 7000
  • நிகண்டு 1700
  • வைத்தியம் 1000
  • சரக்குவைப்பு 800l
  • செனன சாகரம் 550
  • கற்பம் 360
  • உபதேசம் 150
  • இரணவாகமம் 100
  • ஞானசாராம்சம் 100
  • கற்ப சூத்திரம் 54
  • வைத்திய சூத்திரம் 77
  • முப்பு சூத்திரம் 51
  • ஞான சூத்திரம் 37
  • அட்டாங்க யோகம் 24
  • பூசா விதி 20
போகர் ஏழாயிரம் என்ற நூல் டவுன்லோட் செய்ய இங்கு சொடுக்கவும் 


கொங்கணவர்




கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன.
கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.
     கொங்கணர் குருநாதரைச்சுற்றி வந்து வணங்கிவிட்டு, உடனே கிளம்பி சென்று உயர்ந்த மலை ஒன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் அமர்ந்து அம்பிகையை நினைத்து தவம் செய்து கொண்டிருக்கையில் மனதிற்குள் ஏதோ தோன்றவே, தவத்தைக் கைவிட்டு சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான ஒரு யாகத்தை ஆரம்பித்தார். அப்பொழுது கௌதமர் அவர் முன் வந்து “கொங்கணரே, தவத்தைச் செய்து அதன்மூலம் தான் சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விடு, தவம் செய்” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். எனவே யாகமும் நிறுத்தப்பட்டது.
     தில்லையை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகத்தை செய்ய ஆரம்பித்தார். யாகம் முடிந்ததன் பயனாக கொங்கணருக்கு ஏராளமான சித்திகள் கிடைத்தன. அதனால் நிறைய குளிகைகளை உண்டாக்கினார்.
     ஒருநாள் கொங்கணர் திருமழிசை ஆழ்வாரிடம் சென்று செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றினைப் பெருமையுடன் கொடுத்து, “இது காணி கோடியை போதிக்கும்” என்றார். ஆழ்வாரோ தம் உடம்பின் அழுக்கையே திரட்டி கொடுத்து “இரசவாதக் குளிகை இது காணி கோடியை ஆக்கும்” என்று கொடுத்தார். ஆழ்வாரின் பெருமையினை கண்ட கொங்கணர், அவரோடு நட்புறவு கொண்டார். திருமழிசையாழ்வார் சந்திப்பிற்கு பிறகு தவத்தில் ஈடுபட்டார்.
கடுந்தவம் பலன் தந்தது. இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் இரசவாதத்தில் கருத்தைச் செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிச்சை எடுத்த உணவை மட்டுமே உண்டார்.
     ஒருநாள் இவர் தவம் செய்து கொண்டிருந்த மரத்தின் மேலிருந்த ஒரு கொக்கு இவர் மேல் எச்சம் இட்டது. கொங்கணர் அந்தக் கொக்கை உற்றுப் பார்த்தார். உடனே கொக்கு எரிந்து சாம்பலாகியது.
      தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட கொங்கணர், திருவள்ளுவர் வீட்டிலே பிச்சையின் பொருட்டு வந்தார். அப்பொழுது வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார். அதன் பின் காலதாமதமாக பிச்சையிட வந்ததால் சினம் கொண்ட கொங்கணர், மாதே! என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி விழித்து நோக்கினார். ஆனால் அவ்வம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்த்தார். உடனே வாசுகி அம்மையார் நகைத்து “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!” என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
      திருவள்ளுவர் வீட்டிலிருந்து கிளம்பி வரும் வழியில் பெற்றோருக்குப் பணிவிடை செய்து அவர்களைத் தெய்வமாக வழிபடும் தர்மவியாதன் என்பவனைச் சந்தித்தார்.
      கொங்கணரைப் பார்த்ததும் தர்மவியாதன் ஓடிவந்து வணங்கினான். “சுவாமி! வாசுகியம்மையார் நலமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். கொங்கணருக்கு மேலும் வியப்பு. “அப்பா! நான் அங்கிருந்து தான் வருகிறேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
      தர்மவியதன், “சுவாமி! வாசுகி அம்மையார் கணவரிடம் பக்தி கொண்ட பதிவிரதை, அடியேன் பெற்றோர்கள்தான் தெய்வம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுபவன். இதனால் தான் எங்களிடம் ஏதோ சக்தி இருக்கவேண்டும்” என்று கூறி அவரிடம் விடைபெற்றான். கொங்கணர் உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த கொங்கணருக்கு மனம் கனிந்தது.
     கொங்கணர் போகரைச் சந்திப்பதற்கு முன் ப சித்தர்களைச் சந்தித்து சித்துக்கள் பல பயின்றார்.
      தம் குருவான போகரை அணுகி ஆசி பெற்றார். அப்போது அவர், “திருமாளிகைத் தேவன் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ, உனக்கு அமைதி கிடைக்கும்” என்று வழியனுப்பினார்.
   பின்னர் போகர் கட்டளைப்படியே திருமாளிகைத் தேவரை சந்தித்தார். கொங்கணரை எதிர்கொண்டழைத்து உபசரித்த திருமாளிகைத் தேவர், அவருக்கு பல இரகசியமான சாதனை முறைகளை உபதேசித்து சமய தீட்சை நிர்வாண தீட்சை முதலியனவற்றையும் உபதேசித்தார்.
அதன்பிறகு கொங்கணர் திருவேங்கட மலை சென்று தவம் செய்தார். அப்போது வலவேந்திரன் என்னும் சிற்றரசன் கொங்கணரைச் சந்தித்து அவர் சீடராக ஆனான். பலப் பல ஞான அனுபவ விவரங்களைக் கொங்கணரிடம் இருந்து அறிந்தான்.


கொங்கணவர் இயற்றிய நூல்கள்:
கொங்கணவர் வாதகாவியம் – 3000
கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500
கொங்கணவர் தனிக்குணம் – 200
கொங்கணவர் வைத்தியம் – 200
கொங்கணவர் வாதசூத்திரம் – 200
கொங்கணவர் தண்டகம் – 120
கொங்கணவர் ஞான சைதன்யம் – 109
கொங்கணவர் சரக்கு வைப்பு – 111
கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100
கொங்கணவர் வாலைக்கும்பி – 100
கொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் – 80
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45
கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40
கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21
கொங்கணவர் சுத்த ஞானம் – 16 

இத்துடன் கொங்கணவர் வாலைக்கும்பி – 100  என்ற நூலும் இணைத்துள்ளேன் 

கொங்கணவர் வாலைக்கும்பி – 100











July 20, 2012

கோரக்கர் தத்துவமும் உரையாடும் சம்பவமும்


கோரக்கர்



கோரக்கர் மகானிடம் ஒரு வணிகர் சென்று, '' வாழ்க்கையின் நிலையை தாங்கள் எனக்கு தெளிவு படுத்தவேண்டும் என்றார்.அதற்கு மகான்,"சிறிது நேரம் இங்கு நடப்பதை பார் என்றார். அப்போது ஒரு இளைஞர் அங்கு வந்தார். வந்தவர் இவரை போலி சித்தர்  என காட்ட வேண்டும் என எண்ணி கையில் ஒரு பட்டுபூச்சி கொண்டுவந்து,'' இது உயிருடன் தான் உள்ளதா அல்லது இறந்து விட்டதா என கையை மூடிக்கொண்டு கேட்டார். பூச்சி உயிருடன் உள்ளது என்றால் அதை கசக்கி விடலாம் என்றும்  இறந்தது என்றால் அதை அப்படியே விட்டு விடலாம் என எண்ணினார் அந்த வாலிபர் .அதற்கு கோரக்கர் சிரித்து கொண்டே அது இறப்பதும் பிழைப்பதும் உன் கையில் தான் உள்ளது
என்றார் அதிர்ந்து போனார் அந்த இளைஞர் .பின் அந்த வணிகரை அழைத்து இது போலத்தான் வாழ்க்கையின் நிலை அதை இருகபிடித்தால் வலிக்கும் பொது நலமாக விட்டால் இனிக்கும் எல்லாம் உன் கையில் தான் உள்ளது என்றார்


 எது தண்டுகளற்ற மரம் எதுசிறகுகள் அற்ற கிளி? எது கரைகளற்ற அணை? யார் இறப்பற்று இறப்பவர்?

இதற்கு விடை நூலின்உள்ளே.......   
                       
  கோரக்க போதம்


இத்துடன் கோரக்க போதம்என்ற நூலை இணைத்துள்ளேன். இது கோரக்கரும் அவரது குருவான மச்சேந்திரரும் உரையாடும் சம்பவமாகும்

                

July 6, 2012

ஔவையார்-நிறைவு பகுதி





ஔவையார் தான் இயற்றிய நூல்களான ஆத்திசூடி ,நல்வழி ,மூதுரை,கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை மதுரை தமிழ் சங்கத்தில் வெளியிட்டார். மேலும் அவ்வை குறள் ,விநாயகர் அகவல்,ஆசாரகோவை போன்றவையும் கொடுத்தார்.  


ஔவையார் மதுரையில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள பழமுதிர்சோலை சென்றார். இங்கு தான் முருக பெருமான் ஆடு மேயிக்கும் சிறுவன் வடிவில் வந்து ஆட்கொண்டு சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடினார் பின் தன் உருவத்திற்கு வந்து தெரிந்தது,தெரியாதது ,புரிந்தது,புரியாதது ,அறிந்தது,அறியாதது என கேள்விகனைகளை தொடுத்தார்.பின் அவ்வைக்கு அங்கிருந்து கைலைக்குசெல்லும் மார்க்கத்தையும் கூறினார் .பின் அங்கிருந்து கைலாசம் சென்று சிவபெருமானையும் பார்வதி தேவியையும் தரிசனம் செய்து முக்தி அடைந்தார்.   

ஔவையார் இயற்றிய நூல்களான ஆத்திசூடி ,நல்வழி ,மூதுரை,கொன்றைவேந்தன்,விநாயகர் அகவல் போன்றவை மின்னூலாக கீழே தரவிறக்கம் செய்யலாம் 

விநாயகர் அகவல்





ஆத்திசூடி ,நல்வழி ,மூதுரை,கொன்றைவேந்தன்





February 13, 2012

கோரக்கர்-ரவி மேகலை

கோரக்கர் நூல்கள் 

இந்த நூல் சித்தர்கள் இராச்சியம் என்னும் வலை பூவில்  இருந்து எடுக்க பட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன் 
மேலும் பல சித்தர் நூல்கள் இந்த வலை பூவில் உள்ளது என்பதையும் இங்கு தெரிவிப்பதை கடமையாக நினைக்கிறேன்
மேலும் 
ரவி மேகலை என்னும்  நூல்  பதிவிறக்கம்  செய்ய இந்த லிங்க் யை  கிளிக் செய்யவும்

கோரக்கர் ரவி மேகலை





February 2, 2012

சித்தர்கள் வரலாறு





பதினெட்டு சித்தர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செயவும் இது ஒரு மின்னூல்