Showing posts with label சித்தர்கலைகள். Show all posts
Showing posts with label சித்தர்கலைகள். Show all posts

December 24, 2016

ஐம்பொன்னின்(பஞ்சலோகத்தின்) சூட்சம ரகசியங்கள்

ஐம்பொன்னின் சூட்சம ரகசியங்கள்

(தமிழ்மொழி ஒரு தந்திரமொழி தொடர் பதிவுகளை அடியேன் இன்னும் எழுதிகொண்டு உள்ளதால் அதை முடித்தவுடன் அல்லது கூடிய விரைவில் நிச்சயம் பதிவு செய்யபடும்.தங்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி நண்பர்களே)


தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற ஐந்து உலோகங்கள் கலந்த கலவையே ஐம்பொன் அல்லது பஞ்சலோகம் என்றழைக்கிறோம்.

பொதுவாக நம் நாட்டிலுள்ள மண்ணில் உலோக சத்துகள் குறைவாக கிடைப்பதால் பஞ்சலோக சிலைகள் செய்து அவற்றிக்கு அபிஷேகம் செய்து அவற்றின் பிரசாதத்தை உண்டு உடலுக்கு உலோக சக்தியை கொடுப்பார்கள்.

ஐந்து உலோகத்தின் விஞ்ஞான ரகசியம்


இதை விஞ்ஞான ரீதியாக கண்டால் வியாழ கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், சனிகிரகத்தின் ஆற்றலை பெற இரும்பையும், சுக்கிர(வெள்ளி)கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும்,சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற செம்பையும், கேது கிரக்கத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் மானிடர்கள் தங்கள் அணிகலன்களாக அணிந்துகொள்கின்றனர்.

நவகிரகங்களின் கதிர்வீச்சு மனிதனின் சுபாவத்தையும் அவன் நிலைமையும் தீர்மானிக்கிறது என்பதை நாம் ஜோதிடம் என்ற விஞ்ஞானத்தை கொண்டு அறிவோம்

இந்த உலோகங்களால் ஆன அணிகலனை மோதிரமாகவோ, காப்பாகவோ, தண்டையாகவோ அணிந்தால் அந்தந்த கிரகத்தின் ஆற்றலை பெறலாம்.

ஐந்து உலோகங்களின் சூட்சம ரகசியம்

இந்த ஐந்து உலோகங்களின் மருத்துவ தன்மை நாம் அறிந்திருப்பதால் அவற்றின் சூட்சமத்தை மட்டும் இங்கு காண்போம்

தங்கம்

தங்கம் என்ற இந்த உலோகத்தை அணிவதால் மனிதனின் எண்ணங்களை பிரபஞ்சத்திற்க்கு அனுப்பமுடியும். அதாவது அக்காலத்தில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது விருப்பங்களை கடவுளிடம் தெரிவிப்பார்கள்.

கடவுள் சிலைகளுக்கு தங்க நகைகள் போடுவது இதனால் தான், இதுவும் ஒரு விஞ்ஞான முறை.இதை தந்தரா யோகத்தில் கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயில் என்பார்கள் உங்கள் எண்ணங்கள் அங்கு வைக்கும் போது உடனே பிரபஞ்ச சக்தியிடம்(கடவுளிடம்) அனுப்பபடும்.

வெள்ளி

வெள்ளியையும் எண்ண அலைகளை அனுப்ப பயன்படுத்தினார்கள்.ஆனால் அது அதிகம் இல்லை ஏனெனில் இதன் அலைவீச்சு தங்கத்தை விட குறைவாக உள்ளது. இதற்க்கு மானிடர்களின் உணர்ச்சிஅலைகளை  கட்டுபடுத்தும் ஆற்றல் உண்டு என்பது சூட்சமம்.


செம்பு

செம்பு உலோகத்தை பற்றி கூறினால் ஒரு புத்தகமே போடலாம்.இருப்பினும் இதன் சூட்சமம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை விழிப்புடன் வைக்க உதவுகிறது.கவனிக்க குண்டலினியை மேலே கொண்டு வராது.

இதன் மிதமான உஷ்ணத்தன்மை உயிருக்கு ஆற்றலை அளிக்க கூடியது,மனித உடலை சுற்றியுள்ள பிராண மண்டலத்தை பலபடுத்தும்,மூளையின் செயல் திறன் அதிகமாகும்.


இரும்பு

இந்த உலோகம் பெரும்பாலும் எதிர்மறை சக்தி கொண்டது தான்.இருப்பினும் இதை அக்காலத்தில் எப்படி நல்ல காரியத்திற்க்கு பயன்படுத்தினார்கள் என்றால் வெளியே செல்லும் ஒரு பெண்ணை எதிர்மறை சக்திகள்(பேய்கள்) நெருங்காமல் இருக்க இந்த இரும்பு துண்டுகளை எடுத்து செல்ல சொல்லுவார்கள்.ஆனால் இது கால போக்கில் வழக்கொழிந்து விட்டது சில இடங்களில் இப்போதும் பெரியவர்கள் கூறுவார்கள்.

இதன் சூட்சம ரகசியம்


இடி இடிக்கும்போது இரும்பை முற்றத்தில் வைஎன்ற பழமொழி உள்ளது.இதன் அர்த்தம் என்னவெனில் இடிமின்னல் வரும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் இரும்பில் உள்ள காந்த சக்தி அந்த மின்காந்த ஆற்றல்களை தன்பால் ஈர்த்து கொள்ளும். குறிபிட்ட இந்த இரும்பை, வைத்து கொண்டால் தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், சிலர் கிராமத்தில், சாதரணமான இரும்பை தான் வெளியே எடுத்து செல்கிறார்கள்.ஆனால் நாம் இங்கு மற்ற உலோகத்தோடு கலப்பதால் நன்மையே பயக்கும்


ஈயம்

இது உடலுக்கு மிகவும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லபடுகிறது. இதன் நன்மை என்னவெனில் ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு இருப்பதால் ஆபத்து இல்லை,இதன் கதிர்வீச்சு மனிதனின் ஆன்மீக சிந்தனையை தூண்டுவிதமாக அமைகிறது.மனிதனின் உயிர்சக்தியை விரயம் ஆகாமல் செய்யும் வண்ணம் இது காக்கிறது.

இப்படி ஐம்பொன்னும் சேர்ந்து மனிதனுக்கு நன்மையளிக்கும் என்பதை தமிழர்களும், சித்தர்களும் கண்டுபிடித்தனர் மேலும் அதை ஆபரணமாக அணியவும் செய்தனர்.இது தமிழர்களின் விஞ்ஞான முறைகளில் ஒன்று தான்.


இங்கு மிக முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த பஞ்சலோகத்தில் சூரிய ஒளிபட்டால் இதன் சக்தி அளப்பரியது.ஆக இதை காப்பாகவோ,மோதிரமாகவோ அணிந்து இதன் பயனைபெறவும். இதன் விலையும் மலிவாக தான் உள்ளது.


இந்த பஞ்சலோகத்தால் ஆன பழைய சிலைகளை கடத்தி பல கோடி ரூபாய் கணக்கில் விற்கிறார்கள் என்றால் அது பற்றிய முழு தகவல்கள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை.

வாழ்க தமிழர்கள் விஞ்ஞான முறையும், சித்தர்களின் ரசாயனவியலும்

மீண்டும் அடுத்த ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி
வாழ்க வளமுடன்    
 

  


  

October 13, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம் -17


தமிழும் முருகனும் ஓர் ஆய்வு -2

சென்ற பதிவில் சிவனாரை கண்டோம் இந்த பதிவில் சுருக்கமாக முருகனை காண்போம்(அனைத்தும் சித்தர்கள் நூலில் இருந்து தொகுக்கபட்ட்து).

பதிவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை பாடலை சுட்டிகாட்டவும் என அன்பர்கள்  கூறியதால் பாடலுடன் விளக்குகிறேன்.


முருகன்

புராண கதைப்படி முருகன் பிறப்பிடம் வடநாடு, கங்கையை ஒட்டிய பகுதி என்றும், நட்சத்திரம் விசாகம் என்றும் கூறுகிறது.

இதை தான் விளக்கமாக ஒரு காண்டத்தின் படலமாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.ஆனால் கந்தனுக்கு விசாகன் என்ற பெயர் இருந்ததாக பாணினி முனிவர் இயற்றிய வியகரணத்திலும்,பதஞ்சலி முனிவர் இயற்றிய மகாபாஷ்யம் நூலிலும் கூறுகிறார். இதை கொண்டே விசாகம் நட்சத்திரம் என முடிவு கட்டினர் வடநாட்டவர்.

இதையெல்லாம்(ஒரு ஓரமாக) தனியாக எடுத்து வைத்துவிட்டு சித்தர் நூல்களை ஆராய்வோம்.

முதலில் முருகன் யார் என்றால் அவர் மனிதராக பிறந்தவர் என்றும் அவர் மரபு எதுவென்றால் சைவம் என்ற பீடமாகும். இவர் பிறந்த நாள் ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தார்* என போகர் கூறுகிறார்.

பிரணவ ஆய்வில் அதிகம் ஈடுபட்டு மெய்பொருளை அறிந்தவர் என்றும் பின் அந்த மெய்பொருளை ஈசனுக்கும்,அகத்தியருக்கும் தெளிவுற காட்டினார் என்றும்,பின் தான் ஈசன் அதை சரிதான் என உணர்ந்து ஏற்றார் எனவும் கூறுகிறார்கள். பின் காங்கேயம் என்ற ஊரில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். அதனால் அவர் பெயர் காங்கயன் ஆயின.

குமரவேள் என்ற பெயரையும் கொண்டவர் என்று அடியாருக்கு நல்லாரும், முருகவேல் என்ற பெயரை நக்கீரரும் கூறுகின்றனார்.முதல் தமிழ் சங்கத்தில் முருகன் இருந்தார் என இறையனார் அகபொருள் சிறப்புப்பாயிரம் உரையும், தொல்காப்பிய சிறப்புப்பாயிரம் உரையும் கூறுகிறது.

மேலும் அவர் மூன்றுயுகம் கடந்தவர் என பிறந்த நாள் கூறபடுகிறது.

சரி மேலே சொன்ன விளக்கத்திற்க்கு எல்லாம் பாடலாய் சித்தர் பாடலில் காண்போம்.


"செப்பலாம் சுப்பிரமணியன் என்பார் பாரு
சிறப்பான மனிதனல்லால் வேறொன்றில்லை"
                     போகர் 7000தில் பாடல்-5622

"முத்தான வடிவேலர் முருகரப்பா
முயற்சியுடன் வயததுவும் எது என்றாக்கால்
சத்தியமாய் வயததுவும் , கணக்கோ இல்லை
சார்பான நூல்தனிலும் சொல்லவில்லை "
                       போகர் 7000த்தில் பாடல் -5852 

"ஆறான சுப்பிரமணியர்  மரபேதென்றால்
அப்பனே சைவம் என்ற பீடம் ஆமே"
                போகர் 7000த்தில் பாடல் – 5732 

"துன்னவே மூன்றுயுகம் கடந்த வேலர்
துப்புறவாய்ப் பிறந்த்தொரு நேர்மையப்பாசொன்னபடி ஆவணியாம் திங்களப்பா
சொல்லுகிறேன் முதற் பூசங்கால் தான் ஒன்றே"
                       போகர் 7000த்தில் பாடல் -5941 

"சேரர் கொங்கு வை காவூர் நனாடாதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமானே"
               திரு ஆவினன்குடி திருபுகழ் பாடல்-1 

"கருதவே மும்மூலம் பிரித்துச் சொல்லும்
கருவூரிற் காங்கயனே கருவாய்த் தானே"
                  சுப்பரமணியர் ஞானம் 200ல் பாடல்-31 

"பேரான ஈசனுக்கு இதுதான் சொல்லிப்
பேசாத எழுத்தினூட வரையும் காட்டிச்"
           யோகஞானம் 500ல் பாடல் 13

ஆக எப்படி பார்த்தாலும் முருகன் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பது தெளிவாக தெரிகிறது. நண்பர்கள் இங்கு ஒன்று வினவலாம் இது எல்லாம் போகர் மட்டும் தான் சொன்னார? 

 இல்லை, இதை அவர் அகத்தியர் நூலானா அகத்தியம் மற்றும் அகத்தியர்12000 என்ற நூலில் இருந்து பல விடயங்களை விரித்து தன்னுடய சப்தகாண்டம் 7000த்தில் கூறியதாக கூறுகிறார். அதாவது முதல் தமிழ் சங்கத்தில் அகத்தியம் என்ற இலக்கண நூல் வெளியிட்டார்கள் அல்லவா அதிலும் அதற்கு அப்புறம் 12000 என்ற நூல் எழுதியதாகவும் அதுவும் கடல்கோளால் அழிவுற்றது எனவும் கூறுகிறார்.இது பற்றிய தகவலை அகத்தியர் தலைப்பில் காண்போம்.இப்போது அந்த பாடலை காண்போம்
       
"விருப்பமுடன் பாடிவைத்த சத்த காண்டம்
குறைந்ததொரு பொருள் எல்லாம் எந்தன் நாதர்
குருமுனியாம் அகத்தியத்தில் காணலாமே"
                  போகர் 7000த்தில் பாடல்-5693_

"காணலாம் அகத்தியனார் காவியத்தில்
கருவான பன்னீராயிரத்தில் அப்பா"
              போகர்7000த்தில் பாடல்-5694



காங்கேயம் *சிவன்மலையில்* முருகன் தங்கி தவம் செய்து, அந்த தவ ஆற்றல் முழுக்க அம்மலையில் வைத்துள்ளார் எனவும் மேலும் *சிவவாக்கிய சித்தர்* அங்கு சமாதியானர் என்றும் அவருடைய ஆற்றல் முழுக்க உள்ள இடமும் என்று என் குருநாதர்களில் ஒருவர் கூறினார்.

சென்னிமலை கந்த சஷ்டி கவசத்தை விளக்கும் இடம். அங்கு சென்று தவம் செய்தால் அதன் மறைமுக விளக்கம் கிடைக்கும் என என்னால் உறுதியாக கூறமுடியும்.அவர் வாசியோகம் செய்பவராக இருக்கவேண்டும் என்பதை நினைவு படுத்துகிறேன்.

அடுத்த பதிவில் அகத்தியரையும் கண்டு பின் தமிழ் மந்திரத்தின் உள்ளே செல்வோம்

 உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்




September 3, 2016

மறைக்கப்பட்ட தமிழர் கலைகள் பாகம் - 3

பதினைந்தாம் புலி - ஓர் ஆய்வு

பதினைந்தாம் புலி என்பது ஆடு புலி ஆட்டம் என்ற விளையாட்டே ஆகும்.


இந்த விளையாட்டை கண்டுபிடுத்தவர்கள் சோழரா,பாண்டியரா,கொங்குநாட்டை சேர்ந்தவரா என தெரியவில்லை.

ஆனால் நாம் இதில் உள்ள நுட்பம் பற்றி மட்டும் ஆராய்வோம்.

இதில் 3 புலிகள் 15 ஆடுகள் உள்ளது. மேலும் முக்கோணத்தின் மீது மூன்று பட்டை கோடுகள்.மொத்தம் 23 புள்ளிகள்.

ஆடுபுலி ஆட்டம் ஒரு போர்கலையை மையபடுத்தி மறைமுகமாக விளையாடும் அறிவுபூர்வமான விளையாட்டு.

மூன்று புலிகள் ஆணவம்,கன்மம்,மாயை மேலும் 15 ஆடுகள் என்பது பத்து தசேந்திரியங்கள்,5 பூதங்களால் ஆன உடலை குறிக்கும்.

இதில் காலியான ஐந்து புள்ளிகள் ஐந்து அவஸ்தைகளை குறிக்கும்.

மூன்று கோடுகள் ஆழ்மனம்,நடுமனம்,புறமனம் ஆகிய நிலைகளை குறிக்கும்.

இதில் புலிகளின் குகை எனபடுவது *ஆழ்மனம்* என்கிற மேல் அடுக்கை குறிக்கும்.

அங்கிருந்து தான் புலிகள் வந்து ஆடுகளை கவரும்

ஐந்து ஆடுகள்(உடலை இழந்தால்) வெட்டுபட்டால் மூன்று புலிகள்(ஆணவம்,கன்மம்,மாயை) வெற்றியடைந்தது.


இந்த புலிகளை வெல்ல நமக்கு கொடுத்தது தான் இந்த முக்கோணம்(அறிவு).

விளையாடுபவர் முக்கோணம் பார்த்து விளையாடுவதால் அறிவு விருத்தியாகும். மூளையின் செல்கள் அவரை அறியாமலே விழிப்புடன் இருக்கும்

இதை தான் இன்றை காலம் உபயோகபடுத்துகிறது.

180° பார்வையில் உங்கள் கண்ணில் முக்கோணம் பட்டால் உங்கள் மூளை உடனே விழிப்பு அடையும் நீங்களும் நிதானம் ஆவீர்கள். உதாரணம்:


போக்குவரத்து அறிவிப்புகள் அனைத்தும் முக்கோணத்திலேயே வைப்பார்கள்.வேகத்தடை,வலதுபக்கம்,இடதுபக்கம் குறியீடுகள்.

கோவிலுக்குள் செல்லும் முன் கலச தரிசனம் செய், என்பது கலசம் பார்ப்பது முக்கோணம் அமைப்பில் இருபதால் மனம் ஒரு நிலைபடும். அதன் பின் உள்ளே செல்வது

முக்கோணத்தின் கூர்மையான பகுதியை உற்று பார்ப்பதால் கவனம்(concentration)ஓர் நிலை படும் இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.


முருகனை வணங்கிணால் அறிவு வளரும் என்பது அவன் கையில் உள்ள வேல் முக்கோண அமைப்பு என்பதால் தான்.

நீங்கள் உங்கள் வீட்டில் முக்கோண படம் உங்கள் கண்ணில் படும்படி வைத்தால் மூளை எப்போதும் விழிப்புடன் இருக்கும் என்பது சூட்சமம்



பூஜை அறையில் பிரமிடு இருந்தால் மூளை மனம் ஒருமுகமாக இருக்கும் என்பது அது முக்கோணம் ஆகும்

ஆக இந்த விளையாட்டை விளையாடினால் புலிகளை எப்படி அடைப்பது என்பதும் அறிவு வளர்ச்சி அதிகபடுத்தவும் என்பதும் புரியும்.

ஆன்மீக கருத்து ரீதியாக எந்த ஒரு ஆட்டையும் இழக்காமல் மும்மலங்களை வெல்வது எப்படி என்பது இந்த விளையாட்டில் நுட்பமாக உள்ளது.

கீழே படம் மூலம் விளக்கி ஒன்று அனுப்பியுள்ளேன் கவனிக்க


உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

August 30, 2016

மறைக்கபட்ட தமிழர் கலைகள் பாகம் – 2

யாளியும் தமிழனும் ஓர் ஆய்வு


யாளி இந்த பெயரையும் விலங்கையும் நாம் கேள்விப்படுவது கோவில்களில் தான். அங்கு தான் இதன் சிற்பம் வைக்கப்பட்டு இருக்கும்.


மகரயாளி
இந்த யாளிக்கும் தமிழர்க்கும் என்ன சம்பந்தம் என ஆராய்வோம் அதற்கு முன் யாளி பற்றி தெரிந்து கொள்வோம். யாளி என்ற விலங்கை பற்றி ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளை வைத்து கூறுகிறேன் இதற்கென தனி நூல்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை அதான் மிக பெரிய கொடுமை.
அங்கோவாட்







கஜ யாளி 
யாளி…. ஒரு அறிய வகை சங்ககால விலங்கு அந்த விலங்கு அழிந்துபோன உயிரினம். அது டைனோசர் கால விலங்கு. இது நம் லெமுரியா மற்றும் தமிழ் நாட்டில் இருந்த விலங்குதான், அதிகம் பலம் கொண்ட விலங்கு. இது சிம்மயாளி, மகர யாளி , கஜயாளி, ஞமலியாளி,  பெரு யாளி(சிறிய வகை ) பெருச்சாளி அல்ல அது போன்ற எலிவகையான யாளி என கூறுகிறார்கள்
ஒரு யானையின் தந்தம்
யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது கஜயாளியும்,சிம்மயாளியும் தான் இதை கண்டால் அனைத்துவிலங்குகளும் நடுங்கும் டைனோசர் உட்பட. இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள் ஒரு யாளி பத்து காட்டுயானைகளுக்கு சமம்,காட்டு யானை என்றால் இப்போது உள்ளவை அல்ல 10000 BC படத்தில் வருமோ அதுபோல பெரியது.

அங்கோர் வாட் யாளியும்  டைநோசர்
இப்படிபட்ட யாளியை நம் தமிழர்கள் எப்படி அடக்கினார்கள் என்று தானே கூறுகிறீர்கள் அது தான் நம் தமிழரின் நுணுக்கமான வீரம்.

யாளியை அடக்குபவன் மாவீரனாக இருக்கவேண்டும். அவன் சில மூலிகைகளின் பலம் கொண்டு, யாளியை அடக்கும் ஆற்றல் பெற்றவன் கஜகேசரி ஆவன்(வீரன் என்பவன் தனி ஆட்களை சமாளிப்பவன், மாவீரன் என்பவன் நூறு வீரர்களை ஒரே போரில் சமாளிக்கும் திறன் கொண்டவன்)

பெரு யாளி
இந்த மூலிகைகள் என்னென்ன என சித்தர்கள் பாடல்களில் தெளிவாக உள்ளது.சில மூலிகைகளை உண்டால் யாளியின் பலம் கிடைக்கும் என கொடுத்து இருப்பார்கள். அதை வைத்து யாளியை அடக்கி அதற்க்கு கடிவாளம் போடுவார்கள் பின் அதை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பார்கள்.
ஆனால் பின் வந்தவர்கள் விளக்கவுரையில் ஒரு யாளின் பலத்தோடு பெண்ணை புணரலாம் என  கொடுத்துள்ளனர். சில விளக்கம் பரிபாஷையாக உள்ளதை நாம் புரிந்து கொள்ளாமல் போனோம். இதை வேறு வகையான புரிதல் கொண்டதால் விளக்க முடியாமல் போனது

    புணர்தல் என்பதற்க்கு சந்தித்தல் என ஒரு விளக்கம் தொல்காப்பியம் கூறுகிறது          
                                                ------தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் 108)

யாளியை அடக்கிய மாவீரன் மதிப்பு மிகுந்தவனாக இருந்திருக்கிறான்,அதுவும் கஜயாளி அடக்கியவனை மிகபெரிய தலைவனாக மதிக்கபட்டுள்ளான்.  அந்த மாவீரன் பட்ட பெயராக கஜகேசரி என அழைக்கபடுவான் . எல்லாம் மூலிகை மூலம்தான் என்றாலும் அதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா.

சரி யாளி எப்படிபட்டவை யாளிகள் தெய்வீக தன்மை கொண்டவை எனவும் இசைக்கு மயங்கும் தன்மை உள்ளவை என்றும் கூறுகிறார்கள் இது சரியான ஆதாரம் இல்லை.  

கோவில்களில் முகப்புகளில் இந்த யாளியின் உருவம் இருக்க காரணம் இதை கண்டால் தைரியமான விழிப்புணர்வு கிடைக்கும் என்கிறார்கள்.இந்த யாளியின் எழும்புகளில் இருந்து உருவாக்கபட்டதே யாழ் இசை கருவி என்றும் குறிப்பிட்ட யாழ் மிகவும் அதிகபடியான ஒலியலைகளை கொண்டதாக இருந்தது எனவும் உயிரை கொன்றது எனவும் கூறுகிறார்கள்.

காலத்தால் இவை அழிந்து மரவகைகளை பயன்படுத்தி யாழ் செய்யபட்டதாக கூறுகிறார்கள்.

யானை, சிங்கம் அமைப்புள்ளதை கஜயாளி என்றும்,சிங்கம் போல் உள்ளதை சிம்மயாளி என்றும் ஆடுகளைபோல் கொம்பும் சிறிய வால் உள்ளதை மகரயாளி என்றும்,நாய்போல் நாக்கு மிக நீளமானதை ஞமலியாளி என்றும் பெருச்சாளியை போல் உள்ள சிங்கமுக உயரம் குறைவாக உள்ளதை பெருயாளி என்றும் கூறுவர்.

யாளி குறித்த மருத்துவ பாடல்கள் கீழே

நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
யாளி யென விஞ்சுவார் போகத்தில்(போர்களத்தில்)
                    -அகத்தியர்

நிரச்சொன்னர்  மெய்யாம் தகரையை ஒத்த
யாளி(ஆழி),அன்னர்(அன்னம்),புலத்து கையான் தகரை
ஒத்துகால்             
                        ----தேரையர் 

யாளி கற்பனை விலங்கு அல்ல அதற்க்கு லெமுரியா கண்டம் அகழ்வாரச்சி செய்தால் தான் தெரியும் என்பதால் வெளிநாட்டவர் டைனோசர்தான் பலம் வாய்ந்த விலங்கு என்கிறார்கள், ஆனால் அங்கோர்வாட் கோவிலில் டைனோசரை காட்டிலும் யாளியின் சிற்பம் அதிகம் உள்ளது என இங்கு சுட்டுகிறேன். டைனோசர் உருவம் சில தான் உள்ளன

டைனோசாசர் சுட்டி காட்டும் வெள்ளையர்
டைனோசர்களை பார்த்து வியக்கும் ஆங்கிலேயர்கள் அதற்க்கு மேலான யாளியையே கட்டி ஆண்டுள்ளான் என்பது, தமிழனின் வீரத்தை பறை சாற்றும் விதமாக உள்ளது. கோவில்களில் இதற்கு யாளி சிற்பத்தின் மீது தமிழன் இருப்பது சான்றாக உள்ளது.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு 

நன்றி
வாழ்க வளமுடன்


மறைக்கபட்ட தமிழர் கலைகள் பாகம் – 2

யாளியும் தமிழனும் ஓர் ஆய்வு


யாளி இந்த பெயரையும் விலங்கையும் நாம் கேள்விப்படுவது கோவில்களில் தான். அங்கு தான் இதன் சிற்பம் வைக்கப்பட்டு இருக்கும்.


மகரயாளி
இந்த யாளிக்கும் தமிழர்க்கும் என்ன சம்பந்தம் என ஆராய்வோம் அதற்கு முன் யாளி பற்றி தெரிந்து கொள்வோம். யாளி என்ற விலங்கை பற்றி ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளை வைத்து கூறுகிறேன் இதற்கென தனி நூல்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை அதான் மிக பெரிய கொடுமை.
அங்கோவாட்







கஜ யாளி 
யாளி…. ஒரு அறிய வகை சங்ககால விலங்கு அந்த விலங்கு அழிந்துபோன உயிரினம். அது டைனோசர் கால விலங்கு. இது நம் லெமுரியா மற்றும் தமிழ் நாட்டில் இருந்த விலங்குதான், அதிகம் பலம் கொண்ட விலங்கு. இது சிம்மயாளி, மகர யாளி , கஜயாளி, ஞமலியாளி,  பெரு யாளி(சிறிய வகை ) பெருச்சாளி அல்ல அது போன்ற எலிவகையான யாளி என கூறுகிறார்கள்
ஒரு யானையின் தந்தம்
யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது கஜயாளியும்,சிம்மயாளியும் தான் இதை கண்டால் அனைத்துவிலங்குகளும் நடுங்கும் டைனோசர் உட்பட. இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள் ஒரு யாளி பத்து காட்டுயானைகளுக்கு சமம்,காட்டு யானை என்றால் இப்போது உள்ளவை அல்ல 10000 BC படத்தில் வருமோ அதுபோல பெரியது.

அங்கோர் வாட் யாளியும்  டைநோசர்
இப்படிபட்ட யாளியை நம் தமிழர்கள் எப்படி அடக்கினார்கள் என்று தானே கூறுகிறீர்கள் அது தான் நம் தமிழரின் நுணுக்கமான வீரம்.

யாளியை அடக்குபவன் மாவீரனாக இருக்கவேண்டும். அவன் சில மூலிகைகளின் பலம் கொண்டு, யாளியை அடக்கும் ஆற்றல் பெற்றவன் கஜகேசரி ஆவன்(வீரன் என்பவன் தனி ஆட்களை சமாளிப்பவன், மாவீரன் என்பவன் நூறு வீரர்களை ஒரே போரில் சமாளிக்கும் திறன் கொண்டவன்)

பெரு யாளி
இந்த மூலிகைகள் என்னென்ன என சித்தர்கள் பாடல்களில் தெளிவாக உள்ளது.சில மூலிகைகளை உண்டால் யாளியின் பலம் கிடைக்கும் என கொடுத்து இருப்பார்கள். அதை வைத்து யாளியை அடக்கி அதற்க்கு கடிவாளம் போடுவார்கள் பின் அதை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பார்கள்.
ஆனால் பின் வந்தவர்கள் விளக்கவுரையில் ஒரு யாளின் பலத்தோடு பெண்ணை புணரலாம் என  கொடுத்துள்ளனர். சில விளக்கம் பரிபாஷையாக உள்ளதை நாம் புரிந்து கொள்ளாமல் போனோம். இதை வேறு வகையான புரிதல் கொண்டதால் விளக்க முடியாமல் போனது

    புணர்தல் என்பதற்க்கு சந்தித்தல் என ஒரு விளக்கம் தொல்காப்பியம் கூறுகிறது          
                                                ------தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் 108)

யாளியை அடக்கிய மாவீரன் மதிப்பு மிகுந்தவனாக இருந்திருக்கிறான்,அதுவும் கஜயாளி அடக்கியவனை மிகபெரிய தலைவனாக மதிக்கபட்டுள்ளான்.  அந்த மாவீரன் பட்ட பெயராக கஜகேசரி என அழைக்கபடுவான் . எல்லாம் மூலிகை மூலம்தான் என்றாலும் அதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா.

சரி யாளி எப்படிபட்டவை யாளிகள் தெய்வீக தன்மை கொண்டவை எனவும் இசைக்கு மயங்கும் தன்மை உள்ளவை என்றும் கூறுகிறார்கள் இது சரியான ஆதாரம் இல்லை.  

கோவில்களில் முகப்புகளில் இந்த யாளியின் உருவம் இருக்க காரணம் இதை கண்டால் தைரியமான விழிப்புணர்வு கிடைக்கும் என்கிறார்கள்.இந்த யாளியின் எழும்புகளில் இருந்து உருவாக்கபட்டதே யாழ் இசை கருவி என்றும் குறிப்பிட்ட யாழ் மிகவும் அதிகபடியான ஒலியலைகளை கொண்டதாக இருந்தது எனவும் உயிரை கொன்றது எனவும் கூறுகிறார்கள்.

காலத்தால் இவை அழிந்து மரவகைகளை பயன்படுத்தி யாழ் செய்யபட்டதாக கூறுகிறார்கள்.

யானை, சிங்கம் அமைப்புள்ளதை கஜயாளி என்றும்,சிங்கம் போல் உள்ளதை சிம்மயாளி என்றும் ஆடுகளைபோல் கொம்பும் சிறிய வால் உள்ளதை மகரயாளி என்றும்,நாய்போல் நாக்கு மிக நீளமானதை ஞமலியாளி என்றும் பெருச்சாளியை போல் உள்ள சிங்கமுக உயரம் குறைவாக உள்ளதை பெருயாளி என்றும் கூறுவர்.

யாளி குறித்த மருத்துவ பாடல்கள் கீழே

நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
யாளி யென விஞ்சுவார் போகத்தில்(போர்களத்தில்)
                    -அகத்தியர்

நிரச்சொன்னர்  மெய்யாம் தகரையை ஒத்த
யாளி(ஆழி),அன்னர்(அன்னம்),புலத்து கையான் தகரை
ஒத்துகால்             
                        ----தேரையர் 

யாளி கற்பனை விலங்கு அல்ல அதற்க்கு லெமுரியா கண்டம் அகழ்வாரச்சி செய்தால் தான் தெரியும் என்பதால் வெளிநாட்டவர் டைனோசர்தான் பலம் வாய்ந்த விலங்கு என்கிறார்கள், ஆனால் அங்கோர்வாட் கோவிலில் டைனோசரை காட்டிலும் யாளியின் சிற்பம் அதிகம் உள்ளது என இங்கு சுட்டுகிறேன். டைனோசர் உருவம் சில தான் உள்ளன

டைனோசாசர் சுட்டி காட்டும் வெள்ளையர்
டைனோசர்களை பார்த்து வியக்கும் ஆங்கிலேயர்கள் அதற்க்கு மேலான யாளியையே கட்டி ஆண்டுள்ளான் என்பது, தமிழனின் வீரத்தை பறை சாற்றும் விதமாக உள்ளது. கோவில்களில் இதற்கு யாளி சிற்பத்தின் மீது தமிழன் இருப்பது சான்றாக உள்ளது.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு 

நன்றி
வாழ்க வளமுடன்