June 4, 2017

பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் பாகம்-1

குழாய்கள் வழியே நகரங்களில் நீர் தருதல் திட்டம் (DAM AND PIPELINE)


தமிழன் கண்ட தொழில்நுட்பம் தான் வேறொரு பெயர் மூலம் இன்று நம்மில் உலா வருகிறது.

நீர்தேக்கத்தை எங்கு கட்ட வேண்டும் என புலவர் ஒருவர் தம் மன்னனுக்கு கூறுகிறார் கீழே கவனிக்க.

மதுரையில் தண்ணீர் பஞ்சம் வரபோகிறது என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டம் நடத்துகிறான் பாண்டியன் நெடுஞ்செழியன்.

அவன் அவையில் உள்ள புலவர் குடபுலவியனார் தன் மன்னனுக்கு, நீர்தேக்கம் அமைக்க வேண்டும் என்றும் அதை எங்கு கட்ட வேண்டும் என ஆலோசனை பின்வருமாறு கூறுகிறார்.



நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருக
            ( --- புறநானூறு 18:28)

அதாவது நிலத்தை தோண்டாது (நிலன்நெளி)நிலம் குழிந்த பள்ளத்தாக்கில் நீர்தேக்கம் அமைத்தால் மழைநீர் எளிதில் ஓடிவந்து தேங்கும்.

அங்கு அதை சுற்றி கட்டுமானம் எழுப்பினால் நீர்நிலை பெருகும் என்று கூறுகிறார்.

அவ்வாறு தேக்கிய நீரை நகர மக்களுக்கு கொண்டு செல்வது குறித்து மற்றொரு புலவர் கூறுகிறார்.

மன்னா! அவ்வாறு தேக்கிய நீரை நம்மவர்கள் இதற்கு முன் சுருங்கை(PIPELINE) மூலம் கொண்டு சென்றனர்





இதோ பாருங்கள் ஆதாரம் என காட்டுகிறார் புலவர்

நெடுமால் சுருங்கை நெடுவழிப் போந்து
கடுமா களிறணத்துக் கைவிடுநீர் போலும்
நெடுநீர் மலிபுனல் நீள்மாடக் கூடல்
கடிமதில் பெய்யும் பொழுது

    ( -- பரிபாடல், 20: 104-107)

அதாவது பெரிய மாளிகைகள் உடையது கூடல் மாநகர்( மதுரை) நகரின் தெருவில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுருங்கை (UNDERGROUND PIPELINE) வழி நீர் ஓடியது. மதில்களின் கீழ் அமைந்த சுருங்கையிலிருந்து(PIPELINE) இந்நீர் விழும்பொழுது அது யானை தன் துதிக்கையை தூக்கி நீரை சொரிவது போல் இருக்கும் என சங்க புலவர் கூறுகிறார்.

ஆகையால் நாமும் அவ்வாறு தேக்கிய நீரை மக்களுக்கு கொடுப்போம் என்றார் மற்றொரு புலவர்.

நல்ல அறிவுரை நல்ல பாடல் அவ்வாறே செய்வோம் என்றான் மன்னன்.

இப்போது அணை அமைப்பதும் நிலத்தடியில் குழாய்கள்(UNDERGROUND PIPELINE) மூலம் நீர் கொண்டு செல்வதும் பண்டைய தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பமே தவிர ஆங்கிலேயர் கண்டுபிடித்தது அல்ல

உங்கள் சித்தர் அடிமை
இரா.சங்கர்
ஈரோடு

வாழ்க தமிழ்; வளர்க நம் கலைகள்

March 2, 2017

தமிழ் மின் நூல்கள்

 ஆன்மீகம் சார்ந்த நூல்கள் கீழ்காணும் லிங்க் கூகுள் டிரைவில் உள்ளது டவுண்லோடு செய்து கொள்ளவும்







          click the link----------------> மருத்துவ நூல்கள் இங்கு கிளிக் செய்யவும்



நன்றி வாழ்க வளமுடன்

December 24, 2016

ஐம்பொன்னின்(பஞ்சலோகத்தின்) சூட்சம ரகசியங்கள்

ஐம்பொன்னின் சூட்சம ரகசியங்கள்

(தமிழ்மொழி ஒரு தந்திரமொழி தொடர் பதிவுகளை அடியேன் இன்னும் எழுதிகொண்டு உள்ளதால் அதை முடித்தவுடன் அல்லது கூடிய விரைவில் நிச்சயம் பதிவு செய்யபடும்.தங்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி நண்பர்களே)


தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற ஐந்து உலோகங்கள் கலந்த கலவையே ஐம்பொன் அல்லது பஞ்சலோகம் என்றழைக்கிறோம்.

பொதுவாக நம் நாட்டிலுள்ள மண்ணில் உலோக சத்துகள் குறைவாக கிடைப்பதால் பஞ்சலோக சிலைகள் செய்து அவற்றிக்கு அபிஷேகம் செய்து அவற்றின் பிரசாதத்தை உண்டு உடலுக்கு உலோக சக்தியை கொடுப்பார்கள்.

ஐந்து உலோகத்தின் விஞ்ஞான ரகசியம்


இதை விஞ்ஞான ரீதியாக கண்டால் வியாழ கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், சனிகிரகத்தின் ஆற்றலை பெற இரும்பையும், சுக்கிர(வெள்ளி)கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும்,சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற செம்பையும், கேது கிரக்கத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் மானிடர்கள் தங்கள் அணிகலன்களாக அணிந்துகொள்கின்றனர்.

நவகிரகங்களின் கதிர்வீச்சு மனிதனின் சுபாவத்தையும் அவன் நிலைமையும் தீர்மானிக்கிறது என்பதை நாம் ஜோதிடம் என்ற விஞ்ஞானத்தை கொண்டு அறிவோம்

இந்த உலோகங்களால் ஆன அணிகலனை மோதிரமாகவோ, காப்பாகவோ, தண்டையாகவோ அணிந்தால் அந்தந்த கிரகத்தின் ஆற்றலை பெறலாம்.

ஐந்து உலோகங்களின் சூட்சம ரகசியம்

இந்த ஐந்து உலோகங்களின் மருத்துவ தன்மை நாம் அறிந்திருப்பதால் அவற்றின் சூட்சமத்தை மட்டும் இங்கு காண்போம்

தங்கம்

தங்கம் என்ற இந்த உலோகத்தை அணிவதால் மனிதனின் எண்ணங்களை பிரபஞ்சத்திற்க்கு அனுப்பமுடியும். அதாவது அக்காலத்தில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது விருப்பங்களை கடவுளிடம் தெரிவிப்பார்கள்.

கடவுள் சிலைகளுக்கு தங்க நகைகள் போடுவது இதனால் தான், இதுவும் ஒரு விஞ்ஞான முறை.இதை தந்தரா யோகத்தில் கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயில் என்பார்கள் உங்கள் எண்ணங்கள் அங்கு வைக்கும் போது உடனே பிரபஞ்ச சக்தியிடம்(கடவுளிடம்) அனுப்பபடும்.

வெள்ளி

வெள்ளியையும் எண்ண அலைகளை அனுப்ப பயன்படுத்தினார்கள்.ஆனால் அது அதிகம் இல்லை ஏனெனில் இதன் அலைவீச்சு தங்கத்தை விட குறைவாக உள்ளது. இதற்க்கு மானிடர்களின் உணர்ச்சிஅலைகளை  கட்டுபடுத்தும் ஆற்றல் உண்டு என்பது சூட்சமம்.


செம்பு

செம்பு உலோகத்தை பற்றி கூறினால் ஒரு புத்தகமே போடலாம்.இருப்பினும் இதன் சூட்சமம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை விழிப்புடன் வைக்க உதவுகிறது.கவனிக்க குண்டலினியை மேலே கொண்டு வராது.

இதன் மிதமான உஷ்ணத்தன்மை உயிருக்கு ஆற்றலை அளிக்க கூடியது,மனித உடலை சுற்றியுள்ள பிராண மண்டலத்தை பலபடுத்தும்,மூளையின் செயல் திறன் அதிகமாகும்.


இரும்பு

இந்த உலோகம் பெரும்பாலும் எதிர்மறை சக்தி கொண்டது தான்.இருப்பினும் இதை அக்காலத்தில் எப்படி நல்ல காரியத்திற்க்கு பயன்படுத்தினார்கள் என்றால் வெளியே செல்லும் ஒரு பெண்ணை எதிர்மறை சக்திகள்(பேய்கள்) நெருங்காமல் இருக்க இந்த இரும்பு துண்டுகளை எடுத்து செல்ல சொல்லுவார்கள்.ஆனால் இது கால போக்கில் வழக்கொழிந்து விட்டது சில இடங்களில் இப்போதும் பெரியவர்கள் கூறுவார்கள்.

இதன் சூட்சம ரகசியம்


இடி இடிக்கும்போது இரும்பை முற்றத்தில் வைஎன்ற பழமொழி உள்ளது.இதன் அர்த்தம் என்னவெனில் இடிமின்னல் வரும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் இரும்பில் உள்ள காந்த சக்தி அந்த மின்காந்த ஆற்றல்களை தன்பால் ஈர்த்து கொள்ளும். குறிபிட்ட இந்த இரும்பை, வைத்து கொண்டால் தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், சிலர் கிராமத்தில், சாதரணமான இரும்பை தான் வெளியே எடுத்து செல்கிறார்கள்.ஆனால் நாம் இங்கு மற்ற உலோகத்தோடு கலப்பதால் நன்மையே பயக்கும்


ஈயம்

இது உடலுக்கு மிகவும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லபடுகிறது. இதன் நன்மை என்னவெனில் ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு இருப்பதால் ஆபத்து இல்லை,இதன் கதிர்வீச்சு மனிதனின் ஆன்மீக சிந்தனையை தூண்டுவிதமாக அமைகிறது.மனிதனின் உயிர்சக்தியை விரயம் ஆகாமல் செய்யும் வண்ணம் இது காக்கிறது.

இப்படி ஐம்பொன்னும் சேர்ந்து மனிதனுக்கு நன்மையளிக்கும் என்பதை தமிழர்களும், சித்தர்களும் கண்டுபிடித்தனர் மேலும் அதை ஆபரணமாக அணியவும் செய்தனர்.இது தமிழர்களின் விஞ்ஞான முறைகளில் ஒன்று தான்.


இங்கு மிக முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த பஞ்சலோகத்தில் சூரிய ஒளிபட்டால் இதன் சக்தி அளப்பரியது.ஆக இதை காப்பாகவோ,மோதிரமாகவோ அணிந்து இதன் பயனைபெறவும். இதன் விலையும் மலிவாக தான் உள்ளது.


இந்த பஞ்சலோகத்தால் ஆன பழைய சிலைகளை கடத்தி பல கோடி ரூபாய் கணக்கில் விற்கிறார்கள் என்றால் அது பற்றிய முழு தகவல்கள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை.

வாழ்க தமிழர்கள் விஞ்ஞான முறையும், சித்தர்களின் ரசாயனவியலும்

மீண்டும் அடுத்த ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி
வாழ்க வளமுடன்