April 11, 2016

தியானம் என்ற தவம்


தியானத்தின் முதிர்ச்சியே தவம். எனவே முதலில் தியானம் செய்யப் பழக வேண்டும். தியானம் என்கிற போது மன ஒருமைப்பாட்டிற்காகவும், மன அமைதிக்காகவும், புத்திக் கூர்மைக்காகவும் மட்டுமே என்றால், பெட்டிக் கடைகளில் கூட புத்தகங்கள் விற்கப்படுகின்றன.  

வாங்கிப் படித்த்து அதில் சொல்லியிருப்பது போல பயிற்சி செய்து வந்தால் ஒரு சில மாதங்களில் தியானம் கை கூடும். ஆனால், ஆன்மிக மேம்பாடு அடைய வேண்டி தியானம் செய்ய வேண்டும் என்றால், அதற்கான விதி முறைகளையும், வழிமுறைகளையும் கடைபித்து முறைப்படி படிப்படியாகவே முன்னேற வேண்டும். அப்போதுதான் தியானத்தில் நிலைத்து அடுத்த நிலைக்கு உயர முடியும். ஏனென்றால் மனதை உலகாய விஷயங்களில் இருந்து பிரித்தெடுத்து உள்முகமாகத் திருப்பினால் மட்டுமே அது ஓடுக்க நிலைக்கு வரும். 

இதற்கு முதற்கண் ஆன்மிக நோக்கும், நம்பிக்கையும் அவசியம். எனவே முதலில் ஆன்மிக விஷயங்களைக் கேட்பது, படிப்பது, அது சம்மந்தமான வேலைகளில் ஈடுபடுவது, அந்த எண்ணம் கொண்டு ஒழுகும் மக்களுடன் கூடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 

இவ்வாறு செய்வதால் மனம் முதற்கண் உலகாய விஷயங்களில் இருந்து விலகி ஆன்மிக எண்ணங்களில் திளைக்கத் துவங்கும். அப்போது நீங்கள் ஓரளவு தீய எண்ணங்களின் பிடியிலிருந்து விலகி விடுவீர்கள். இனி நீங்கள் உங்கள் ஓய்வு நேரங்களில் முடிந்த அளவு சமுதாயத் தொண்டுகளைச் செய்து வர வேண்டும். துன்பப்படுபவர்களுக்கு உதவும் மனப் பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

 முதலில் தீய எண்ணங்களில் இருந்து விலகிய மனமானது இப்போது பேதமற்ற விரிந்த மனநிலைக்கு வந்து விடும். எல்லாம் இறை சொரூபமே என்ற பரந்த மனப்பான்மை வளரும். அடுத்த படியாக உடலை ஆன்மிக சக்தியைப் பெறுமளவிற்கும், அதற்கான பயிற்சிகளைத் தொய்வின்றி செய்யும் அளவிற்கும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இவை எல்லாமே புறப் பயிற்சிகளே. 

 இதில் ஓரளவே மனம் பரிபாகம் அடைந்திருக்கும். முற்றிலும் சலனமற்ற மனதைப் பெற வேண்டுமெனில் மூச்சைக் கவனித்து,அதைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். அதையும் தாண்டிய நிலையில் ஐம்புலன்களைப் பற்றி அறிந்து கொண்டு, அவற்றால் ஏற்படும் துன்பங்களை உணர்ந்து மனதை புலன் மயக்கத்தில் இருந்து விலக்கி உள்முகமாகத் திருப்ப வேண்டும்

அதாவது புலன்கள் மூலம் நடைபெறும் எல்லா செயல்களையும் உற்று கவனித்து அவற்றில், அளவும், ஒழுங்கு முறையையும் கடைபிடிக்கும் போது அவைகள் மனதின் கட்டுக்குள் வரும். இப்போது மனம் எளிதில் உள்முகமாகத் திரும்பி நிற்க்கும்.இனி நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், மனதை ஒரு குறிப்பிட்ட பொருளின் மீதோ, ஒளியின் மீதோ, உருவத்தின் மீதோ குவித்துப் பழகுவதே. இந்தப் பழக்கம் மேன்மையடையும் போது மனமானது இயல்பாகவே எதுவுமற்ற சூனியத்தில் குவியத் தயாராகி விடும். 

இதுவே தியானம். இப்படிப் படிப்படியாகப் பயிற்சியில் மேன்மையடையாதவர்கள் மனம் மீண்டும் கீழிறங்கி, புலன் வசப்பட்டு மயங்கி நிற்கும். பயிற்சி செய்யுமளவு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மனதில் சக்தி நிலைக்கும். மீண்டும் மனோ சக்தியைப் பெற தியானம் செய்ய வேண்டும். 

இதற்குக் காரணம் மனம் புலன் வழிப்போய் சக்தியை விரையம் செய்வதால் ஆகும். ஆன்மிக மேம்பாடு அடைந்தவர்கள் மனம் அவ்வாறான கீழ்நிலைக்கு எளிதில் வராது. ஏனென்றால் முறையான பயிற்சியின் காரணமாகப் பக்குவமடைந்து விடுகிறது. எனவே அங்கு சக்தியானது விரையம் ஆவதே இல்லை. 

 மேலும் மேலும் சேமிக்கப்பட்டு திணிவு அடைகிறது. இனி உங்கள் விடாமுயற்சியின் அளவுக்கு ஏற்ப பலன் விரைவாகக் கிடைக்கும். இதற்கு ஒரு குருவானவர் அவசியம் தேவை.

நன்றி
மௌனத்தின் குரல் 
அய்யா ராம் மனோகர் 

March 18, 2016

குண்டலினி சக்தியும் விநாயகர் சிலையும்










ராகு = விஞ்ஞானம்
கேது=மெய்ஞானம்
 


குண்டலினி சக்தியை மேல் ஏற்றினால் கேது.


குண்டலினி சக்தியை கீழ் இறக்கினால் ராகு.


கேது ராகுவின் உருவத்தை பாருங்கள் நம் முன்னோர்கள் மூளை திறன் நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்திவிடும்.
தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் காரண கர்த்தா ராகுவே.


இந்த அசூரவேகமான விஞ்ஞான வளர்ச்சி அழிவை நோக்கியே நம்மை இழுத்துச் சென்று கொண்டுள்ளதை உணராமல் வெகு இன்பமயமாக வாழ்ந்து வருகின்றோம்.ராகுவிற்கு போகக்காரகன் என பெயர் வைத்தது சரி என்றே நினைக்கிறேன்.எல்லா சுகபோகத்தையும் தந்து,உடலை சர்ப்பத்தை போல் விஷமாக
அல்லவா ஆக்கி விடுகிறார்.


ஒரு கெட்டவனை பார்த்து நாம் பேச்சு வழக்கில் கூறுவோமே,இவனுக்கு உடம்பெல்லாம் விஷமடா என்று தானே.
அப்ப ராகு போகத்தையும் இன்பத்தையும் கொடுத்து உடலை கெடுத்தல்லவா விடுகிறார்.


உடல் என்பது சந்திரன்.
உடல் என்பது மனம்.


மனம் கெட்டால் உடல் தானாக கெட்டுவிடும்.உடல் கெட்டால் உயிர் போய்விடுமல்லவா?
அதனால் தான் திருமூலர் கூட பாடியிருக்கிறார்.


"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானமும் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே."


ஆக ராகுவால் அனுபவிக்கப்படும் அனைத்து சுகபோகங்களும் ஒரு மனிதனின் அழிவையே சந்திக்க வைக்கும்.


ராகுவே விஞ்ஞானம்.
விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் உடலை கெடுத்துஉயிரை அழித்து விடும்அதனால் தான் ராகுவை கொடுத்துக் கெடுப்பார் என நம் முன்னோர்கள் ஜோதிட பரிபாஷையில் மிக அற்புதமாக கூறிச் சென்றுள்ளார்கள்.


ராகுவால் ஆளப்படும் விஞ்ஞானம். விஞ்ஞானம் அல்ல அது ஒரு பொய்ஞ்ஞானம் என்று கூறுவதே சாலச்சிறந்தது.

ஆனால் கேதுவோ பாம்பின் தலையையும் மனித உடலையும் பெற்று, உடலை பாதுகாத்து உயிரை வளர்க்கும் மெய்ஞானக்காரகன் கேதுவே.
அதனால் தான் உடம்பை அழிப்பவர் மெய்ஞானம் சேரமாட்டார் என தெள்ளத்தெளிவாக திருமூலர் கூறியுள்ளார்.


மேலும் திருமூலர் கேதுவிற்கு ஒரு பாடலையும் மிக அற்புதமாக எழுதியுள்ளார்.


"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேனே
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோவில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே."


ஆக கேது உடம்பை பற்றிய உண்மையான ஞானத்தை அறிய வைத்து அதில் உத்தமனாகிய சிவன் அமர்ந்துள்ளான் என்பதை அறிய வைத்து,சவம் ஆகிய இந்த உடம்பை சிவமாக்கி ,உயிரை அழியவிடாமல் தடுத்து அழியா முக்திப்பேற்றை தருவது கேதுவே.


பற்று அற்ற வாழ்க்கை வாழ்ந்தால் கேது மெய்ஞானத்தை உணர வைத்து பிறவா வரம் என்னும் முக்தியை நிச்சயம் தருவார்.


பற்று உடைய வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ராகு பொய்யான ஞானத்தை கொடுத்து, மீண்டும் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்க வைத்து மனிதனை இறைநிலையை அடைய விடாமல் தடுத்து விடுவார்.


ராகு உடம்பால் பெறும் அனைத்து சுகத்தையும் கொடுத்து உயிரை கெடுத்து விடுவார்.
கேது உடம்பால் பெறும் அனைத்து சுகத்தையும் கெடுத்து உயிரை கொடுத்து விடுவார்.
இப்ப தெளிவாக புரியும்.


ராகு கொடுத்து கெடுப்பான்.
கேது கெடுத்து கொடுப்பான்.
உங்களுக்கு எது வேண்டும் 
என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


இனி யாரும் விஞ்ஞான வளர்ச்சி என்று கூறாதீர்கள்.
ராகு விஞ்ஞானத்தின்வீழ்ச்சி.
கேதுவே மெய்ஞானத்தின் வளர்ச்சி.


நம் சித்தர்கள் கண்ட சாகா கலையே உண்மையான மெய்ஞான வளர்ச்சி.
இன்றைய விஞ்ஞானம் ஒரு மனிதன் சாகாமல் இருக்க என்ன வழி என்று ஆராய்ந்து விட்டு,உடம்பில் உள்ள செல்கள் அனைத்தும் செயல் இழந்துவிட்டால் உயிர் போகத்தானே வேண்டும் என்ற மிகப் பெரிய கண்டுபிடிப்பை பிடித்து விட்டது.
ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே உயிர் போகமல் இருக்க செய்யும் வழிமுறையை அறிந்தவர்கள் நம்முடைய
சித்தர்களே என்று நாம் பெருமையடையலாமே.


மனிதனின் உயிரை வளர்க்கும் கலை மெய்ஞானக் கலை.

இத்துடன் போய் விஞ்ஞானத்தை ஒப்பிட்டு பேசி அழிவை தேடவேண்டாமே.
விஞ்ஞானம் என்பது வீழ்ச்சி
மெய்ஞ்ஞானம் என்பதே உண்மையான வளர்ச்சி.
அனைவரும் அந்த உண்மை ஞானத்தைப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ முதன்மை கடவுளாகிய வினாயக பெருமானை வழிபட்டு வாருங்கள்.


உங்கள் குண்டலினி சக்தி விழிப்படைந்து மேல் ஏற்றினால் பிறவா முக்தி நிச்சயம்.


ஓம் பதினெண் சித்தர்கள் திருவடிகள் சரணம்


நன்றி : சித்தர்களின் ஜீவன் (Baskaran Sankar)







February 15, 2016

தமிழ் மின் நூல்கள்

நண்பர்களே தமிழ் மின்நூல்கள் தேவைபடுவோர்

கீழ் காணும் இணையதளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளுங்கள் இது முற்றிலும் இலவசம்



http://www.tamilnavarasam.com/



நன்றி நண்பர்களே இதில் அனைத்து வகையான நூல்களும் உள்ளன

                                                வாழ்க வளமுடன்