January 10, 2013

மறுபிறவி - 2

 மறுபிறப்பு 

மறுபிறப்பு என்பது அடுத்த உடலைத் தேடுவதாகும்.ஒரு உடல்  இறந்தவுடன் அந்த ஆன்மா  அடுத்த உடலை சென்றடைகிறது தாயின் வயிற்றில் கரு பந்து போல வந்தவுடன் அந்த கருவுக்கு உரு சேர்ப்பது போல ஆன்மா வருகிறது.
குழந்தை தாயின் கருவறை விட்டு வெளியே வரும் போது தனது பூர்வ ஜென்ம நிகழ்வுகளை மறந்து விடுகிறது.குழந்தை வெளியே வந்து இடது கையை விரித்தவுடன் அதன் புண்ணிய கணக்கு தொடங்குகிறது வலது  கையை விரித்தவுடன் அதன் பாவ கணக்கு தொடங்குகிறது.

பிறக்கும் குழுந்தையின் ஆயுட்காலம் என்பது ஆணின் விந்து ஐந்து விரற்கடை அளவு பாய்ந்தால் அதன் ஆயுட் காலம் நூறு வயது என்றும் அடுத்தடுத்த விரல் அளவு குறைவது போல் ஆயுள் மாறும். மேலும் இது பற்றி தெளிவாக தெறிய தாமரை நூலகம் வெளியிட்டுள்ள சித்தர்கள் உடல் தத்துவம் என்ற நூலை வாங்கி படியுங்கள்

பழைய ஜென்ம நினைவுகளை திரும்ப பெறவேண்டுமானால் மனதின் ஆழ்நிலைக்கு சென்றால்  திரும்ப பெறலாம் அது ஒரு ரொக்கார்டு செய்த டேப் போல திரும்ப கேட்கலாம் அனால் சுய நினைவு வந்தால் மறந்து விடும்
     உதாரணம்
               இது எப்படி என்றால் விஜய் டிவி யில் வரும் முன் ஜென்மம் நிகழ்ச்சி பார்த்தால் புரியும் அதில் மெஸ்மரிசம் என்ற கலையை உபயோகித்து வெளிக்கொண்டுவருவார்கள்

பிறப்பு

பலர் ஏழு பிறப்பை ஏழு ஜென்மம் என்று தவறாக புரிந்துவைத்துள்ளனர்.ஏழு பிறப்பு என்பது நமது உடலைப்போல ஏழு உடல் பூமியில் படைப்பார் பிரம்மா, மேலும் எழுகின்ற ஒவ்வொரு பிறப்பை தான் அதாவது எழு பிறப்பை தான் பின் வந்தவர்கள் ஏழு பிறப்பு,ஏழு ஜென்மம் என்று தவறாக கூறுகிறார்கள்.
உதாரணம்:
ரஜினியின் அதிசய பிறவி படம் , இப்போது தெலுங்குவில் வந்துள்ள டருவூ(Daruvu)படம் இதில் ஏழு உடலை காட்டுவார்கள். கதாநாயகன் ஆன்மாவை எதாவது ஒரு உடலில் சேர்த்தல் மாதிரி

இறப்பு

இறந்த நபரின் உடலை மீண்டும் எந்த ஆத்மா உள்ளே வராமல் இருக்க
அந்த உடலின் ஒன்பது மற்றும் பத்தாவது வாசலும் அடைக்கப்படும் இதில் முதல்மூன்று வாசல் வழியாகத்தான் ஆன்மா உள்ளே வரும் அவை

கண்
      இறந்தவுடன் இதை மூடிவிடுவர்

காது

   தலைக்கு பாகை போல காது ஓட்டையையும் சேர்த்து துணி கட்டுவர்

நெற்றி

புருவ பூட்டு என்று சித்தர்களால் அழைக்கபடும் நெற்றியில் நாணயம் வைத்து அடைத்துவிடுவர்(இதை சிலர் இந்த ஒரு ரூபாய் கூட எடுத்து போக முடியாது என்று காட்ட வைப்பதாக சொல்லுவார்கள் 
உதாரணம்: ரஜினியின் சிவாஜி படம்)

இது அனைத்தும் ஊர்வசி பஞ்சரத்தினம் 500 , திருமூலர் திருமந்திரம், திருமூலர் கருக்கிடை 600, மாணிக்கவாசகரின் திருவாசகம், சித்தர்கள் உடல்தத்துவம், யூகி முனி தத்துவம் 300 ஆகிய நூல்களில் இருந்து பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு பற்றி கூறியதை நான் மிக தெளிவாக புரியும்படி கூறினேன்.மேலும் பல திரைபடங்களில் உள்ள முக்கியமான சீனை  உதாரணத்துக்கொடுத்தேன்

January 3, 2013

மறுபிறவி - 1

மறுபிறவி பற்றி நான் அறிந்த வரையில் மிக எளிமையான விளக்கத்தில் கூறியது வள்ளலார் மட்டும் தான். பல மதங்கள் மறு ஜென்மம் என்பதை மறுக்கிறது. ஆனால் இந்து மதம் மட்டும் அது உண்மை என்று திட்டவட்டமாக கூறுகிறது

கீதையில் கண்ணனே கூறியுள்ளார், மானிட ஆன்மா என்பது அழியாது அது மீண்டும் பிறக்கும் என்றும் மனிதன் கர்மம் செய்ய கடமை பட்டவன் என்றான் இங்கு கர்மம் என்பது புண்ணிய பாவ கணக்கு

சுலுமுனை சித்தர் கூற்று




மனித பிறவிக்கு அடுத்து தேவ,தெய்வ பிறப்பு தான்
இது எப்படி சாத்தியம் என்றால் ,ஒரு மனிதன் 1,2,3 வகுப்பு படிக்கிறான் என்றால் நிறைய மதிப்பெண் வாங்கினால் அடுத்த வகுப்பிற்க்கு செல்கிறான் 
அது போலவே பிறப்பு என்பது செடி,கொடி,மரம்,பறவை,விலங்கு,மனிதன்,தேவர்கள், தெய்வம் என்ற வகுப்புகளாக பிறிந்து வருகிறது. இதில் பாவம் செய்தால் அந்த வகுப்பிலேயே
மீண்டும் விழுகிறோம். கவனிக்க மீண்டும் 1 ம் வகுப்பு செல்வதில்லை 

வள்ளலார் என்கிற ஞான சித்தர் கூற்று


மறுபிறவி


இப்போது வள்ளலார் கூறுவதை கேட்போம் ஒருவன் ஒரு வீட்டை விட்டு காலி செய்து புது வீட்டிற்க்கு காசு கொடுத்து குடி போகிறான் என்றால் அவன் ஏற்கனவே ஒரு வீட்டில் தங்கினான் என்பதை மறந்து விட வேண்டாம். அது போலத்தான் ஆன்மா ஒரு உடம்பில் இருந்து வேரு ஒரு உடம்பிற்க்கு குடி பெயர்கிறது.அவன் செய்த நன்மை பொறுத்து (நிறைய செல்வத்தை) வீடு என்கிற உடம்பு அமைகிறது

கர்ம வினை


இதில் கர்ம வினை என்பது அவன் செய்த பாவ மூட்டை அது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. இது எப்படி என்றால் முன்பு கூறியதை போல வேறு ஒரு வீட்டிற்க்கு போன மனிதனின் தீய நண்பன் அந்த வீட்டுக்கும் போவான்.மீண்டும் அவ்வீட்டை கெடுப்பான் அது போல தான் கர்மா என்கிற பாவமும் ஆன்மாவுடன் போகும் மீண்டும் தவறு செய்ய வைத்து மனித வகுப்பிலே படிக்க செய்கிறது. அதனால் முடிந்தவரையில் பாவம் செய்யாமல் தீய நட்பு கொள்ளாமல் நன்மை செய்து வாழ்வோம்   

புண்ணியத்தின் பலன்


அப்போது நாம் செய்த நன்மையின் பலன் என்பது எங்கே என்றால் நாம் செய்த பாவத்திற்க்கு போகும் . இதை விளக்கமாக சொன்னால் நன்மை என்பது நாம் சம்பாதித்து வாங்கும் பணம் போல, பாவம் என்பது செலவு செய்வதற்க்கு வாங்கி கடன் போல, கடன் நிறைய வாங்கி வைத்து பணம் சம்பாதித்தால் அது கடனுக்கு தான் போகும் சொத்தில் சேராது அதாவது புண்ணியத்தில் சேராது 


இன்னும் இது பற்றி பின்வரும் பதிவுகளில் காண்போம் பின் மூலிகை மர்மம் செல்வோம்





December 25, 2012

ஐயப்பன் விரதம்

ஐயப்பன் கதை அனைவரும் அறிந்ததே அதனால் ஐயப்பன் விரதத்தை பற்றி பார்ப்போம். இதை பலரும் ஏன் மாலை அணிகிறோம் எதற்க்காக ப்ரம்மசரியம் செய்கிறோம் என்று பலர் தவறான கருத்தை தெரிந்து வைத்து கொண்டுள்ளார்கள்.  அதை பற்றி சரியான விளக்கத்தை இன்று பார்ப்போம்

ஐயப்பனின் தீவிர பக்தரான மாதவ நாயரை சனீஸ்வர பகவான் ஏழரை ஆண்டு பிடிக்க போகும்போது ஐயப்பன் இடையில் வந்து பிடிப்பின் நோக்கத்தை அறிந்தார்.பின் தன் பக்தர்களை பிடிக்க கூடாது எனவும் கேட்டார் அதற்கு சனீஸ்வர பகவான் சில கட்டளை விடுத்தார். அதை பின் பற்றினால்தான் அவர்களை, தான் பிடிக்கமாட்டேன் என்றார்.ஐயப்பனும் அந்த கட்டளைகளை கேட்டு தன் பக்தர்களுக்கு கூறினார். அவை பின் வருமாறு

ஐயப்ப பக்தன் தன் மனைவியை விட்டு (ஒரு மண்டலத்துக்கு)48 நாட்கள் பிரிந்து இருந்து(ஒரே வீட்டில் இருக்கலாம் ஆனால் உறவு வைத்து கொள்ளக்கூடாது), ஐயப்பனை சபரிமலை வந்து தரிசனம் செய்ய வேண்டும் 

சபரிமலை ஏறுதல் கால் வழி பயணமாக இருக்க வேண்டும் கல்லும் முல்லும் காலில் படவேண்டும் (காலணி இல்லாமல் 48 நாட்கள் இருக்க வேண்டும் )

பால்,பழம் உண்டு ,அறுசுவை உணவை தவிற்க வேண்டும்.

அதிகாலை,மாலை பொழுதில் குளித்து சூரிய தேவ(சனீஸ்வர பகவானின் தந்தை) , ஐய்யப பூஜை செய்ய வேண்டும் 

 ஐய்யப்ப பக்தர்கள் கருப்பு வஸ்த்திரத்தை (துணியை) தவிர வேறு நிற உடை அணியக்கூடாது (கருப்பு நிறம் சனீஸ்வரருக்கு பிடித்தது)(சிவப்பு நிறம் முருகனுக்கு உகந்தது)

 தரையில் மட்டுமே படுக்க வேண்டும் தலையணையும் தவிர்த்து உறங்கவேண்டும் .

மாலை அணிதல் என்பது தான் காம,கோபங்களுக்கு உடன்படாமல் கட்டுபட்டு விரதம் இருப்பதை காட்ட மாலை அணியவேண்டும் 

அனைவரையும் கடவுளாக பார்க்க அனைவரையும் சாமி என்று அழைக்க வேண்டும், என்பதையும் நினைவுபடுத்தி கொண்டேயிருக்க 48 நாட்கள் மாலையுடன் ஐயப்பன் கூடவே வர வேண்டும்.(ஐயப்ப டாலர் மாலையில் இருக்க வேண்டும் ஒரு சிலர் மாலை கிடைக்கவில்லை எனறால் முருக மாலைஅணிவார்கள் அது தவறு)

தான் செய்த பாவத்தை கழிக்க பம்பையில் நீராட வேண்டும் இது முக்கியம்

இந்த கடுமையான விரதத்தை யார் கடைபிடிக்கிறார்களோ அவர்களை தான் பிடிக்கமாட்டேன் என்று ஐயப்பனுக்கு சனீஸ்வரபகவான் வரம் அளித்துள்ளார் .அதனால் தான் ஐயப்பன் தன்னை வேண்டி வருபவர்க்கு இந்த விரதத்தை அளித்தார்

சனீஸ்வரர் ஒருவரை பிடித்தால் அவரை மனைவியுடன் பிரித்து காடு மேடுகளில் அலையவைத்து அங்குள்ள பழங்களை கொடுத்து கல்லிலும் முல்லிலும் நடக்க வைத்து தரையிலே படுக்கவைத்து கடுங் குளிரை ஏற்படுத்தி படாதபாடு படுத்துவார் உடுக்ககூட உடையில்லாமல் செய்து விடுவார்.ஆனால் அவரை விட்டு செல்லும் போது அவர் இருந்த நிலையை விட பண்மடங்கு செல்வத்தையும் சிறப்பையும் தருவார் 


ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்

ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம

சில பொருள் விளக்கம் 


ஐயப்பன் 

         அய்யா அப்பா இதை மணிகண்டன் தாய் தந்தையரை பிரியும்போது அவர்கள் கூறியதால் அதையே தன் பெயராக கொண்டார்

சபரிமலை

             சபரிக்கு மோட்சம் தந்து அவர் இருந்தமலையிலேயே கோவில் கொண்டார் அதுவே சபரிமலை 

ஹரிஹரசுதன்

         ஹரி - திருமால் , ஹரன் - ஈஸ்வரன் , சுதன் - மகன் 

பம்பை நதி

        கங்கையில் இருந்து எடுத்த நீரை கொண்டு ஐயன் உண்டக்கிய நதி

ஒரு மண்டலம்
                   
               48 - நாட்கள் என்பது ஒரு மண்டலம் 

 48 - நாட்கள்                
              
                     12 ராசி 9 கிரகம் 27 நட்சதிரம் இவை மூன்றும் இந்த 48 -நாட்களில் வந்துவிடும்  
                                                         12+9+27 = 48