December 18, 2012

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-2

மலையின் ஆண் வடிவம் இது மலையின் முன் பகுதி

சித்தர்கள்

சதுரகிரி,பொதிகை,கொல்லிமலை,போன்றே இந்த மலையிலும் பல சித்தர்கள் தங்கி தவம் புரிந்துள்ளனர்.மேலும் இந்த மலையில் பல குகைகள், சஞீவினி மூலிகைகள் உள்ளன. இந்த மலையில் மூலிகை காவல் தெய்வமாக அனுமன் உள்ளார். நான் சில மூலிகைகள் தேடுகின்ற போது பல தடவை முக்கியமான மூலிகை உள்ள யிடத்தில ஒரு குரங்கு கூட யில்லை ஆனால் நான் மூலிகையின் அருகில் சென்றால் பல குரங்குகள் வந்துவிடுகின்றன. அதே போலத்தான் இங்கு ஒரு குகை ஒன்று உள்ளது அங்கு சென்றால் உதகஞ்செயநீர்(அகத்தியர் பரிபூரணம்1200) என்ற ஒரு நீர் உள்ளது அதை காட்ட என் குரு என்னை அழைத்து சென்ற போது அனுமன் படைகளால் நாங்கள் சூழ பட்டோம் பின் என் குரு அனுமத் கவசம் செய்து விலகி செல்லுமாறு செய்தார் பின் தான் அங்கு சென்றோம்.
மலையின் பெண் வடிவம் இது மலையின் பின் பகுதி


இங்கு அல்லி சுனை ஒன்று உள்ளது அதன் அருகில் தான் சித்தர் பீடம் உள்ளது.  ஒரு சித்தர் தினம் அங்கு வந்து வழிபடுவதாக என் குரு பலமுறை கூறியிருக்கிறார். மேலும் இந்த மலையில் ஆரா சுவாமி என்கிற ஒருவர் வாழ்ந்து வந்தார் அவர் இந்த மலையில் ஜீவ சமாதியாகி உள்ளார் என்றும் பல மூலிகைகள்,சித்துகள் அவருக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார் .மேலும் போகர் கூறிய மலைதாங்கி(வர்மகலையில் நோக்கு வர்மத்திற்க்கு பயன்படும் மூலிகை அது)  என்ற மூலிகை இருப்பிடம் ஒரு சித்தர் இங்கு தான் காட்டினார் என்று என் குரு கூறியதுண்டு 

இந்த மலையில் நடந்த அனுபவம் நிறைய உண்டு அதை பின் ஒரு பதிவில் கூறுகிறேன்.

பதிவின் நோக்கம் பாகம் -3 நாளை


திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-1


திருச்செங்கோடு வரலாறு சுருக்கம்

முன்னொரு காலத்தில் ஆதிசேடனுடன் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என்பதை அறிய இருவரும் போர் செய்தனர். இப்போரினால் உலகில் பேரழிவுகளும், துன்பங்களும் நேரிடுவதை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர். இதன்படி ஆதிசேடன் தன்படங்களால் மேருவின் சிகரத்தின் முடியை அழுத்தி கொள்ளவேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்றும் கூறினர். ஆனால் வாயுதேவன் பிடியை தளர்த்த முடியவில்லை இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிசேடனின் பிடியை தளர்த்த வேண்டினர். ஆதிசேடம் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிசேடன் சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறுண்டு விழுந்தது. அவற்றில் ஒன்றுதிருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடாகவும்) காட்சியளிக்கிறது.

இந்த மலையின் சிறப்புகள் படங்களின் மூலம் உணரலாம்















 இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன
மேலும் இந்த திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பதிவின் அவசியமும் அடுத்த பதிவில் காத்திருக்கிறது

November 7, 2012

விதி (மதியால் செய்யும் சதி)

விதி வலியது என்று ஒரு கதையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 
ஒரு நாள் வைகுண்டத்தில் கருடனும் அதன் நண்பனுமான குருவியும் பூலோகத்தில் ந்டந்தவைகளை பற்றி பேசி கொண்டிருந்தன அந்த சமயம் அங்கு மகா விஷ்ணுவை காண வந்த யமதர்மர் சிறிது நேரம் நின்று குருவியை பார்த்து முறைத்து விட்டு பின் உள்ளே சென்றார் இதை கண்ட கருடனுக்கு பயம் ஏற்பட்டு குருவியை யமதர்மர் வருவதற்க்குள் மறைவான இடத்தில் வைக்கவேண்டும் என்று எண்ணி உடனே அங்கிருந்து குருவியை தன் மேலே அமர செய்து கடலுக்கு அப்பால் உள்ள மலை குன்றில் ஒரு மரக்கிளையில் அமர செய்து விட்டு சற்று நேரத்தில் வந்து கூட்டி செல்வதாக சொல்லிவிட்டு அவசரமாக வைகுண்டம் வந்தார் .

வெளியே வந்த யமதர்மர் பதட்டதுடன் கருடனிடம் ," இங்கு இருந்த குருவி எங்கே சென்றது" என்றார்.அதற்க்கு அதை பத்திரமாக உங்கள் பார்வையில் இருந்து மறைத்து வைத்துள்ளேன் என்றார் கருடன்.

"அதன் உயிர் என் கையால் முடியவேண்டும் என்பது விதி ஆதலால் 
கருடதேவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.இங்கு உள்ள குருவி கடலுக்கு அப்பால் உள்ள ஒரு மலைக்கு குன்றில் உள்ள மரத்தில் உள்ள பாம்பால் சாக வேண்டும் என்பது விதி. சிறிய இறகுகளை வைத்துள்ள குருவி அவ்வளவு தூரம் 1 நாழிகைக்குள் எவ்வாறு செல்லமுடியும் என வருத்ததுடன் சென்றேன் என் மனக்கவலையை தாங்கள் போக்கி விட்டீர்கள் ",என்றார் யமதர்மராஜன்.

உடனே இதை கேட்ட கருடன் மிக வேகமாக அங்கு சென்றார்.கருடன் வருவதை பார்த்த குருவி கீச் கீச் என்று ஒலி எலுப்பியது சத்தம் கேட்ட பாம்பு மரப்பொந்தில் இருந்து வந்து குருவியை முலுங்கி சென்றது

உடனே அந்த இடத்தில் யமதர்மராஜன் தோன்றி கருடருக்கு மீண்டும் நன்றி என தெரிவித்தார். அப்போது தான் கருடருக்கு புரிந்தது குருவியின் உயிர் தன்னால் தான் பிரியவேண்டும் என்று விதி நிர்னையத்ததை.

விதியை மதி கொண்டு வெல்லலாம் என்பதை விட, விதி தான் அங்கு சதி செய்து மதியை கைப்பாவையாய் மாற்றி தன் வேலையை முடித்துக்கொள்கிறது

விதி வலியது