June 30, 2012

ஔவையாரும் திருவள்ளுவரும்




ஔவை மதுரை போகும் வழியில் ஒரு வீட்டில் உள்ள திண்ணையில் அமர்ந்து ஒய்வு எடுக்கிறார். அப்போது அந்த வீட்டுக்கு சொந்தக்கரர்  அங்கு தன் மனைவியை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார் . அதை கேட்ட அவ்வை நான் இன்று உங்கள் வீட்டில் தான் உணவு அருந்த வேண்டும், என்று கட்டாயபடுத்தி கூறுகிறார்.வீட்டுகாரரும் மிகுந்த வருத்தபட்டு வாருங்கள் அன்னையே என்று உள்ளே அழைத்து செல்கிறார் உள்ளே உள்ள அடங்க மனைவி கணவனை திட்டி தீர்த்து விட்டு அன்னைக்கு சிவந்த முகத்தோடு அன்னம் இடுகிறாள் இதை கண்ட அன்னை உன் உணவில் சினம் என்ற நஞ்சு உள்ளது இதை உண்டால் எனக்கும் அது வந்து விடும் என்கிறார். இதை   கண்ட அப்பெண் கணவனை திட்டுகிறாள்.இதை கண்ட அன்னை மனைவி மதிக்கவில்லை என்றால் உடனே துறவறம் மேற்கொள் என்கிறார்.இதை கண்ட மனைவி அதிச்சியுற்று, தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள் .
பின் அங்கிருந்து வள்ளுவர் உள்ள பகுதிக்கு செல்கிறார் அங்கு அவர் தன் கவியை மாணாக்கர்களுக்கு போதித்து கொண்டிருக்கிறார் இதை கண்ட அவ்வை,மிகவும் ஆழமான கருத்துகள் இதை தாங்கள் தமிழ் சங்கத்தில் வெளியிட்டு விட்டீர்களா ? என்று வினம்பினார்.அதற்க்கு, இதை அவர்கள் பார்க்காமலேயே நிராகரித்துவிட்டார்கள் என்றார். இது தமிழுக்கு ஏற்ப்பட்ட அவமானம் வாருங்கள் இதை நான் கேட்கிறேன், என்றார் அவ்வை. உடனே இருவரும் குறளை எடுத்து கொண்டு முத்தமிழ் சங்கத்திடம் சென்றனர். அங்கு அவ்வைக்கு குறளோடு வந்ததால் வாயிற்கதவு மூடப்பட்டது தன் கவிதிறத்தல் அதை உடைத்து எறிந்து உள்ளே சென்றனர் .உடனே பாண்டியமன்னன் அங்கு வந்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு சங்கத்தை கூட்டினான்.அங்கு குறள் பாடப்பட்டது .அங்குள்ள புலவர்கள் வெண்பாவால் இருந்தால் நான்கடி வேண்டும் இது ஈரடி வெண்பா ஏற்க முடியாது என்றனர்.உடனே சினம் கொண்டு அவ்வை ,  'சங்கபலகையைகொண்டுவாருங்கள் பொற்றாமரை குளத்தில் வைப்போம், குறள் உலகத்திற்கு வேண்டுமா? வேண்டாமா?', என்று ஈசனே முடிவு கூறட்டும் என்றார். பின் குறளை ஈசன் ஏற்று கொண்டதின் அடையாளமாக சங்கபலகையின் மீது இருந்த ஓலைசுவடிகள் தங்கசுவடிகளாக மாறின பின் அனைவரும் ஏற்று கொண்டனர். பலத்தடைகளை தாண்டி குறள் வெளிவர காரணமாக இருந்தவர் அவ்வையே         
அவ்வை எழுதிய நூல்கள் 

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை 

ஔவை குறள், விநாயகர் அகவல்
இதில் விநாயகர் அகவல் என்ற நூலில்  குண்டலினியை விழிப்படைய செய்யும் முறையை மிக அழகாக கூறியிருக்கிறார் 
           

June 27, 2012

ஔவையார்



 பகவன் என்பவனுக்கும் ஆதி என்பவளுக்கும் ஏழாவது குழந்தையாக பாணரகத்தில் பிறந்ததாகவும், அங்கே பாணரோடு செய்த உடன்படிக்கையின்படி, குழந்தையை அங்கேயே விட்டுவருமாறு பகவன் கூற, பெற்ற குழந்தையைப் பிரிய விரும்பாத ஆதி அழுததாகவும், ஆதிக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு ஔவைக் குழந்தை வெண்பா கூறியதாகவும் கூறுவர். 
பின் அவர்கள் அவ்விடம் விட்டு சென்றனர் பின் மழை பெய்து, வெள்ளம் வந்தது கூடையில் இருந்த குழந்தை ஆற்றில் சென்றது .அங்குள்ள ஒரு வணிகரால் எடுத்து வளர்க்கபட்டது. இளமை பருவம் வந்ததால் மணம் முடித்து வைக்க முடிவு செய்தனர் ஆனால் அவ்வைக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை பின் விநாயகரிடம் புலம்ப அவர் பிறப்பின் நோக்கத்தை கூறி அனைவருக்கும் தாயான வயதான தோற்றத்தை கொடுத்து தமிழ் தொண்டு செய்ய மதுரை அனுப்பிவைத்தார். பின் அவர்போகும் வழியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது 
முதலில் ஔவையார்  தகடூரை அடைந்தார். அங்கு பஞ்சம் நிலவியது, இதனால் அங்குள்ள சிற்றரசனான காரி ஆசான் என்கிற காரி மன்னன் தன்னிடம் இருந்த தானியங்களை எல்லாம் மக்களுக்காக கொடுத்துகொண்டிருந்தன் இதை பார்த்த அவ்வை இது மிகபெரிய செயலல்லவா நீ வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர். பின் இவரைதான் அதியமான் விளைச்சலில் பங்கு தராததால் கைது செய்தான். இவரை விடுதலை செய்து அந்த நாட்டில் தம்  கவிதிறத்தால் மழை பொழிய செய்தார் ஔவை.
தன் நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதால் தன் நாட்டின் ஒரு பகுதியான கஞ்சமலையில் இருந்து கருநெல்லி என்ற ஒரு நெல்லிகனி கொண்டுவரப்பட்டது .இதை சாப்பிட்டால் நீண்டநாள் வாழலாம் என்று அதை அவ்வைக்கு கொடுத்தான் அதியமான். மிக அதிசிய கனியான நெல்லியை கொடுத்ததால் நீயும் வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர்.
பின் அங்கிருந்து பறம்பு நாடு வழியாக சென்றார் அங்குதான் ஒரு அதிசயத்தை கண்டார் பாரி மன்னனும் அவன் மகள்கள் இருவரும் வழியில் உள்ள ஒரு முல்லை கொடியின் மீது இறக்கம் கொண்டு தன் தேரையே அங்கு நிறுத்தி அந்த கொடிகளை எடுத்து தன் தேர்மீது படர  விட்டனர் இதை கண்ட அன்னையின் உள்ளம் அளவற்ற மகிழ்ச்சி கொண்டது .பின் பாரியை பார்த்து  வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர்.
அது சரி கடையேழு வள்ளல்கள் யார்யார் என்று தெரியுமா? அவர்களில்  மூன்று பேர் ஔவையால் வள்ளல் என்று பெயர் சூட்டபெற்றனர் 
பேகன் 
காட்டு மயில் அகவியதை கேட்டு அது குளிருக்காக நடுங்கியது என்று தன் பொன்னாடையை எடுத்து மயிலுக்கு போர்த்தி விட்டான் பேகன். சிறு உயிர்களிடத்தில் அன்பாக  கொடுத்ததால்  வள்ளல் என்று பெயர் எடுத்தான்  
பாரி 
முல்லைக்கொடிக்கு தேர்கொடுத்தான், அதனால் செடி கொடிக்கு எல்லாம் மரியாதை செலுத்தியவன் என்ற பேரு பெற்று வள்ளல் என்ற பெயர் பெற்றான் 
காரி 
நல்ல சொற்களையும் உணவு தான்யங்களையும் வழங்கியதால் வள்ளல் என்ற பெயர் பெற்றான்    
ஆய்
நீலமணியும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலருக்கு கொடுத்தான் இதனால் இவன் இப்பெயர் பெற்றான் 
அதியமான் 
தமிழ் புலவரான ஔவைக்கு நெல்லிக்கனி (கரு நெல்லி )தந்தவன் 
நள்ளி
கர்ணனை போல(இரவலருக்கு ) வேண்டியவர்க்கெல்லாம் கேட்டதை கொடுத்தவன் நள்ளி 
ஓரி 
கூத்தாடுபவர்களுக்கும்,இரவலருக்கும் பல நாடுகளையும் ,செல்வங்களையும் பரிசாக வழங்கியவன் 
இதில் இவர்களின் கொடைத்திறம் கண்டு பொறாமை கொண்ட மூவேந்தர்கள், சூழ்ச்சி செய்து 
பாரி ,ஓரி,காரி,அதியமான் போன்ற வள்ளல்களை காலநேரம் பார்த்து ஒருவர் பின் ஒருவராக கொன்றனர்  
திருக்குறள் ஔவையின் மூலம் தான், மதுரை தமிழ் சங்கத்தில் பலத்தடைகளையும்  தாண்டி வெளியிடப்பட்டது. அதன் விளக்கம் நாளைய பதிவில் காண்போம்.


June 18, 2012

வர்மக்கலை நோக்கு வர்மம்




தனசெயன் நாடி 



வர்மக்கலை தெரிய முக்கிய கலையானஆயுதம் மூலம் தாக்கவேண்டும் என்றால் களரியும்பின் நோக்கு வர்மத்திர்க்கு   யோகாசனம், பிரணாயமம் இரண்டும் தெரியவேண்டும் 


வர்ம கலை வகைகள் 
படுவர்மம்-12
தொடுவர்மம் -96
ஆக மொத்தம் 108 ஆகும் இந்த வர்மங்களில் அடிபட்டலோ அல்லது அழுத்தம் கொடுத்தலோ அந்த பகுதி செயல் இழப்போ அல்லது வலியோ ஏற்படும் இது அமைந்துள்ள இடங்கள் 
கை, கால் -44
தலை -23
நெஞ்சு முதுகு-33
மூலம் -8
இதற்கெல்லாம் தலைவன் தனஞ்செயன் என்கிற வர்மம் 
வர்மம் சரிசெய்யும் முறை :
எந்த வர்மத்தில் அடிபட்டாலும் முதலில் கால்களை மடக்கி பத்மாசனமோ அல்லது சம்மணம் போட்டு உட்காரவைத்து தலையில் தனஞ்செயன் வர்மத்தில் மூன்றுமுறையும் முதுகில் மூன்றுமுறையும்  தட்ட வேண்டும். பின் சுக்கை வாயில் போட்டு அடிபட்டவரின் வாயில், காதில்,மூக்கு துவாரத்தில் ஊத வேண்டும் பின் அரிசி கஞ்சி சாதம் தான் மூன்று வேலை தரவேண்டும் அடிபட்டயிடத்தில் வீக்கம் அதிகமாக இருப்பின் நல்லெண்ணெய் விட்டு தடவி விடவேண்டும்.   
இந்த படு வர்மம் தொடுவர்மம் பற்றி பலபேர் கூரியுள்ள்ளனர்.
நோக்கு வர்மம் :
நோக்கு வர்மம் என்பது மூன்றுவகை படும்  
  1. தட்டு வர்மம் 
  2.சூண்டு வர்மம் 
  3.மெய் தீண்டா கால வர்மம்  

தட்டு வர்மம் 
கண்களால் பார்த்து எந்த பகுதியை செயலிழக்க வைக்கவேண்டுமோ அந்த பகுதியில்  பார்வையை செலுத்தி அழுத்தம் கொடுப்பது அல்லது  
தட்டியவுடன் அந்த நபர் மயங்கி கீழே விழுந்து விடுவார் . அவரை மேலே கூறிய முறையுடன் செய்தால் பிழைக்க வைக்கமுடியும் 
        உதாரணம் : 
          "கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படகூடாது " இதை பலபேர் கண் திருஷ்டி என்று தவறாக கூறுகிறார்கள்   
சூண்டுவர்மம் 
கண்களால் பார்த்து எந்த பகுதியை செயலிழக்க வைக்கவேண்டுமோ அந்த பகுதியில்  பார்வையை செலுத்தி சீண்டிவிடுதல் 
           உதாரணம் :
                   ஹர்ட் அட்டாக் , இது எப்படி வேலை செய்யும் என்று எளிமையாக சொன்னால் நமது கை முட்டியில் நுனி பகுதியை கையால் சீண்டி விட்டால் கரண்ட் ஷாக் அடித்தது போல் இருக்குமல்லவா அதுதான் வர்ம பகுதியில் கண்ணால் செய்வது 
மெய் தீண்டா கால வர்மம் 
            இருப்பதிலேயே இதுதான் மிக ஆபத்தான வர்மம் இந்த வர்மத்தில் இரண்டு பிரிவு உள்ளது ஒன்று மூலிகையுடன் செய்வது மற்றொன்று பிராண சக்தியின் மூலம் செய்வது. இதன் மூலம் யாரையும் எளிதில் வசியம் செய்து  , எதிராளியின் பிராணனை நிறுத்தலாம் இந்த மூலிகை மூலம் செய்வது மிக சுலபம் ஆனால் மூலிகை கிடைப்பது மிக கடினம் அந்த மூலிகை இரண்டு வகைப்படும் அது என்ன வென்று எனது குருவான மகான்  கோரக்கர் ஆசி கூர்ந்தால் உங்களுக்கு கூறுகிறேன் . ஒன்று மலைகளில் கிடைப்பது மற்றொன்று காடுகளில் கிடைப்பது .  பிராண சக்தியின் மூலம் செய்வதை 12 ஆண்டுகள் மாணவராக இருந்தால் மட்டுமே எந்த ஒரு குருவும் சொல்லித்தருவார்கள் 
         உதாரணம் :
              இந்த கலைக்கு உதாரணம் பல பேர் உள்ளனர் அதில் எனக்கு தெரிந்த சிலர் : 
வர்மக்கலை ஆசான் 
உயர்திரு ராஜேந்திரன் - மதுரை மாவட்டம் (zee tamil tv)
உயர்திரு பிரகாசம் குருக்கள் - திருவனந்தபுரம் (கேரளா )(vijay tv )
உயர்திரு டிராகன் டி ஜெயராஜ் -கோவை மாவட்டம் 
                                 மேற்கூறிய இருவர் தொலைக்காட்சியின் முலம் தெரிந்தவர்கள்

அடுத்த பதிவில் ஔவையார் பற்றி பல அறிய தகவல் காத்துகொண்டுயிருக்கிறது