June 6, 2012

வர்மக்கலை

                                         

வர்மக்கலை ஓர் அறிமுகம் 


வர்மக்கலை பற்றி பலபேர் கூறுகிறார்கள்  நான் என்ன புதிதாக சொல்ல வேண்டும் என்று யோசிக்கும்போது இந்த உலகில் எதுவுமே புதிதில்லை பழையதை புது பெயருடன்  புகுத்துகின்றனர். அப்படி தான் நாமும் சொல்ல வேண்டும் இது கட்டாயம் அல்ல காலத்தின் நோக்கம்.  

வர்மக்கலை அப்படித்தான் பல பெயர்களில் உலவுகிறது குங்க்பூ,கராத்தே,அகிடோ,தாய்சி,சிலாத்,டிம் மாக்,கர் மகா, என பல பெயர்கள் ஆனால் அடிப்படை வர்மக்கலை தான் 

இதை முதன் முதலில் எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் இறைவனிடம் தான், ஆம் வர்மத்தை பற்றி பார்வதியிடம் சிவன் தான் முதலில் கூறினார் .பின் பார்வதி தேவி அதை நந்திதேவரிடம் கூறுகிறார், பின் அது அங்கிருந்து அகத்தியரிடம் போய் சேருகிறது. வர்மக்கலை அங்கு தான் பகுத்தறியப்பட்டு அகத்தியர் அனைவருக்கும் கூறுகிறார் அவர் சாதாரணமாக கூறவில்லை உடலைவைத்து வர்மம் உள்ள இடத்தையும் அதன் முடிச்சையும் விளக்கமாக கூறுகிறார் யாரிடம், அந்த காலத்து மெடிக்கல் ஸ்டுடண்ட் போகர்,ராமதேவர்,புலிப்பாணி,தன்வந்திரி,பதஞ்சலி,குதம்பை சித்தர்,புலத்தியர்,தேரையர்   இதில் மிகவும்வர்மத்தை அற்புதமாக கற்று தேர்ந்தவர்கள்  போகர் ,ராமதேவர் ,புலிப்பாணி,தன்வந்திரி,தேரையர்.   

இவர்கள்  கற்றதை தனக்கென ஒரு பெயர் வைத்து கொண்டார்கள் ஆனால் வர்ம புள்ளி ஒன்றுதான் . அவர்கள் தனித்தனியாக நூல்கள் இயற்றினார்கள்

அவைகளில் எனக்கு தெரிந்த  சில நூல்கள்  : 



அகத்தியர் -வர்ம சூத்திரம் ,வர்ம திறவுகோல் ,ஒடிவு முறிவு சாரி,வாகட நிதானம்  

போகர் - வர்ம சூத்திரம் (மெய் தீண்ட காலம் )

பதஞ்சலி -வர்ம களஞ்சியம் 
குதம்பை சித்தர் -வர்ம பீரங்கி 
தன்வந்திரி சித்தர் - வர்ம சஞ்சீவி (மெய் தீண்ட காலம் )
புலிப்பாணி சித்தர் -வர்ம கண்ணாடி    

வர்ம சூச்சா சூச்சமம் ,வர்ம சூடி ,வர்ம தண்டூசி,வர்ம சூடி ,வில் விசை உட்சூத்திரம் ,லாட சூத்திரம் 300 இவைகள் யார் எழுதியது என்று தெரியாது ஆனால் வர்ம ஆராய்ச்சியில் நான் தேடியபோது இரண்டுயிரண்டு பாடல் வரிகள் கிடைத்தன. இதில் எனக்கு தெரிந்து நமக்கு கைக்கு கிடைக்க கூடிய நூல்கள்
    அகத்தியர் -ஒடிவு முறிவு சாரி,போகர் - வர்ம சூத்திரம் கடைகளில் கிடைகின்றன 
இக்கலையில்மூன்று பிரிவுகள் உள்ளன அவை 
படுவர்மம் 
தொடு வர்மம் 
நோக்கு வர்மம்
இந்த நோக்குவர்மத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன  
  1. தட்டு வர்மம் 
  2.சூண்டு வர்மம் 
  3.மெய் தீண்டா கால வர்மம்  
இதை பின்வரும் பதிவுகளில் காண்போம் .

June 1, 2012

மச்ச சாஸ்திரம்

மச்ச சாஸ்திரம் 



மச்ச சாஸ்திரம் என்பது உடம்பில் உள்ள மச்சங்களை வைத்து அதற்கு தகுந்தார் போல் பலன் கூறுவது .மச்ச சாஸ்திரம் என்பது அங்க லட்சண சாஸ்திரம் என்றும் அழைக்கபடுகிறது 

வாழ வந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பதும் பெண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.

அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் . பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள்.


ஆண்களுக்கான மச்ச பலன்கள்:

புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் – தனயோகம்
வலது புருவம் – மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்
வலது கண் – நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி
மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்
உதடுகளுக்கு மேல் – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் – அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

பெண்களுக்கான மச்ச பலனகள்:

நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்
நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை – பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்
வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் – சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை

கோரக்கர்

   




மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும்? உடம்பு வளர உணவு வேண்டுமே..? பசியும் தாகமும் உடம்போடு ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ முடியும்தான்... மச்சமுனியோ, அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று முடிவு செய்து விட்டார். இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும் என்று தோன்றுவதற்குப் பின்னால் ஒரு கணக்கு உள்ளது. அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது, பிட்சையிடும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு கணக்கு உள்ளது. நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பை, கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே கருதுவார்கள். ஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே பார்ப்பார்கள். மச்சமுனி பிச்சை கேட்டு வரும்போது, ஒரு மாதரசி கூட அப்படித்தான் பார்த்தாள். அவளுக்கோ பிள்ளைப் பேறு இல்லை. அவள் ஜாதகம் அப்படி... அதனால் அவள் முகத்தில் சதா சர்வ காலமும் ஒரு துக்கம். இந்த நிலையில்தான் மச்சமுனி அவள் எதிரில் நின்றபடி பிச்சை கேட்டார். அவளும் அலுப்புடனேயே பிட்சை இட்டாள். பிட்சை இட்டால் காலில் விழுந்து வணங்க வேண்டும். வணங்கும்போது சித்த சன்யாசிகள் ஆசிர்வதிப்பார்கள். அவள் மனம் துயரத்தில் இருந்ததால், அவளுக்கு வணங்கத் தோன்றவில்லை. பேசாமல் திரும்பி நடந்தாள். ‘‘நில் தாயே..’’ _ தடுத்தார், மச்சமுனி. அவளும் திரும்பினாள். ‘‘பிட்சையிட்ட நீ வணங்க வேண்டாமா?’’ _ மச்சமுனிதான் கேட்டார். ‘‘நான் வணங்க நீர் என்ன தெய்வமா?’’ _ அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப் பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி விட்டது. ‘‘தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..’’ என்றார். ‘‘அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ?’’_அவளிடம் இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது. உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத் தந்தார் மச்சமுனி. ‘‘இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு உண்டாகும்...’’ ‘‘இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்?’’ ‘‘சாம்பல் தானம்மா... இருந்தாலும் ‘இதை நீ உண்டால் பிள்ளைபேறு பெற்றிடுவாய்.. ஒருநாள், நான் அந்த பாலகனைக் காண நிச்சயம் திரும்பவும் வருவேன்’’ என்று கூறியபடியே பிட்சைப் பொருளுடன் திரும்பி நடந்தார். பார்த்துக் கொண்டேயிருந்தாள், பக்கத்து வீட்டுக்காரி, ஓடி வந்தாள். ‘‘கையில் என்ன?’’ கேட்டாள். ‘‘விபூதி..’’ கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள் அந்தப் பெண். ‘‘இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக் கூடும். திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும். இதை வீசி எறி..’’ _அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில் எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப் போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள். அவள் விதி அந்த விபூதியின் வழியை மாற்றி விட்டது. கிட்டுவதே கிட்டும், ஒட்டுவதே ஒட்டும் என்று ஆன்றோர்களும் காரணமில்லாமலா கூறிச் சென்றனர்.

 சில காலம் சென்றது. மச்சமுனி, முன் சொன்னது போல திரும்பி வந்தார். அந்தப் பெண்ணிடம், ‘‘விபூதியால் பாலகன் பிறந்தானா, எங்கே அவன்?’’ என்று கேட்க, அவளிடம் தடுமாற்றம். திக்கினாள், திணறினாள். ‘‘உங்களை மாயாவியாக நான் எண்ணி விட்டதால், கோவகத்து அடுப்பில் அந்த விபூதியை வீசி விட்டேன். அதுவும் சாம்பலோடு சாம்பலாகி விட்டது..’’ என்றாள். உடனே அந்த அடுப்பின் முன் சென்று நின்றவர் மனம் வருந்தினார். ‘‘தாங்கள் கடவுள் என்றால், அந்த அடுப்புச் சாம்பலில் இருந்து கூட ஒரு உயிரை உருவாக்க இயலுமே’’_என்று சந்தேகத்தையே முன் நிறுத்தினாள். மச்சமுனி அதைக்கேட்டு சினமுற்றார். சித்தன் வாக்கு பொய்க்கக் கூடாது. எந்த விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை பிறக்கும். உன் கருப்பைக்குள் வளரத்தான் உன் கர்மம் இடம் தரவில்லை. ஆனால், கோசாலையாகிய இந்த கோவகம் அதற்கு இடமளித்துவிட்டது. நான் சிவசித்தன் என்பது சத்யமானால், இந்த கோவகம் ஒரு கோவகனைத்தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல, கோரகனும் கூட. கோவாகிய பசுவுக்கு உள்ள இரக்கம் இவனிடமும் இருக்கப் போவது சத்யம். அதனால், இவன் கோ இரக்கனும்கூட. முக்கண்ணன் அருளால் நான் மச்சத்தில் இருந்து உதித்து மச்சமுனியானது போல, என்னுள்ளில் இருக்கும் அந்த முக்கண்ணனே மூன்று நாமங்களை இவனுக்குப் பிறக்கும் முன்பே அளித்துவிட்டான். அந்த நாமங்களைக் கூறி அழைக்கிறேன்... கோவகனே... கோரகனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா...’’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்திட, கோரக்கரும் அந்த சாம்பலுக்குள் இருந்து ஒரு பாலகனாய் வெளிப்பட்டார். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள், ஒரு கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த ஊர், வடபொய்கை நல்லூர்